வெள்ளி, 31 ஜூலை, 2020

கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...? சிந்திப்போம்....

கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...?

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி பகுதியில் திருமுழுக்கு யோவானின் இறப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது. திருமுழுக்கு யோவானை பற்றி நாம் அனைவரும் அதிகம் அறிந்திருப்போம். பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே இருந்த ஒரு இறைவாக்கினர். உண்மையை எடுத்துரைத்தவர் . மக்களை மனமாற அழைப்பு விடுத்தவர். ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு முன் தயாரிப்பு செய்தவர் என பலவாறு இவரை பற்றி பல செய்திகளை பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம் பெறக்கூடிய ஏரோது அரசனின் செயல்பாடு குறித்து என் சிந்தனைகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய ஏரோது பலரும் கூடியிருக்கக்கூடிய அரண்மனையில் கேட்பதை தருவதாக வாக்கு கொடுக்கிறான். அதன்விளைவாக திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து தருமாறு கேட்கக்கூடிய பெண்ணின் வேண்டுதலுக்கு இணங்கி திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்துக் கொடுக்கும் நிகழ்வை நாம் நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிகிறோம்.

கொடுத்த வாக்கை ஒருவன் காப்பாற்ற வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் அதற்காக அடுத்தவரின் உயிரைப் பறிப்பதையும்,  தீயச்செயல்களை செய்வதையும் எப்படி ஏற்க இயலும்.

இந்து மதத்திலுள்ள இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில்  பீஷ்மர் என அழைக்கப்படும்    தெய்வவிரதன், தன் தந்தையின் துயரத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக அஸ்த்தினாபுர அரியணையில் அமர போவதில்லை என தீர்மானம் எடுக்கிறார்.  தீர்மானம் எடுத்ததன் விளைவாக அந்த அஸ்தினாபுர அரண்மனையில் அமர்ந்து பலவிதமான  இன்னல்களைப் பாண்டவருக்கு வழங்க கூடியவர்களின் பக்கத்தில் துணை நிற்கக் கூடிய மிகப்பெரிய வீரம் பொருந்திய மனிதராக காலம் முழுவதும் இருக்கிறார். இறுதியாக மகாபாரதப்போரில் பீஷ்மரின் இந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளாத தன்மையை குற்றமென இந்த மகாபாரதத்தின் கதாநாயகனான கிருஷ்ணன் எடுத்துரைக்கிறார்.

இதுபோலவே இன்று விவிலியத்தில் இடம்பெறக்கூடிய ஏரோது அரசன் அந்த சலோமி என்ற பெண்மணி கேட்கக்கூடிய பரிசினால் ஒரு நீதிமானின்  உயிர் போகும் என்பதை அறிந்தவராய் இருந்தும், கொடுத்த வாக்கிற்காக அடுத்த உயிரை துச்சமென கருதிய வண்ணம் கொடுத்த வாக்கை அங்கு நிறைவேற்றுகிறார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது தவறில்லை ஆனால் கொடுத்த வாக்கினால் ஒரு அநீதி நடைபெறப் போகிறது என அறியும் பொழுது அதனை மாற்றிக் கொள்வது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை உணர்ந்து ஏரோது அரசன் செயல்பட்டிருந்தால்  திருமுழுக்கு யோவானின் கொலைத் தடுக்கப்பட்டிருக்கும். அதுபோலவே மகாபாரதத்தில் அநீதியானது பாண்டவர்களுக்கு இழைக்கப்படாமல் இருந்திருக்கும்.

நாம் வாழக்கூடிய இந்த உலகில் கொடுத்த வாக்கினால் அநீதி நிகழும் பொழுது கொடுத்த வாக்கை மறு பரிசீலனை செய்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.   இந்த உண்மையை உணர்ந்தவர்களாக நாம் கொடுக்கக்கூடிய வாக்கினால் உண்டாக கூடிய நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து ஆண்டவர் இயேசுவின் வழியில் உண்மையை நோக்கி, நீதியை நோக்கி நமது சொல்லையும், செயலையும் அமைத்துக் கொள்ள முயலுவோம் ...


கொடுத்த வாக்கா...? நீதீயான செயலா...?  சிந்திப்போம்....

வியாழன், 30 ஜூலை, 2020

"நம் அருகிலேயே இருப்பவர்களின் அருமையை உணர்வோம்..."

"நம் அருகிலேயே இருப்பவர்களின் அருமையை உணர்வோம்..."


அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

"இறைவாக்கினர்கள் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை..." என்பதை இயேசு இன்று நற்செய்தி வாசகங்கள் வழியாக குறிப்பிடுகிறார்.

அன்று இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கண்டு, அவருடைய ஞானத்தைக் கண்டு, அவருடைய சொல்லையும், செயலையும் கண்டு பல உள்ளங்கள் அவரால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அவரது சொந்த ஊரை சார்ந்தவர்கள் இவர் யாரென்று நமக்குத் தெரியாதா? இவருடைய தந்தை யோசேப்பு தானே... இவர்தாய் மரியா தானே... இவருடைய சகோதரர்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தவர்கள் தானே .... என்றெல்லாம் கூறி அவரை தங்களை விட உயர்ந்தவராகவும், ஞானமிக்கவனாகவும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 

இயேசுவுடைய சொல்லும், செயலும் பல உள்ளங்களுக்கு ஆறுதல் தந்த போதும், அவரது சொல்லையும், செயலையும் கண்டு தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அவரது அருகிலிருந்தவர்கள் அதாவது அவரது ஊரார் முன் வரவில்லை ...

இயேசுவுக்கு நிகழ்ந்த இந்த ஒரு நிகழ்வு நமது வாழ்க்கையிலும் பல விதமான நிகழ்வுகள்  வழியாக நாளுக்குநாள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
நம்முடைய குடும்பங்களில் நமது குழந்தைகள் மிகவும் சிறந்து விளங்குவார்கள் ஆனால் அவர்களை காட்டிலும் மற்றவர்களை நாம் பெரிதாக பேசுவோம். நமது குடும்பத்தில் உள்ள நமது உறவினர்களுடைய செயல்பாடுகளையோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் நல்ல செயல்களையோ நாம் பாராட்ட தவறுகிறோம்.  ஆனால் நாம் முன்பின் அறியாதவர்களுடைய செயல்பாடுகளை வெகுவாக பாராட்டுகிறோம்.

எதுவும் எளிதில் கிடைக்கும் பொழுது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. அதுபோலவே எளிதில் நம் அருகில் இருப்பவர்களை நாம் எப்போதும் கண்டுகொள்வதில்லை, எப்போது நாம் அவர்களை விட்டுப் தூரத்தில் இருக்கிறோமோ அப்போதுதான் அவர்களைப்பற்றிய மகத்துவம் நமக்குப் புரிகிறது.

வாழ்க்கையில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்படும் பொழுது அவனை எனக்குத் தெரிந்தவன் எனக் கூறிக்கொள்வதில் அனைவரும் தயக்கம் காட்டுகின்றனர். அதே மனிதன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியையும், உச்சத்தையும் அடையும் பொழுது, இவர் எனக்கு தெரிந்தவர்... எங்கள் ஊரைச் சார்ந்தவர்... என் அண்டை வீட்டார்... என்றெல்லாம் கூறி பெருமையைத் தேடிக் கொள்கிறோம். இந்நிலையிலிருந்து நாம் மாற்றம் பெறவே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார் ...


இன்று கொரனோ தொற்றுநோய் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கக்கூடிய நாம் நமது குடும்பத்தில் உள்ளவர்களின் திறமைகளையும், உணர்வுகளையும், அவர்களுடைய தனித்துவத்தையும் புரிந்து கொள்ள முயல்வோம். அவைகளை எண்ணிப் பெருமை படுவோம், அவர்களை பாராட்டுவோம், ஊக்கமூட்டுவோம். 

