ஞாயிறு, 31 அக்டோபர், 2021
புனிதர் அனைவர் பெருவிழா(1.11.2021)
சனி, 30 அக்டோபர், 2021
அன்பு செய்து வாழ்வதே நம் இலக்கு ...(31.10.2021)
வெள்ளி, 29 அக்டோபர், 2021
முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? (30.10.2021)
வியாழன், 28 அக்டோபர், 2021
நன்மை செய்து வாழ்வோம் ...29.10.2021
புதன், 27 அக்டோபர், 2021
திருத்தூதர்களின் பாதையில் பயணிக்க ...(28.10.2021)
செவ்வாய், 26 அக்டோபர், 2021
துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.(27.10.2021)
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...(26.10.2021)
தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...(25.10.2021)
வெள்ளி, 22 அக்டோபர், 2021
நம்பிக்கையின் மனிதர்களாக பிறந்திட ...(24.10.2021)
வியாழன், 21 அக்டோபர், 2021
கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ... (23.10.2021)
புதன், 20 அக்டோபர், 2021
தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....(22.10.2021)
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்..... என குறிப்பிடுகின்றார்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் எத்தகைய (எண்ணம் கொண்டவர்களாக) உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை சுய ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கின்றன.
உன்னையறிந்தால்....
நீ உன்னையறிந்தால் .....
உலகத்தில் போராடலாம்....
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப
நம்மை பற்றிய ஆழமான அறிவே நம்மைப் போலவே மற்றவரும் என அடுத்தவரை அறிந்து கொள்வதற்கான வழியாக அமைகிறது. திருத்தூதர் பவுல் தன்னை அறிந்திருந்தார். தன் எண்ண ஓட்டத்தை சீர் தூக்கி பார்த்தார். அதன் விளைவு ஆண்டவர் இயேசுவின் பாதையில் சிறப்பான சீடராக மாறினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இன்று நாமும் நம்மை சுய ஆய்வு செய்து நமது பலவீனங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக விளங்கிட அவரது அருளைப் பெற்றிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நமது செயல்களையும், சிந்தனையையும் சீர்தூக்கி பார்ப்பதன் அடிப்படையில் தேவையற்ற வாதங்கள், தேவையற்ற சண்டைகள், தேவையற்ற சச்சரவுகள், இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதற்கான ஆற்றலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவைகளை சரிசெய்து கொண்டு நாம் இச்சமூகத்தில் பயணிக்கின்ற போது நலமான நல்ல பணிகளை திருத்தூதர் பவுலைப் போல முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மண்ணில் வாழுகின்ற நாட்களில் வஞ்சகத்தை மனதில் வளர்த்திக்கொண்டு, உறவுகளை விட்டு பிரிந்து நின்று வாழ்வதைவிட, கருத்து வேறுபாடுகளையும், சண்டை சச்சரவுகளையும் சரி செய்துகொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் நம்மை முழுமையாக அறிந்தவர்களாய் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிய கூடியவர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்...
செவ்வாய், 19 அக்டோபர், 2021
தூய வாழ்வு நிலை வாழ்வுக்கு வழிவகுக்கும்...(21.10.2021)
திங்கள், 18 அக்டோபர், 2021
உங்கள் குரல் கேட்கப்படும்....( செபம்) (24.10.2021)
விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...(20.10.2021)
விழிப்போடு செயல்பட....(19.10.2021)
ஞாயிறு, 17 அக்டோபர், 2021
இயேசுவின் பணியைசெய்ய....(17.10.2021)
சனி, 16 அக்டோபர், 2021
இயேசுவின் பாதையில்....(17.10.2021)
வெள்ளி, 15 அக்டோபர், 2021
எதிலும் நம்பி கை வைக்க என்ன தேவை ?...(16.10.2021)
வியாழன், 14 அக்டோபர், 2021
இந்த உலகத்தில் நிலையானது எது? (15.10.2021)
இந்த உலகத்தில் நிலையானது எது?
கடவுள் ஒருவரே. அவர் ஒருவரையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் ஒருவருக்கே அஞ்சுங்கள், என்ற செய்திதான் இன்றைய வாசகங்களின் மையமாக நமக்கு தரப்படுகிறது.
