ஞாயிறு, 24 அக்டோபர், 2021

தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...(25.10.2021)

தூய ஆவியாரால் இயக்கப்படும் மக்களாவோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்கள் கடவுளின் மக்கள்....

மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரின் உள்ளத்திலும் நிறைந்து இருப்பவர் தூய ஆவியார்... இந்தத் தூய ஆவியானவர் நமக்குள் இருந்து நமக்கு நன்மை தீமைகளை எடுத்துரைத்து சரியான பாதையில் பயணம் செய்ய, கடவுளின் மக்களாக வாழ்வதற்கு நமக்கு வழிகாட்ட  கூடியவராக இருக்கின்றர்.

இவர் காட்டுகின்ற வழிகளைப் பின்பற்றி நமக்குள் இருக்கும் தூய ஆவியானவரின் குரலுக்கு செவிமடுத்து நாம் இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது ... பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையை கொண்டவர்களாய் கடவுளை அப்பா என அழைக்கின்ற  உரிமை பெற்றவர்களாக மாறுகிறோம் ...இதையே இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.


கடவுளின் பிள்ளைகள் என்று உரிமை பெற்றுக் கொண்ட நாம் அனைவரும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவைப் போல செயல் ஆற்றிட அழைக்கப்படுகின்றோம்.  

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி கடவுள் விரும்பும் மக்களாக நாம் வாழ்ந்திட பல பாடங்களை நமக்கு தம் வாழ்வு வழியாக கற்பித்தார். அவற்றுள் ஒன்றுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. 

பல ஆண்டுகளாக  பேய்பிடித்து உடல் உபாதைகளை அனுபவித்து வந்த பெண்மணிக்கு ஆண்டவர் நலம் தருகின்றார் ஆனால் அதைப் ஏற்றுக்கொள்ள இயலாத மறைநூல் அறிஞர்கள் மக்களைச் சாடுகிறார்கள்.
இயேசுவின் பணிகளை ஏற்றுக்கொள்ள இயலாத பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும் பல நேரங்களில் இயேசுவின் செயல்களில் குற்றம்சாட்ட கூடியவர்களாய் இயேசுவைத் தொடர்ந்து பின்தொடர்ந்தார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து இவர்களை பெரிய தடையாக எண்ணாது, தொடர்ந்து  எப்போதும் தான் செய்யக்கூடிய நல்ல பணிகளை முன்னெடுத்தவர் பயணித்துக் கொண்டிருந்தார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற நாம் நமக்குள் இருந்த செயலாற்றுகின்றது தூய ஆவியாரின் தூண்டுதலை உணர்ந்தவர்களாய் எப்போதும் இறைவன் இயேசுவைப் போலவே நல்ல பணிகளை முன்னெடுத்த இந்த சமூகத்தில் பயணம் செய்ய வேண்டும்.  மனித மனங்களைக் கவர வேண்டும் என்ற வெளிவிடத்தன்மை இல்லாது, நாம் வாழும் சமூகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் நாம் செய்கின்ற நல்ல செயல்களை ஏற்கவேண்டும், முதன்மைப்படுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டு பயணிக்காது தொடர்ந்து தூய ஆவியாரின் தூண்டுதலால் இயக்கப்படக்கூடிய நல்ல மக்களாக இயேசுவைப் போல இச்சமூகத்தில் வாழவும் நம்மை சார்ந்து இருக்கின்ற உறவுகளை இயேசுவின் பாதையில் தூய ஆவியானவரின் தூண்டுதலால் இயக்கப்பட கூடிய மக்களாக வளர்த்தெடுக்கவும் இறைவன் அருள் தர வேண்டி தொடர்ந்து  ஜெபிப்போம் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...