"இறைவாக்கினர்கள் சொந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை..." என்ற இயேசுவின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, இன்றைய நாளில் அதனை சரிசெய்து கொண்டு, " அருகாமையில் இருப்பவர்களை அன்பு செய்யக்கூடிய... பாராட்டக்கூடிய... மதிக்கக்கூடிய... நல்ல நபர்களாக..." 
ஆண்டவர் இயேசுவை பின் தொடரக் கூடிய இயேசுவின் சீடராக அவரை பின் தொடர்வோம். 


"நம் அருகிலேயே இருப்பவர்களின் அருமையை உணர்ந்தவர்களாக..."

புதன், 29 ஜூலை, 2020

"நல்லதை உள்ளத்திலும் தீயதை வெளியிலும் எரிவோம்..."

"நல்லதை உள்ளத்திலும் தீயதை  வெளியிலும் எரிவோம்..." 

அன்புக்குரியவர்களே "நல்லதை  கூடையில் வைப்பர் கெட்டவற்றை வெளியே எறிவர்.." என்ற இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வலை உவமை மூலமாக நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறார்.

கடலில் வீசப்பட்ட வலையானது பலவிதமான மீன்களை வாரி வருகிறது. அவற்றில் நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை வெளியே எறிவார்கள் என்று இயேசு கூறக்கூடிய வார்த்தைகளை நமது வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். 

 கடலில் வீசப்பட்ட வலையில்  நல்ல மீன்களும், கெட்ட மீன்களும் இருப்பது போல ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நன்மையும், தீமையும் இருக்கின்றது. ஒரு தீச்செயலை செய்யும் போது நமது மனமானது அது தவறு என்பதை சுட்டிக்காட்டும். 
ஆனால் பல நேரங்களில் மனித மனங்கள் தவறு எனத் தெரிந்தும், அற்ப சுகங்களுக்காக தீயதை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, அதை தங்கள் செயலில் வெளிப்படுத்துகின்றனர்.  இன்றைய நாளில் தீயதை விலக்கி விட்டு நல்லதை எடுத்துக்கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். 
ஆண்டவர் இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாக "நல்லதை நமக்குள் வைத்துக்கொண்டு, தீயதை தூக்கி எறிந்துவிட்டு" ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை மண்ணுலகில் உருவாக்கிட முயல்வோம்....

 "நல்லதை உள்ளத்திலும் தீயதை  வெளியிலும் எரிவோம்..." 

செவ்வாய், 28 ஜூலை, 2020

எதைத் தேடி செல்கிறோம்...?

எதைத் தேடி செல்கிறோம்...?


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"வணிகர் ஒருவர் நல்முத்துக்கள் தேடிச் செல்கிறார்..." என்று இயேசு கூறக்கூடிய முத்து உவமையின் அடிப்படையில் நாம் எதைத் தேடி செல்ல வேண்டும்? என்று  சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

அனுதினமும் பலவிதமான தேடல்களுடன் நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் உண்மையில் எதை தேடிச் செல்கிறோம்? என்ற கேள்வியை இன்று நமக்குள் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகில் பலரும் பலவற்றை தேடிச் செல்கிறோம். சிலர் அன்பை தேடி செல்கின்றனர், சிலர் பணத்தை தேடி செல்கின்றனர், சிலர் நல்ல மனிதர்களை தேடிச் செல்கின்றனர், இன்னும் சிலர் எதை தேடி செல்கிறோம் என்பது கூட தெரியாமல் தேடிக் கொண்டே இருக்கின்றனர். 

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்... என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு  ஏற்ப ஏதோ ஒரு தேடல் நம் வாழ்வை நகர்த்துகிறது என்பது மட்டும் உண்மை. அத்தேடல் பணமாகவோ, பொருளாகவோ, உறவாகவோ என ஒவ்வொருவரை பொருத்தும் அது அமைகிறது. மொத்தத்தில் வாழ்க்கையில் தேடல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.


நிலத்தில் புதையலை கண்ட ஒருவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்ள முயன்றான். அதுபோலவே நல்ல முத்தை தேடிச்சென்ற ஒருவன் நல்ல முத்தை கண்டதும் தன்னிடமிருந்த எல்லாம் விற்று, அந்த முத்தை தனதாக்கிக் கொள்ள முயன்றான். அதுபோலவே நம்மிடமுள்ள அனைத்தையும் இழந்து இறையரசை தமதாக்கிக் கொள்ள வேண்டுமென  இயேசு கூறுகிறார்.

இன்று  நாம் தேடக் கூடியது  எதுவாக இருந்தாலும், அது அனைவருக்கும்   நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.  அகிலத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை தரக்கூடியதையே நாம் நாடித் தேடி செல்ல வேண்டும். அதை அடைவதற்காக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் நாம் இழக்க தயாராக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடியவற்றை வெளி உலகில் தேடுவதை விட நமக்குள் நாம் தேடவேண்டும்.  நமக்குள் புதைந்து கிடைக்கக்கூடிய மனிதநேயத்தை நாம் இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

சமீபத்தில் படித்த சில வரிகள் 
"தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த இனத்தைச் சார்ந்த எல்லா உயிர்களும் அதற்காகப் போராடுகின்றன, ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன ..."

இவ்வரிகள் முழுமையாக உண்மையாக இல்லாது இருக்கலாம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய உலகில் இந்த மனநிலையோடு மனிதர்கள்  நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சகமனிதனின் துன்பத்தையும் நமது துன்பமாக எண்ணி செயல்படும்போது மட்டுமே இச்சமூகத்தில் மனிதம் மலர முடியும். அதற்கு அவசியமானது மனிதநேயம்.

மனித நேயம் என்பது தேடி கண்டுபிடிக்க முடியாத ஒன்று அல்ல.  நாம் துன்புறும் போது நமக்கு உதவ ஒருவர் வரமாட்டாரா? என்று ஏங்கக்கூடிய நமக்குள் அடுத்தவர்களும் அப்படித்தானே ஏங்குவார்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படும் பொழுது மனித நேயம் வெளிப்படும்.

நமக்குள் மறைந்திருக்கக் கூடிய மனிதநேயத்தை தேடி கண்டு உணர்வோம். அதை அடைவதற்காக நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் இழக்கத் தயாராவோம்.
நமக்காக இன்னுயிரையும் இழந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக அவரைப்போலவே நம்மிடம் இருப்பதை எல்லாம் இழந்து மனிதநேயத்தை நமதாக்கிக்கொண்டு அடுத்தவரின் துயரையும் நம் துயர் எனக்கருதி, அடுத்தவர் துயர் துடைக்க ஆண்டவர் இயேசுவின் வழியில் துணை நிற்போம் ...

"மனிதநேயத்தை தேடியவர்களாய்..."

திங்கள், 27 ஜூலை, 2020

கதிரவனைப் போல் ஒளி வீசுட..."


கதிரவனைப் போல் ஒளி வீசுட..." 

அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய "நேர்மையாளர்கள் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவார்கள்..." என்ற வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நேர்மையாளராக வாழ்ந்தார். நேரியவற்றையே செய்துவந்தார்.
அதன் விளைவு குற்றம் ஏதும் செய்யாதவர் குற்றவாளியாக தேடப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த இயேசுவைப் போலவே உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதர்களும் வாழ வேண்டும் என விரும்புகிறோம் ஆனால் இயேசுவுக்கு நடந்த கொடுமைகளும் வேதனைகளும் துன்பகரமான மரணமும் நமக்கும் வாய்த்த விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நம்மில் பலர் நேர்மை தவறி நடக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.

