“எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை....
அன்பான சகோதரர் சகோதரிகளே,
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்த வார்த்தைகளை மையமாக வைத்து நம்மை அழைக்கின்றார் ... அவ்வார்த்தைகள்
“எருசலேமே! எழு! ஒளிவீசு!”
இது வெறும் ஒரு அழகான கவிதைச் சொல் அல்ல.
இது –
மனிதகுலத்துக்கு
மூடிக்கிடக்கும் நம்பிக்கைகளுக்கு
இருளில் தவிக்கும் உலகத்துக்கு
இறைவன் விடுக்கும் அழைப்பு.
இன்றைக்கு “எழு” என்ற வார்த்தைகளை நினைவு கூறுகிறபோது என் நினைவுக்கு வருவதெல்லாம் அதிகாலையில்
அலாரம் அடித்ததும்,
“5 நிமிஷம்… 5 நிமிஷம்…” என்று சொல்லி,
அரை மணி நேரம் கழித்து எழுவது மட்டுமே...,
ஆனால் இறைவன் சொல்கிற “எழு” என்பது –
உடலை மட்டும் அல்ல,
மனசையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எழுப்புவது.
இன்று தாய் திரு அவை மூன்று அரசர்களின் பெருவிழாவை கொண்டாடுகிறது.
விண்மீன் – Google Map அல்ல, God’s Map
நற்செய்தியில், ஞானிகள் ஒரு விண்மீனைப் பார்த்து பயணம் செய்கிறார்கள்.
இன்றைய காலத்தில் நம்மால் ஒரு தெருவுக்கே போக முடியாது,
Google Map இல்லாம!
ஆனால் ஞானிகளை வழிநடத்திய விண்மீன் –
- தவறாக வழி காட்டவில்லை
- அவர்களை ஏரோதிடம் நிறுத்தியும் விட்டது (சோதனை!)
- ஆனாலும் இறுதியில் இயேசுவிடம் கொண்டு சென்றது.
- விசுவாசப் பயணத்தில் சோதனைகள் வரும்; ஆனால் இறைவன் ஒளி ஒருபோதும் ஏமாற்றாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள் :
ஏரோது:
- அரசன்
- அதிகாரம் உண்டு
- மறைநூல் அறிவு அருகிலே கிடைக்கிறது
ஆனால்…
👉 அவனுக்கு இதயம் திறக்கவில்லை.
ஞானிகள்:
- வெளிநாட்டினர்
- வேறு கலாச்சாரம்
- வேறு மத பின்னணி
ஆனால்…
👉 தேடல் இருந்தது. பணிவு இருந்தது. பயணம் செய்யத் துணிந்தார்கள்.
இங்கே பவுல் சொல்கிற மறைபொருள் நினைவுக்கு வருகிறது:
“பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர்கள்.”
👉 இயேசு ஒரு இனத்துக்காக அல்ல,
உலகமெங்கும் உள்ள அனைவருக்காக.
காணிக்கை – பொருளல்ல, மனம்
ஞானிகள் கொண்டு வந்தது:
- பொன்
- சாம்பிராணி
- வெள்ளைப் போளம்
இன்றைக்கு நாம் என்ன கொண்டு வருகிறோம்?
😄 சில நேரங்களில்:
- திருப்பலிக்கு நேரம் இல்லை
- ஜெபத்திற்கு மனசில்லை
- சேவைக்கு ஆர்வமில்லை
ஆனால் இயேசு கேட்பது:
- உன் நேரம்
- உன் மன மாற்றம்
- உன் கருணை
- உன் மன்னிப்பு
“எழு! ஒளிவீசு!”
- உன் குடும்பத்தில்
- உன் பணியிடத்தில்
- உன் சமூகத்தில்
கிறிஸ்துவின் ஒளியை மறைக்காதே – பகிர்!
அப்பொழுது,
“பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்…”
ஆமென் 🙏