ஒரு மயில் இறகு ஒன்று காற்றில் பறந்து வந்தது. அது ஒரு ஓவியனுடைய கையில் கிடைத்தது. அந்த ஓவியன் அதை எடுத்து ஒரு அழகிய படத்தை அதை பயன்படுத்தி வரைந்தான். பின்னர் அந்த மயில் இறகு மீண்டும் காற்றில் பறந்து வந்து ஒரு மருத்துவனுடைய கையில் கிடைத்தது. அதை எடுத்து அவன் எண்ணெயை தொட்டு காயத்திற்கு மருந்திட்டான். அதே மயிலிறகு மீண்டும் காற்றில் பறந்து சென்றது. இறுதியில் அது ஒரு இளைஞனுடைய கையில் கிடைத்தது. அவன் அதில் சில பகுதிகளை சரிசெய்து தனது காதுகளைக் குடைந்து கொண்டான்.
ஒரே இறகு தான், ஆனால் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திய விதம் வெவ்வேறாக இருந்தது. ஆண்டவர் ஒருவரே. அந்த ஆண்டவர் ஒருவருக்கே நாம் இந்த சமூகத்தில் அஞ்ச வேண்டும். அவர் ஒருவரையே நாம் ஆழமாக் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் நலமான நல்ல பணிகளைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டவர் எங்கோ இருப்பவர் அல்ல. இவர் எப்போதும் நம்மோடு இருப்பவர்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற மத்தேயு 28:20, இறைவார்த்தைகளுக்கு ஏற்ப, எப்போதும் நம்மோடு இருப்பவர். நூம் அஞ்ச வேண்டியதும் அவர் ஒருவருக்கு மட்டுமே. அஞ்ச வேண்டிய ஆண்டவரை விட்டுவிட்டு இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு அஞ்சி அவர்களின் வழியில் நடக்கக் கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் இம்மண்ணில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கூட ஆண்டவரை மட்டும் மனதிறக் கொண்டு நம்பிக்கையோடு தன் பணயத்தை மேற்கொண்ட ஆபிரகாமை ஆண்டவர் நீதியோடு நோக்கினார் என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
நாம் வாழும் இவ்வுலகத்தில் பொதுவாக இந்தச் சமூகத்தில் தீமைகள் வளர்வதற்கான காரணம் தீமை செய்வோர் தீமை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல மாறாக நல்லவர்கள் பலரின் மௌனமும் தேவையற்ற அச்சமுமே காரணம் என்பார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவருக்கு மட்டுமே என்பதை எடுத்துரைப்பதன் வழியாக தேவையற்ற அச்சங்களை கலைந்து எப்போதும் நம்மோடு எல்லாச்சூழலிலும் உடனிருக்கும் ஆண்டவரை மனதிற் கொண்டு துணிவோடு வாழ அழைப்பு தருகிறது.
இந்த இறைவனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இந்த இறைவனை பயன்படுத்தி இந்த சமூகத்தில் நல்ல செயல்களைச் செய்கிறோமா? அல்லது அவரைக் கண்டும் காணாமல் நகர்ந்து செல்கிறோமா? அல்லது நமது தேவைக்கு மட்டும் அவரை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றோமா? கேள்வி உங்கள் முன்னால். பதில்களை நீங்களே சுய ஆய்வு செய்து, தெரிந்து கொள்ளுங்கள். இனி வருகின்ற நாட்களில் நம்மோடு என்றும் இருக்கும் இறைவனை உணர்ந்துக் கொண்டு, இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க, இறையருளை வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
அச்சம் நம்பிக்கையை மறைக்கிறது ... (15.10.2021)
புதன், 13 அக்டோபர், 2021
ஆண்டவருக்கு ஏற்புடையவராக...(14.10.2021)
செவ்வாய், 12 அக்டோபர், 2021
நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....(13.10.2021)
திங்கள், 11 அக்டோபர், 2021
தூய்மையால் வாழ்வு சாத்தியம்...(12.10.2021)
ஞாயிறு, 10 அக்டோபர், 2021
அடையாளங்களைத் தேடுவதை விட நாமே அடையாளமாவோம்...(11.10.2021)
சனி, 9 அக்டோபர், 2021
நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழி என்ன?(10.10.2021)
ஒரு விவசாயி, தனது விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.அச்சமயம் ஒரு தந்திரமான விவசாயிடம் இருந்து கிணற்றை விலைக்கு வாங்கினார். பின் அந்தத் தந்திரமான நபர், அந்த விவசாயியைக் கிணற்றில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார்.விவசாயி,” ஏன் நீர் எடுக்கக்கூடாது?” என்று கேட்டதற்கு, “நான் உனக்கு கிணற்றை தான் விற்றேன். நீரை அல்ல!”என்று கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்றார்.
இதை குறித்து விவசாயி, அக்பர் அரசின் மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கிய ‘நீதியரசர் பீர்பால்’ அமைச்சராக இருக்கும் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை நன்கு கேட்டறிந்த பீர்பால் வழக்கின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.