ஆனால் இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கக் கூடிய பல பத்திரிக்கையாளர்கள் பல சமூகப் போராளிகள் நேர்மையாக நடந்து  நேர்மையை தன் சொல்லிலும் செயலிலும் காட்டியுள்ளனர்.

உதாரணமாக கலெக்டர் சகாயம் அவர்களை கூறலாம்.
நீதி வழுவாது தீர்ப்பளித்த மைக்கேல் டி குன்கா அவர்களை குறிப்பிடலாம்.
உண்மையை பேசுவதாலும் எழுதுவதாலும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் அவர்களை குறிப்பிடலாம்.
 இவர்களைப் போல இன்னும் ஏராளமானோர் இன்றும் நேர்மையாக நேர்மையின் வழியில் செயல்படுகின்றனர் அதன் விளைவாக அவர்கள் சந்திக்கும் துன்பங்கள் எண்ணிலடங்கா இருந்த போதும் மனம் தளராது இயேசுவைப் போலவே அப் பணியை செய்து வருகின்றனர். இவர்களைப் போல இவர்களோடு நாமும் நேர்மை தவறாது சொல்லிலும் செயலிலும்  நடக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

ஆனால் தன் குடும்பம் தன் உறவினர்கள்  என்ற அச்ச உணர்வு காரணமாக இன்று நேர்மையாய் நடந்துகொள்ளாமல் நேர்மை தவறக்  கூடியவர்களாக நாம் நாளுக்கு நாள் மாறி வருகிறோம்.இந்நிலையில் இருந்து மாற்றம் பெற்று ஒவ்வொரு நாளும் நேர்மையாக நேர்மை தனத்தோடு இச்சமூகத்தில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று -  பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் 
கூற்றுக் கிரையானப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போல - நான் 
வீழ்வே னென்று நினைத்தாயோ ?..." என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இதுநாள்வரை நாம் இருந்த நிலைதனை மாற்றி இனிவரும் காலங்களில் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக அவரைப் போல நேர்மையாகச் செயல்பட நமது சொல்லிலும் செயலிலும் நேர்மை தனத்தோடு வாழ புதிய மனிதர்களாக அவரை பின் தொடர்வோம். அப்போது நாம் "நேர்மையாளர்கள் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவார்கள்..."  என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப பல நல்ல உள்ளங்கள் நேர்மையை பின்பற்றவும் நேர்மையோடும் செயல்படவும் கதிரவனைப் போல ஒளி வீச கூடியவர்களாக நாம் திகழ்வோம். 


"கதிரவனைப் போல் ஒளி வீசி..."

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்... (ஜூலை 27)


"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்..." 


அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடுகு மற்றும் புளிப்பு மாவு உவமைகளை குறிப்பிடுகிறார்...இந்த கடுகு என்பதும், புளிப்பு மாவு என்பதும் அளவில் சிறியது தான். ஆனால் அவை மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. 
உதாரணமாக: சிறிய கடுகு விதை மிகப் பெரிய மரமாக மாறி பல பறவைகள் வந்து அமருவதற்குரிய இடமாக மாறுகிறது. அதுபோலவே, சிறிதளவு புளிப்பு மாவு பாத்திரத்தில் உள்ள அனைத்து மாவையும் புளிப்பேரச் செய்கிறது.

இந்தக் கடுகு விதையையும், புளிப்பு மாவையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.  நாம் பல நேரங்களில் நல்ல செயல்களை செய்ய வேண்டும் என முயலும் போதும்,  நம்மால் இயன்ற  சிறிய உதவிகளை அடுத்தவருக்கு செய்ய வேண்டும் என எண்ணும் போதும், நம்மில் பலர் கூறக் கூடியது என்னால் இயலவில்லை. என்னிடத்தில் பெரிதளவு பணம் இல்லை, என்னிடத்தில் போதுமான வசதி இல்லை. எனவே என்னால் நற்செயல் செய்ய இயலவில்லை, என்னால் அடுத்தவருக்கு உதவும் முடியவில்லை எனக் கூறுகிறோம்.

ஆனால் உண்மையில் நல்ல செயல் செய்வதற்கும், பிறருக்கு உதவுவதற்கும் பெரிதளவு பணம் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய கடுகை போல இச்சமூகத்தில் நாம் செய்யக்கூடிய சிறு உதவி பலருக்கு மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது. சிறிதளவு புளிப்பு மாவு எப்படி ஒரு பாத்திரத்தில் உள்ள அனைத்து மாவையும் புளிப்பேற்றுகிறதே,  அதுபோல நாம் செய்யக்கூடிய சிறு செயல் மிகப்பெரிய மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்குகிறது...

எனவே நற்செயல் செய்வதற்கும், நம்மாலான சிறிய உதவிகளை அடுத்தவருக்கு செய்வதற்கும், நம்மிடம் பெரிதளவு வசதி வாய்ப்புகள் இல்லை என எண்ணுவதை விட, நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்கு பகிரும் பொழுது நாம் செய்யக்கூடிய சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன ....

ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றக்கூடிய நாம், மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க விட்டாலும், மிகச்சிறிய செயல்கள் மூலம் பல உள்ளங்களை ஆண்டவர் இயேசுவிடம்  திருப்புவதற்கு நல்ல மனித நேயம் மிக்க மனிதர்களாக இச்சமூகத்தில் வலம்வர கடுகு மற்றும் புளிப்பு மாவு உவமையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு பயணிப்போம்....

"சிறு செயலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்..." 


சனி, 25 ஜூலை, 2020

கிறிஸ்துவின் ஆன்மாவே (செபம், பாடல்)







கிறிஸ்துவின் ஆன்மாவே (செபம்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டியருளும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து வழிந்தோடிய தண்ணிரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றியருளும்,
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்,
எனது இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
உம் புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்தருளும்.
- ஆமென்.

கிறிஸ்துவின் ஆன்மாவே (பாடல்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.!
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணிரே, என்ளைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றிடுமே.
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். - ஆமென். 

நம்பிக்கை அறிக்கை (செபம், பாடல்)






திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை (செபம்) 

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

(“... பிறந்தார்" எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்). 

இவர் தூய ஆவியால் கருவுற்று,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி,
மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலைவாழ்வை நம்புகின்றேன்.
 - ஆமென்.

நம்பிக்கை அறிக்கை (பாடல்) 

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
தந்தை, மகன், தூய ஆவியராய்
ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன்.

2 தூய ஆவியின் வல்லமையால்
இறை மகன் நமக்காய் மனிதரானார்.
கன்னி மரியிடம் பிறந்தவராம்
இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.

3 பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்.
சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்.
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.

4. விண்ணகம் வாழும் தந்தையிடம்
அரியணைக் கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.

5. தூய ஆவியாரை நம்புகிறேன்.
பாரினில் அவர் துணை வேண்டுகிறேன்.
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்
புனிதர்கள் உறவை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை
உறுதியுடனே நம்புகிறேன்.
 - ஆமென். 
நிசே நம்பிக்கை அறிக்கை (செபம்)
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும்,
காண்பவை காணாதவை,
யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக,
ஒளியின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும்,
 நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார்.

(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) 

தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட,
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும்,
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
- ஆமென். 


உன்னதங்களிலே (செபம், பாடல்)





செபம்: உன்னதங்களிலே 

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவா!
வானுலக அரசரே
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா!
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே,
இயேசு கிறிஸ்துவே!
ஆண்டவராகிய இறைவா
இறைவனின் செம்மறியே!
தந்தையின் திருமகனே!
உலகின் பாவங்களைப் போக்குபவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்!
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
ஏனெனில்
இயேசு கிறிஸ்துவே!
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!!
தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. -
ஆமென்! 




