வெள்ளி, 29 அக்டோபர், 2021

முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? (30.10.2021)

முதன்மையான இடம் பெறுவதா? தரப்படுவதா? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் முன்னிலை என்பது அது எனக்கானதாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல நேரங்களில் பல இடங்களில் முதன்மையான இடத்தை நோக்கி பயணிக்க கூடிய சராசரி மனிதர்கள் நாமும் ஒருவராக தான் பல சூழல்களில் திகழ்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து முதன்மையான இடம் நாம் தேடிப் பெறுவதல்ல தானாக நமக்கு தரப்பட வேண்டும்  என்பதை எடுத்துரைக்கிறார். 
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மையை செய்தால் அவர் பாராட்டையும் புகழையும் எதிர்பார்த்து எதையும் செய்யவில்லை மாறாக மனிதநேயத்தை மனதில்கொண்டு எப்போதும் நல்ல செயல்களை முன்னெடுத்தவர் ஆகிவிட்டார் எனவேதான்முதன்மையான இடம் என்பது இயேசுவைத் தேடி வந்தது.

நமது காலத்தில் வாழ்ந்து மறைந்து புனிதராக என்று திரு அவையால் நினைவுகூரப்பட்டு கொண்டிருக்கக்கூடிய புனித அன்னை தெரசா தனது வாழ்வில் முதன்மையான இடத்தை தேடி செல்லவில்லை மாறாக கடைநிலையில் இருந்த கவனிப்பாரற்றுக் கிடந்த ஏழை எளிய வரை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் அதன் விளைவு முதன்மையான இடம் அவரைத் தேடி வந்தது என்பதை நாம் அறிவோம். 



மற்றவர் பார்வைக்காகவும், மற்றவர் முன்பாக புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடும் முதன்மையான இடங்களை நோக்கிச் சொல்வதைவிட ஆண்டவரின் பார்வையில் முதன்மையான இடத்தைப் பெற தகுதி பெற்றவர்களாக நாம் விளங்க வேண்டும் என்ற மையச் சிந்தனையை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.

ஆண்டவரின் பார்வையில் முதன்மையான இடத்தினைப் பெற நம்மை தகுதி பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனது அருளையும்,  தூய ஆவியானவரின் துணையையும் வேண்டி இன்றைய நாள் இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம் .

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...