அச்சமயம் இருவரின் வாதத்தையும் கேட்டுவிட்டு, பீர்பால்,” தந்திரமான விவசாயி கூறுவது நியாயம்தான்.” என்று கூறி,ஒரு நிபந்தை இட்டார். “கிணறு விற்கப்பட்டது; ஆனால் நீர் விற்கப்படவில்லை; ஆகையால், நீங்கள் கிணற்றில் இருக்கும் நீரை இன்றே அகற்றிவிட வேண்டும்; இல்லையேல் நீர் அவருக்கே சொந்தமாகிவிடும்.” என்று அந்த நிபந்தனையே தீர்ப்பாக வாசித்தார்.
அந்த தந்திரமான விவசாயியும், தன் தவறை உணர்ந்து விவசாயி நண்பரிடம் மன்னிப்பு கேட்டார்.
ஞானம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று இந்த ஞானமே இறைவனது வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு இந்த சமூகத்தில் நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த ஞானமே நம்மை சிறுமைப்படுத்தி மற்றவரை பெருமைப்படுத்தும் இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்கள் அரங்கேறும் அதற்கு வழிவகுக்கின்றன என்றால் அது மிகையாகாது.
ஞானத்தின் துணைகொண்டு இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்க பகிர்ந்து வாழுகின்ற போது தான் நிலை வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்ள முடியும் மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தே தீரவண்டும் மரணத்தை சந்தித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ஞானத்தின் துணைகொண்டு இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் செய்த அனைத்து நல்ல பண்புகளும் நல்ல செயல்களும் நம் மறைவுக்குப் பின்னும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.... அவை எப்போதும் நம் நினைவை இந்த மண்ணகத்தில் நிலைநிறுத்திக் கொண்டே இருக்கும் இதுவே நிலைவழ்வு எனக் கருதலாம் நிலைவாழ்வு என்றால் இறப்புக்குப் பின்னான வாழ்வு என்று பொருள் கொள்வது உண்டு இந்த இறப்புக்குப் பிறகு இருக்கின்ற வாழ்வு என்பது இந்த மண்ணில் நாம் செய்த நன்மைகளின் அடிப்படையில் இறைவார்த்தையை வாழ்வாக்கி அதன் அடிப்படையில் ஞானத்தோடு இந்த சமூகத்தில் நாம் செயல்பட்ட தருணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது நினைவை இந்த மண்ணில் நிலை நிறுத்திக் கொண்டே இருக்கின்றன இவைதான் நிலைவாழ்வு என பொருள் கொள்ள முடியும். இத்தகைய நிலை வாழ்வை நாம் நமது வாழ்வில் உரிமையாக்கிக் கொள்வது மிகவும் எளிது இந்த நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையின் அடிப்படையில் ஞானத்தின் துணைகொண்டு ஒவ்வொரு செயலையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து எது சமூகத்திற்கு நல்லது எது அடுத்தவருக்கு நன்மை பயக்கும் அவைகளை இந்த சமூகத்தில் கண்ணில் காணக்கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இயேசுவின் சீடர்கள் நாம் என்பதன் அடிப்படையில் சக மனிதர்களையும் மதித்து அவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டவர்களாய் நலமா அனைவரும் நலமா இந்த சமூகத்தில் அனுதினமும் செய்திடல் வேண்டும் அவ்வாறு செய்கின்றபோது நாம் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அப்பன் புகழ் எப்போதும் என்றும் நிலையாக இம்மண்ணில் நிலைத்திருக்கும். இயேசு இத்தகைய பண்புகளைக் கொண்டு இருந்த காரணத்தினால்தான் இருந்தும் அவர் உயிர்த்து இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இயேசுவின் செயல்பாடுகள் நமது செயல்களாக மாற வேண்டுமென்றால் ஞானத்தின் துணைகொண்டு இறைவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும் அவ்வாறு மாறுகின்ற போது நிலை வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்வோம் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இருப்பதை எல்லாம் விற்று இல்லாதவருக்கு கொடு என்று கூறிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழியை கண்டு கொள்வோம் அந்த வழியில் பயணித்து நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முயற்சிகளில் ஈடுபடுவோம் எல்லா ஆற்றலும் நிறைந்த இறைவன் நம்மை வழிநடத்தி நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள உதவி செய்ய வேண்டி அவரது இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்....
இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
திருமண திருப்பலி முன்னுரை அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது இல்வாழ்க்கையில் அன்போடும் அறத்தோடும் விளங்கினால் ...