உன்னதங்களிலே (பாடல்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவனே, இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. ஆண்டவராகிய இறைவனே. இறைவனின் திருச் செம்மறியே. தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்ன தர்!
தூய ஆவியாரோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. - ஆமென். 

பாவ அறிக்கை (ஒப்புரவு) செய்யும் முறை





பாவ அறிக்கை (ஒப்புரவு) செய்யும் முறை 

1. தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்,
2. தந்தையே, நான் பாவி, என்னை மன்னித்தருளும்.
3. இதுவே, என் முதல் பாவ அறிக்கை
       அல்லது
        நான் பாவ அறிக்கை செய்து............ மாதங்கள் ஆகின்றன.
4. கடந்த பாவ அறிக்கையில் அருள்பணியாளர் கொடுத்த பரிகாரத்தை                      நிறைவேற்றினேன் / நிறைவேற்றவில்லை.
        இப்பொழுது என பாவங்களை அறிக்கையிடுகின்றேன்.

(ஆன்ம சோதனையில் கண்டுபிடித்த பாவங்களை அறிக்கையிடுதல்) 

                       1. இறைவனோடு உள்ள உறவில்

                       2. பிறரோடு உள்ள உறவில்

                       3. தன்னோடு உள்ள உறவில்

                       4.இயற்கையோடு உள்ள உறவில்

5. தந்தையே, நான் இப்பொழுது சொன்ன பாவங்களுக்காகவும், மறந்துபோன          பாவங்களுக் காகவும் பாவ மன்னிப்பும், பாவப் பரிகாரமும் கேட்கிறேன்.

(அருள்பணியாளர் தரக்கூடிய அறிவுரையையும், பரிகாரத்தையும் கவனமுடன் கேட்டல்)

6. மனத்துயர் மன்றாட்டு 

என் இறைவனாகிய தந்தையே,
நன்மை நிறைந்தவர் நீர்,
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே.
என் பாவங்களால் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும்,
நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும் மனம் வருந்துகின்றேன்.
உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும்,
பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும்
உறுதி கூறுகின்றேன். ஆமென். 

அருள்பணியாளர்: (பாவப் பொறுத்தல் ஆசிர்)

பதில்: (சிலுவை அடையாளம் வரைந்து) “ஆமென்"

அருள்பணியாளர்: இறைவனைப் போற்றுங்கள், ஏனெனில் அவர் நல்லவர்

பதில்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்

அருள்பணியாளர்: இறைவன் உன் பாவங்களை மன்னித்துள்ளார். அமைதி உண்டாகுக.

பதில்: இறைவா உமக்கு நன்றி.

திருப்பலி செபங்கள்






திருப்பலி செபங்கள்
தொடக்கச் சடங்குகள்
அப: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.

மக்: ஆமென்.

அப: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

மக்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

பாவத்துயர் செயல்
அப: சகோதர சகோதரிகளே, தூய மறை நிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.

மக்: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன். ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன்.

(மார்பில் தட்டிக் கொண்டு) 

என் பாவமே! என் பாவமே! என் பெரும் பாவமே, ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும், நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகின்றேன்.

அப: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்துப் நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

மக்: ஆமென்.

மன்னிப்பு வேண்டல்

அப: ஆண்டவரே இரக்கமாயிரும்.

மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

அப: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

மக்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

அப: ஆண்டவரே இரக்கமாயிரும்.

மக்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

உன்னதங்களிலே (செபம்)

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு, உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவா!
வானுலக அரசரே
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா!
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே,
இயேசு கிறிஸ்துவே!
ஆண்டவராகிய இறைவா
இறைவனின் செம்மறியே!
தந்தையின் திருமகனே!
உலகின் பாவங்களைப் போக்குபவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்!
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே
எங்கள் மேல் இரக்கமாயிரும்!
ஏனெனில்
இயேசு கிறிஸ்துவே!
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!!
தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. -
ஆமென்! 

உன்னதங்களிலே (பாடல்)
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய இறைவனே, இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.
ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. ஆண்டவராகிய இறைவனே. இறைவனின் திருச் செம்மறியே. தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்ன தர்!
தூய ஆவியாரோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. - ஆமென். 

திருக்குழும மன்றாட்டு
அப: மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம்முடைய மக்களின் தாழ்மையான வேண்டல்களுக்குப் - பரிவிரக்கத்துடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தாங்கள் செய்ய வேண்டியதை அறியவும், அறிந்ததை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஆற்றல் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்: ஆமென்.

வார்த்தை வழிபாடு
வாசகர்: ஆண்டவரின் அருள்வாக்கு.

மக்: இறைவனுக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப: (பெயர்) எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.

மக்: ஆண்டவரே மாட்சி உமக்கே.

அப: ஆண்டவரின் அருள்வாக்கு.

மக்: கிறிஸ்துவே உமக்குப் புகழ்.

நிசே நம்பிக்கை அறிக்கை (செபம்)
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும்,
காண்பவை காணாதவை,
யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக,
ஒளியின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும்,
 நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார்.

(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) 

தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட,
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கின்றேன். இறந்தோரின் உயிர்ப்பையும்,
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
- ஆமென். 

திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை (செபம்) 

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.

(“... பிறந்தார்" எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்). 

இவர் தூய ஆவியால் கருவுற்று,
கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச்
சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி,
மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.
புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன்.
நிலைவாழ்வை நம்புகின்றேன்.
 - ஆமென்.

நம்பிக்கை அறிக்கை (பாடல்) 

1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
தந்தை, மகன், தூய ஆவியராய்
ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன்.

2 தூய ஆவியின் வல்லமையால்
இறை மகன் நமக்காய் மனிதரானார்.
கன்னி மரியிடம் பிறந்தவராம்
இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.

3 பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்.
சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்.
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.

4. விண்ணகம் வாழும் தந்தையிடம்
அரியணைக் கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.

5. தூய ஆவியாரை நம்புகிறேன்.
பாரினில் அவர் துணை வேண்டுகிறேன்.
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்
புனிதர்கள் உறவை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை
உறுதியுடனே நம்புகிறேன்.
 - ஆமென். 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 
முதல் : ..... அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

மக்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நற்கருணை வழிபாடு

(அப்பத்தை உயர்த்திப் பிடித்து)

அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்: நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இதுளங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.

மக்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.

(இரசத்தில் ஒருதுளி தண்ணீர் சேர்க்கும் போது)

அப: கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்குகொள்ளத் திருவுளமானார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.

(திருக்கிண்ணத்தை உயர்த்திப் பிடித்து)

அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப் பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சை செடியும், மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.

மக்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(பணிந்து வணங்கி சொல்வது)

அப: ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறைவா, நாங்கள் இன்று உமது திருநமுன் ஒப்புக்கொடுக்கும் இப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.

(கைகளைக்கழுவும் போது)

அப: ஆண்டவரே, எனது குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும்: என் பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.

அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.

மக்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மீது மன்றாட்டு

அப: ஆண்டவரே, உம் மக்கள் அளிக்கும் காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் இருக்க உம்மை வேண்டுகின்றோம். அதன் வழியாக அவர்கள் புனிதம் அடைந்து இறைப் பற்றுதலோடு தாங்கள் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வார்களாக. ளங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு - 2

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.

மக்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

மக்: அது தகுதியும் நீதியும் ஆனதே.

அப: ஆண்டவரே. தூயவரான தந்தையே, உம் அன்பார்ந்த மகன் இயேசு கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும், நீதியும் ஆகும். எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
உம் வார்த்தையான அவர் வழியாக அனைத்தையும் படைத்தீர். அவரையே மீட்பராகவும் ஈடேற்றுபவராகவும் எங்களுக்கு அனுப்பினீர். அவர் தூய ஆவியால் உடலெடுத்து, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். அவர் உமது திருவுளத்தை நிறைவேற்றி, புனித மக்களை உமக்குப் பெற்றுத் தரத் தம் கைகளை விரித்துப் பாடுபட்டார். இவ்வாறு அவர் சாவை வென்று உயிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆகவே வானதூதரோடும் புனிதர் அனைவரோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்துரைத்து ஒரே குரலாய்ச் சொல்வதாவது.

மக்: தூயவர், தூயவர், தூயவர்
வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஓசன்னா!

அப: ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக. அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்தபோது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்: ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல். அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின். கணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருதங்கள்: எனெனில் இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம், இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு: நம்பிக்கையின் மறைபொருள்.

மக்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
(அல்லது)
மக்: ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடு கின்றோம்.
(அல்லது)
உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும்.
உமது சிலுவையினாலும், உயிர்ப்பினாலும் எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

அப: ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும், உயிர்ப்பினையும் நினைவு கூர்ந்து, வாழ்வு தரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக் கொண்டீர்: எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகமெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை (பெயர்)... எங்கள் ஆயர் (பெயர்).... எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திருஅவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர், சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவு கூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

அப: இவர் வழியாக, இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.

மக்: ஆமென்

திருவிருந்துச் சடங்கு 

அப: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப் படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.
உமது ஆட்சி வருக.
 உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அப: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.

மக்: ஏனெனில், ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

அப: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே: எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும், ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

மக்: ஆமென்.

அப: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

மக்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

அப: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.

(பாடல்) 

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும். - 2
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.

அப: இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

மக்: ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தான் நான் தகுதியற்றவன், ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும். எனது ஆன்மா நலம் அடையும்.

(நற்கருணை வழங்கும் போது) 

அப: கிறிஸ்துவின் திருஉடல்

மக்: ஆமென்.

(நற்கருணை உட்கொண்ட பிறகு) 

கிறிஸ்துவின் ஆன்மாவே (செபம்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டியருளும்.
கிறிஸ்துவின் விலாவிலிருந்து வழிந்தோடிய தண்ணிரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றியருளும்,
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்,
எனது இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
உம் புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்தருளும்.
- ஆமென்.

கிறிஸ்துவின் ஆன்மாவே (பாடல்)

கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.!
கிறிஸ்துவின் திரு இரத்தமே, எனக்கு எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணிரே, என்ளைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னைத் தேற்றிடுமே.
ஓ! நல்ல இயேசுவே, எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரியவிடாதேயும்.
தீய பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
இறப்பின் வேளையில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களோடு எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும். - ஆமென். 

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

அப: மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா. உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் அருளடையாளங்களால் புத்துயிர் பெற்ற நாங்கள் உமக்கு ஏற்புடைய வாழ்வால் பணிபுரியக் கனிவுடன் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

மக்: ஆமென்.

நிறைவுச் சடங்கு

அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

மக்: ஆமென்.

அப: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று.

மக்: இறைவனுக்கு நன்றி.

பகுதி: 10 அன்னை மரியா






பகுதி: 10 
அன்னை மரியா
அளவில்லாக் கருணையும் ஞானமும் உள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டுஇ தம் மகனை உலகிற்கு அனுப்பினார். இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியால் கன்னி மரியாவிடம் மனிதரானார். நம்பிக்கைக் கொண்டோர் நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும் எப்பொழுதும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு சிறப்பான வணக்கம் செலுத்துகின்றனர்.

127. அன்னை மரியாவைப் பற்றிய நம்பிக்கை கோட்பாடுகள் யாவை? 
1 புனித மரியா கடவுளின் தாய்.
2. புனித மரியா எப்பொழுதும் கன்னி.
3. புனித மரியா அமல உற்பவி.
4. புனித மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்தவர்.

128. செபமாலையின் மறை உண்மைகள் யாவை? 
1. மகிழ்வின் மறை உண்மைகள்
2. ஒளியின் மறை உண்மைகள்
3. துயரின் மறை உண்மைகள்
4. மாட்சியின் மறை உண்மைகள்

129. மகிழ்வின் மறை உண்மைகள் யாவை? 
1 கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூது உரைத்தது.
2. இறை அன்னை எலிசபெத்தைச் சந்தித்தது.
3. இயேசு பெத்லகேமில் பிறந்தது.
4. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
5. காணாமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தது.

130. ஒளியின் மறை உண்மைகள் யாவை? 
1 இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றது.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீ ரைத் திராட்சை இரசமாக மாற்றியது.
3. இயேசு இறையரசைப் போதித்தது.
4. இயேசு தாபோர் மலையில் தோற்றம் மாறியது.
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது.

131. துயரின் மறை உண்மைகள் யாவை? 
1 இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. இயேசு கல்தூணில் கட்டுண்டு அடிபட்டது.
3. இயேசு முள்முடி சூட்டப்பட்டது.
4. இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தம் உயிரைத் துறந்தது.

132. மாட்சியின் மறை உண்மைகள் யாவை? 
1. இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது.
2. இயேசு விண்ண கம் சென்றது.
3. அன்னை மரியா மீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் எழுந்தருளி வந்தது.
4. இறை அன்னை விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. இறை அன்னை விண்ணக, மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டது.

பகுதி: 9 மனிதரின் நிறைவு நிலை





பகுதி: 9 
மனிதரின் நிறைவு நிலை
இறப்புடன் மனித வாழ்வு முடிவு அடைவதில்லை ; வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை என்பதே நமது நம்பிக்கை. அதைப் பற்றிக் கிறிஸ்தவப் போதனையின் அடிப்படையில் திரு அவை சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.

117. கிறிஸ்தவர் இறப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? 
இறப்பு விண்ணக வாழ்வின் பிறப்பு, ஆகவே இறப்பின் மீது வெற்றி கொண்ட நம் மீட்பராகிய கிறிஸ்துவை, முழுமையாகச் சந்திக்கும் வேளை என்னும் மனநிலையோடு, கிறிஸ்தவர் இறப்பை எதிர்கொள்ள வேண்டும்.

118. இறப்புக்குப் பின் என்ன நடக்கும்? 
தனித் தீர்ப்பு நடக்கும்.

119. தனித் தீர்ப்பு என்றால் என்ன? 
ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்பத் தீர்ப்பிடப்படுவதையே தனித் தீர்ப்பு என்கிறோம்.

120. தனித் தீர்ப்புக்குப் பின் என்ன நடக்கும்? 
1. எவ்விதப் பாவமும் இல்லாதவர்கள் விண்ணகம் செல்வார்கள்.
2. சாவான பாவம் உள்ளவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.
3. அற்ப பாவம் உள்ளவர்கள் தூய்மை பெறும் நிலைக்குச் செல்வார்கள்.

121. நல்லவர்கள் விண்ணகத்தில் அடையும் பேறு என்ன? 
கடவளை நேருக்கு நேராகக் கண்டு, முடிவில்லாப் பெரு மகிழ்வில் திளைத்து அவரோடு என்றென்றும் வாழ்வார்கள்.

122. பாவிகள் நரகத்தில் படுகிற வேதனை என்ன? 
கடவுளை ஒருபொழுதும் காணாமல், அவரைப் பிரிந்து, அலகையோடு முடிவில்லாத் துன்பத்திற்கு உள்ளாவர்.

123. தூய்மை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்? 
அவர்கள் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள். முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள்.

124. உலக முடிவில் என்ன நடக்கும்? 
பொதுத் தீர்ப்பு நடக்கும்.

125. பொதுத் தீர்ப்பு என்றால் என்ன? 
1. உலக முடிவில் இயேசு கிறிஸ்து மாட்சியோடு மீண்டும் வருவார்.
2. இறந்த எல்லாரும் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்ப்பிக்கப் பெறுவர்.
3. இவர்கள் உயிருடன் உள்ளவர்களோடு தீர்ப்புக்கு வருவர்.

126. பொதுத் தீர்ப்புக்குப் பின் நடப்பது என்ன? 
நல்லவர்கள் நிலை வாழ்வையும், பாவிகள் நிலையான தண்டனையும் பெறுவார்கள்.

பகுதி : 8 கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை





                                                             பகுதி : 8 
                             கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை
மனித வாழ்வு சிறப்பாக அமையக் கடவுளே சில சட்ட திட்டங்களை நமக்கு வகுத்துத் தந்துள்ளார்: நம் இதயத்தில் பதித்து வைத்துள்ளார். இவற்றைப் பத்துக் கட்டளைகள் என அழைக்கிறோம். இந்தக் கட்டளைகளை இயேசுவே கடைப்பிடித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். மேலும்இ கிறிஸ்துவின் போதனைகளைச் செம்மையாகக் கடைப்பிடிப்பதற்குத் திரு அவையும் சில வழி முறைகளைக் கொடுத்துள்ளது. இவற்றைத் திரு அவையின் ஒழுங்கு முறைகள் என்கிறோம். தூய ஆவியாரின் துணை கொண்டு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதே அன்றாடக் கிறிஸ்தவ வாழ்க்கை ஆகும்.

90. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு? 
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவ நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாக நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துகிறோம்.

91. நம்பிக்கை என்றால் என்ன? 
தம்மை நமக்கு வெளிப்படுத்தும் கடவுளின் திட்டத்தை ஏற்று, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை ஆகும்.

92. எதிர்நோக்கு என்றால் என்ன? 
கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், அவர் நம்மைக் கைவிடாமல் பாதுகாத்துஇ வழிநடத்தி நிலைவாழ்வில் சேர்ப்பார் என்னும் மனவாதிய எதிர்நோக்கு ஆகும்.

93. அன்பு என்றால் என்ன? 
அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்யவம். தம்மைப் போல் மற்றவர்களை அன்புசெய்யவும் கடவுள் நமக்கு அளிக்கும் அருளாற்றலே அன்பு ஆகும்.

94. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை? 
பத்துக் கட்டளைகள். 
1 நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய்
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபசாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
இந்த பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும். 
1. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது.
2. தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.

95. திரு அவையின் ஒழுங்குமுறைகள் யாவை? 
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்.
இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்றுஇ நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும்இ திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

96. கடவுளுடைய கட்டளைகளையும் திரு அவையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்? 
கடவுளோடும் திரு அவையோடும் சமுதாயத்தோடும் நாம் கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கப்படும். இதையே பாவம் என்கிறோம்.

97. எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன? 
பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என இரண்டு வகைப் பாவங்கள் உள்ளன.

98. பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன? 
முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் உண்டாகி. நம்மோடு பிறக்கிற பாவம்.

99. செயல்வழிப் பாவம் என்றால் என்ன? 
நன்மை தீமை அறிந்த நிலையில், ஒருவர் முழு மனத்துடன் செய்யும் பாவம்.

100. செயல் வழிப் பாவம் செயல் வழிப் பாவம் எத்தனை வகைப்படும்? 
சாவான பாவம், அற்பபாவம் என இரண்டு வகைப்படும்.

101. சாவான பாவம் என்றால் என்ன? 
கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக் கொள்வது சாவான பாவம்.

102. அற்ப பாவம் என்றால் என்ன? 
முழுமையான அறிவோ விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராகச் செயல்படுவது அற்பபாவம். இப்பாவத்தைத் தொடர்ந்து செய்யும்போது, அது சாவான பாவத்திற்கு வழி வகுக்கிறது.

103. தலையான பாவங்கள் எத்தனை? 
ஏழு.

104. அவை யாவை? 
1. தற்பெருமை
2. சீற்றம் |
3. காமவெறி
4. பேராசை
5. பெருந்தீனி விரும்பல்
6. பொறாமை
7. சோம்பல்

105. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை? 
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு

106. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை? 
1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு

107. புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா? 
முறையே. ஏனெனில் புனிதர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார்கள் ; நமக்காகக் கடவுளிடம் பரிந்துரைக்கிறார்கள்.

108. புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா? 
ஆகாது. கடவுளுக்கு மட்டுமே நாம் வழிபாடு செய்கிறோம். புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வணக்கம் மட்டுமே.

109. நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை? 
1. இறைவேண்டல்
2. இறைவார்த்தை

110. இறைவேண்டல் என்றால் என்ன? 
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவதுஇ பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் நம்பிக்கையுடன் பேசுவது போல் கடவுளுடன் நாம் பேசுவது இறைவேண்டல் ஆகும்.

111. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன? 
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். சீமையிலிருந்துளங்களை விடுவித்தருளும். ஆமென்.

112. நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி? 
கிறிஸ்துவை நம் முன்மாதிரியாகக் கொண்டு, அவரிடம் விளங்கிய அன்பு. உண்மை, நீதி முதலிய பண்புகளைக் கடைப்பிடித்து, அவருடைய பணிகளை ஆற்றுவதன் வழியாக நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ முடியும்.

113. கிறிஸ்தவப் பெற்றோரின் கடமை என்ன? 
1. கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவரிடம் தன்னலம் அற்ற அன்பும், நேர்மையான பற்றும் கொண்டிருக்க வேண்டும்.
2. தங்கள் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
3. தங்கள் பிள்ளைகளை நன்னடத்தையிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும்.

114. பிள்ளைகளின் கடமை என்ன? 
பிள்ளைகள் இயேசுவைப் பின்பற்றி, தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அன்பில் வளர வேண்டும்.

115. கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? 
1 பெற்றோரும் பிள்ளைகளும் இறைவார்த்தை வழியில் வாழ வேண்டும்.
2. அருளடையாள வாழ்வில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்டு வாழ வேண்டும்.
3. திரு அவையின் வளர்ச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னலம் இன்றி உழைக்க வேண்டும்.

116. கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்? 
கடவுளின் தாயும் என்றும் கன்னியுமான புனித மரியாவும் மற்றப் புனிதர்களும் ஆவர். 

பகுதி: 7 அருளடையாளங்கள்




பகுதி: 7
அருளடையாளங்கள்
மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்து நம்மோடு உறவு கொண்டு நம்மை அருள் வாழ்வில் வளரச் செய்கிறார்: தம் பாடுகள்இ இறப்புஇ உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறை நிகழ்ச்சியில் நாம் பங்கேற்கச் செய்கிறார். இவ்வாறு மனித வாழ்வின் முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே அருளடையாளங்கள்.

68. அருளடையாளம் என்றால் என்ன? 
அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும்இ அதனை வழங்கவும்இ கிறிஸ்து ஏற்படுத்திய நிலையான அடையாளமே அருளடையாளம் ஆகும்.

69. அருளடையாளங்கள் எத்தனை? 
ஏழு.

70. அவை யாவை? 
1. திருமுழுக்கு
2. உறுதிப்பூசுதல்
3. நற்கருணை
4. ஒப்புரவு
5. நோயில் பூசுதல்
6. குருத்துவம்
7. திருமணம்

71. அருளடையாளங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்? 
அருளடையாளங்கள் வழியாக நாம் அருள் வாழ்வைப் பெறுகிறோம்.

72. திருமுழுக்கு என்றால் என்ன? 
பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திரு அவையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருளடையாளமே திருமுழுக்கு ஆகும்.

73. உறுதிப்பூசுதல் என்றால் என்ன? 
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பிஇ திரு அவையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருளடையாளமே உறுதிப்பூசுதல் ஆகும்.

74. தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்? 
நம்பிக்கையில் நாம் உறுதியாய் நிலைத்திருக்கவும். கடவுள் மேல் நிறைவான அன்பு கொண்டு வாழவும். கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்கவும்இ தம் கொடைகளை வழங்கி நமக்கு உதவுகிறார்.

75. தூய ஆவியாரின் கொடைகள் யாவை? 
1. ஞானம்
2. மெய்யுணர்வு
3. அறிவுரைத் திறன்
4. நுண்மதி
5. ஆற்றல்
6. இறைப்பற்று
7. இறை அச்சம்

76. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை? 
1. அன்பு
2. மகிழ்ச்சி
3. அமைதி
4. பொறுமை
5. பரிவு
6. நன்னயம்
7. நம்பிக்கை  
8. கனிவு
9. தன்னடக்கம்
10. பணிவு நயம்
11. தாராள குணம்
12. நிறை கற்பு

77. நற்கருணை என்றால் என்ன? 
அப்ப இரச குணங்களுக்குள்இ இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருளடையாளமே நற்கருணை ஆகும்.

78. இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்? 
இயேசு தமது இறுதி இரவு விருந்தின் போது நற்கருணையை ஏற்படுத்தினார்.

79. இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுத்தினார்? 
தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அதைய பட்டு, தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது: “அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்: ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்",
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்னை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடருக்கு அளித்து அவர் கூறியதாவது: “அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள். ஏனெனில், இது புதிய நிலையான உடன் படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம். இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" இவ்வாறு இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

80. திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது? 
திருப்பலியில் அப்பம் கிறிஸ்துவின் திருஉடலாகவும்இ திராட்சை இரசம் அவருடைய திரு இரத்தமாகவும் மாறுகின்றன.

81. இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்? 
இறைமக்களின் ஆன்ம உணவாகவும், தம்முடைய பாடுகள்,  இறப்பு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகவும், தாம் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அருளடையாளமாகவும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

82. நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்? 
பாவ நிலையில் இல்லாமல்இ கடவுளோடும் தம் சகோதரர் சகோதரிகளோடும் நல்லுறவில் நிலைத்திருக்க வேண்டும்.

83. திருப்பலியின் இரு பெரும் பகுதிகள் யாவை? 
1. இறைவார்த்தை வழிபாடு
2. நற்கருணை வழிபாடு

84. திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு? 
வெறும் பார்வையாளர்கள் போல் இராமல் திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இறைவார்த்தையைக் கவனமுடன் கேட்டு, திருச்சடங்குகளில் ஒன்றித்து. இறை வேண்டல்களிலும் பாடல்களிலும் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

85. ஒப்புரவு அருளடையாளம் என்றால் என்ன? 
திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருளடையாளமே ஒப்புரவு ஆகும்.

86. ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறும் முறையாது? 
1 செய்த பாவங்களை நினைவுக்குக் கொண்டு வருதல்.
2. அவற்றிற்காக மனம் வருந்துதல்.
3. இனிமேல் பாவம் செய்வதில்லை எனத்தீர்மானித்தல்.
4. அருள்பணியாளரிடம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுதல்.
5. பாவப்பரிகாரமாகவும்இ பாவமன்னிப்பிற்கு நன்றியாகவும் அருள்பணியாளர் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுதல்.

87. நோயில்பூசுதல் என்றால் என்ன? 
நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி, நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருளடையாளமே நோயில்பூசுதல் ஆகும்.

88. குருத்துவம் என்றால் என்ன? 
திருப்பலி மற்றும் அருளடையாளங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழி நடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கிற அருளடையாளமே கருத்துவம் ஆகும்.

89. திருமணம் என்றால் என்ன? 
ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை செய்யவும். தம் பிள்ளைகளைக் கிறிஸ்தவ நெறியில் வளர்க்கவும். இல்லத் திரு அவையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருளடையாளமே திருமணம் ஆகும்.


பகுதி:6. திருவிவிலியம்





பகுதி:6. 
திருவிவிலியம்
கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் மனிதருக்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் வெளிப்படுத்திய உண்மைகளையும், நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருவிவிலியம். இது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது.

61. திருவிவிலியம் என்றால் என்ன? 
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவார்த்தை அடங்கிய நூல்களின் தொகுப்பே திருவிவிலியம் ஆகும்.

62. திருவிவிலியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை? 
1. பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு

63. பழைய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன? 
பழைய ஏற்பாட்டில் மொத்தம் நாற்பத்தாறு நூல்கள் உள்ளன.

64. பழைய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன? 
இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்கள் வழியாக உலகம் அனைத்திற்கும் கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் வருகைக்காக மானிடரைத்தயார் செய்த வரலாற்றைப் பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

65. புதிய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன? 
புதிய ஏற்பாட்டில் மொத்தம் இருபத்தேழு நூல்கள் உள்ளன.

66. நற்செய்தி நூல்கள் யாவை? 
நற்செய்தி நூல்கள் நான்கு.
1 மத்தேயு எழுதிய நற்செய்தி
2. மாற்கு எழுதிய நற்செய்தி
3. லூக்கா எழுதிய நற்செய்தி
4. யோவான் எழுதிய நற்செய்தி

67. புதிய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன? 
கிறிஸ்துவின் வாழ்வு, மீட்புப் பணி, தொடக்கத் திரு அவையின் வரலாறு. கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புதிய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது. 

பகுதி: 5 திருஅவை




பகுதி: 5 
திருஅவை
கடவுள் தம் மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கிறிஸ்து திரு அவையை ஏற்படுத்தினார்.

53. திரு அவை என்றால் என்ன? 
இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் வற்ற இறைமக்கள் சமூகமே திரு அவை ஆகும்.

54. திரு அவையை ஏற்படுத்தியவர் யார்? 
திரு அவையை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து.

55. திரு அவைக்குத் தலைவர் யார்? 
இயேசு கிறிஸ்துவே திரு அவைக்குத் தலைவர்.

56. இயேசு நமக்குப் பின் திரு அவைக்குத் தலைவராக யாரை நியமித்தார்? 
திருத்தூதர் பேதுருவை நியமித்தார்.

57. திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்கள் யாவர்? 
திருத்தந்தையர்கள்.

58. திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் யாவர்? 
ஆயர்கள்.

59. உலகத்தில் திரு அவை ஆற்றும் பணிகள் யாவை? 
1. மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்றது.
2. மக்களைப் புனிதப்படுத்துகின்றது.
3. மக்களை இறை வழியில் நடத்துகின்றது.

60. திரு அவையின் உறுப்பினர் என்னும் முறையில் நமக்குள்ள கடமை என்ன?
திரு அவையின் போதனைப்படி வாழ்வதும், அதன் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதும் நம் கடமை ஆகும்.

பகுதி :4 தூய ஆவியார்


பகுதி :4
தூய ஆவியார்
தாம் இவ்வுலகில் ஆற்றிவந்த மீட்புப் பணி உலக முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே தமக்குப் பின் இப்பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக் கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவி கொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திரு அவை பிறந்து வளரத் தொடங்கியது.

49. தூய ஆவியார் யார்? 
தந்தையோடும் மகனோடும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டு இருக்கும் மூன்றாம் ஆள்.

50. தூய ஆவியார் திரு அவையில் எவ்விதம் செயலாற்றுகிறார்? 
உடலுக்கு உயிர் இருப்பதுபோல்இ தூய ஆவியார் திரு அவையில் இருந்து அதனை வழிநடத்துகிறார். அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.

51. நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்? 
தூய ஆவியார் நம்முள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்துகிறார். தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார்.இறைவனின் பிள்ளைகளுக்கு உரிய அன்புறவுடனும் சுதந்திரத்துடனும் நாம் வாழ நமக்கு ஆற்றல் அளிக்கிறார்.

52. தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன? 
தூய ஆவியாருடைய தூண்டுதல்களுக்குப் பணிந்து, அவர்மீது அன்பு கொண்டு, அவரது வழிநடத்துதலுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

பகுதி : 3 இயேசு கிறிஸ்து உலக மீட்பர்





பகுதி : 3 
இயேசு கிறிஸ்து உலக மீட்பர்
கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோராக குற்றத்தைத் தொடர்ந்து மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்து கொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் மீட்டுஇ சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். வாக்களிக்கப் பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையைப் பல முறை மீறினார்கள்: கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை மாறாகஇ இறைவாக்கினர்களை அனுப்பிஇ மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.

18. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்? 
இயேசு கிறிஸ்து.

19. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன? 
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும்இ கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.

20. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்? 
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

21. இயேசு எந்த ஊரில் பிறந்தார்? 
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

22. இயேசுவின் தாய் யார்? 
எப்பொழுதும் கன்னியான புனித மரியா.

23. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்? 
தூய ஆவியின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகிஇ இயேசு மனிதராகப் பிறந்தார்.

24. இயேசுவின் தந்தை யார்? 
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.

25. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன? 
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2. நாசரேத்தில் வளர்ந்து வந்தார்.
3. தம் தாய் தந்தையருக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார்.
5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்துஇ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

26. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா? 
ஆம்இ தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.

27. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்? 
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

28. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது? 
வானம் திறக்கஇ கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது என் அன்பார்ந்த மகன் நீயேஇ உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

29. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்? 
கடவுள் ஒருவரே என்றும்இ அவர் தந்தைஇ மகன்இ தூய ஆறியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அரிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.

30. தந்தை கடவுளா? 
ஆம்இ கடவுள் தான்.

31. மகன் கடவுளா? 
ஆம்இ கடவுள் தான்.

32. தூய ஆவியார் கடவுளா? 
ஆம்இ கடவுள் தான்.

33. இம் மூவரும் மூன்று கடவுளாஇ ஒரே கடவுளா? 
ஒரே கடவுள்.

34. எப்படி ஒரே கடவுள்? 
யாதொரு வேறுபாடும் இன்றி. மூவருக்கும் ஒரே அன்புறவுஇ ஒரே ஞானம்இ ஒரே திருவுளம்இ ஒரே வல்லமைஇ ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.

35. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்து கொண்டார்? 
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார். அவர்களைத் திருத்தூதர் என்றும் அழைத்தார்.

36. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன? 
1 கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை: நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள்.
2. அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

37. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன? 
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும்.
2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
3. இயேசு நம்மை மன்னிப்பது போல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.

38. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்? 
தம் அரும் அடையாளங்களாலும்இ போதனையாலும்இ பாவிகளை மன்னித்ததாலும்இ சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.

39. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை? 
1. தண்ணீ ரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.
2. அப்பம் பலுகச் செய்தார்.
3. புயலை அடக்கினார்இ; கடல் மீது நடந்தார்.
4. நோய்களைக் குணப்படுத்தினார்.
5. பேய்களை ஓட்டினார்.
6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

40. இயேசு கிறிஸ்து யார்? 
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர் ; பாவத்திலிருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் காட்டுபவர். மனிதருக்கும் உள்ள உறவில் நிறைவாழ்வு காண நமக்கு வழி

41. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்? 
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டுஇ சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார்.

42. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை? 
1. யூதத்தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2. கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4. கல்தூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
5. முள்முடி சூட்டப்பட்டார்.
6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.

43. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்து விட்டதா? 
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்நாளும் நம்முடன் இருக்கிறார்.

44. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்? 
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார்.

45. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன? 
இயேசு பாடுபட்டுஇ இறந்து உயிர்த்ததையே இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்கிறோம்.

46. கிறிஸ்துவினுடைய பாஸ்கா என்றால் என்ன?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தந்தையிடம் சென்றது போலஇ நாமும் பாவத்தை விட்டெழுந்துஇ அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்துவருடைய பாஸ்கா.

47. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நான் யாரை அனுப்பினார்? 
தூய ஆவியாரை அனுப்பினார்.

48. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்? 
இறைத்தந்தையுடன் ஒன்றுபட்டுஇ இயேசு கிறிஸ்து உலகம் எங்கும் இருக்கிறார். அருளடையாள முறையில் சிறப்பாக தூய்மைமிகு நற்கருணையில் இருக்கிறார்.

பகுதி - 2. மீட்புக்குத் தயாரிப்பு




பகுதி - 2. 
மீட்புக்குத் தயாரிப்பு
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

7. அனைத்தையும் படைத்தவர் யார்? 
கடவுள்.

8. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை? 
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

9. வானதூதர் என்பவர் யார்? 
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்கு பெறுபவர்களே வானதூதர் ஆவர்.

10. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன? 
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

11. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்? 
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் மயையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

12. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்? 
கடவுள் மனிதரைத்தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

13. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்? 
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்கு கொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.

14. பெரு மகிழ்வில் பங்கு கொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன? 
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என்று அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்று அழைக்கிறோம்.

15. மனிதர் இந்நிலையை எவ்வாறு இழந்தனர்? 
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

16. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனையாது? 
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2. கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர்.
3. பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

17. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா? 
இல்லை. மனிதரைப்பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.

பகுதி - 1 கத்தோலிக்க திரு அவையின் அடிப்படை மறைக்கல்வி



பகுதி - 1
கத்தோலிக்க திரு அவையின் அடிப்படை மறைக்கல்வி
I. மனித வாழ்க்கையும் கடவுளும் மனிதர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர் உண்மையான மகிழ்ச்சியைத் தருபவரும் அதற்கு ஊற்ற இருப்பவரும் கடவுளே. எனவே, கடவுளை அடைவதில் தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்? 
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.

2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? 
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்து கொள்ள முடியும். சிறப்பாக, இறைவெளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்து கொள்ளலாம்.

3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்? 
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை: நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.

4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும்? 
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ய முடியும்.

5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன? 
தாம் அளித்த கட்டளைகளுக்கும், நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.

6. எல்லா மனிதரையும் நாம் என் அன்பு செய்ய வேண்டும்? 
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்: இதனால் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள். ஆகவே நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.

செபம்: கடவுளின் ஆறு சிறப்பான பண்புகள்





செபம்: கடவுளின் ஆறு சிறப்பான பண்புகள்
1 கடவுள் தாமாக இருக்கிறார்.
2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
3. உடலும் உருவமும் இல்லாமல் இருக்கிறார்.
4. அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாய் இருக்கிறார்.
5. எங்கும் நிறைந்து இருக்கிறார்.
6. எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணமாய் இருக்கிறார்.

செபம்: திரு அவையின் ஒழுங்குமுறைகள்



செபம்: திரு அவையின் ஒழுங்குமுறைகள்
1. நாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும். இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்று. நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திரு அவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திரு அவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.


இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...