செவ்வாய், 30 நவம்பர், 2021
பரிவு காட்டிட...(1.12.2021)
திங்கள், 29 நவம்பர், 2021
புனித அந்திரேயாவும் நம்பிக்கையும்...(30.11.2021)
ஞாயிறு, 28 நவம்பர், 2021
மனித நேயத்தோடு ...(29.11.2021)
சனி, 27 நவம்பர், 2021
விழிப்போடு எதிர்நோக்கிட.... (28.11.2021)
ஆண்டவரை எதிர்நோக்கி....(28.11.2021)
வெள்ளி, 26 நவம்பர், 2021
உள்ளத்தை மந்தமடைய செய்வது எவை?(27.11.2021)
வியாழன், 25 நவம்பர், 2021
வாக்கு மாறாத கடவுள்...(26.11.2021)
புதன், 24 நவம்பர், 2021
அவரது பின்னே பயணம் செய்ய...(25.11.2021)
செவ்வாய், 23 நவம்பர், 2021
வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...(24.11.2021)
திங்கள், 22 நவம்பர், 2021
வெளிப்புறமா...? உட்புறமா...?(23.11.2011)
ஞாயிறு, 21 நவம்பர், 2021
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011
முன்னுரை:
இறையேசுவில் பிரியமானவர்களே! இன்று கல்லறையில் மரித்தவர்களுக்காக நாம் விழா எடுக்கிறோம். நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டுகிறது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருள்கொடை மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அல்ல. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களை கட்டியெழுப்ப நடத்திக்காட்டிய போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள். கிறிஸ்தவனின் சாவு அழிவாக பார்க்கப்படுவதில்லை மாறாக வாழ்வுக்குச் செல்லும் வழியாக பார்க்கப்படுகின்றது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம் ஆனால் அது நிலைவாழ்வின் தொடக்கம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் என்றுமே வாழ்வர். நாம் வாழ்வை மிகுதியாய் பெரும் பொருட்டே நம்மிடையே கறிஸ்து வந்தார். இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது மன்றாட்டுகளும. திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும் தேவைப்படுகின்றன. எனவே தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில் அக்கறை காட்டுகிறது எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக இந்த திருப்பிலியில் மிக உருக்கமுடன் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: (எசா25:6,7-9)
நம் துன்பங்களை, துயரங்களை, பாவங்களை நாமே மேற்கொள்ளும் அளவிற்கு நாம் பெரியவர்கள் அல்ல மாறாக கடவுளிடம் சரணடைவதே மேல். ஏனென்றால் அவர் ஒருவரே சாவை வெல்ல செய்து நமக்கு மறுவாழ்வெனும் சந்தோசத்தை, அவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்திருக்க அருள்தருபவர் அவர் ஒருவரே எனக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: (1கொரி 15:20-28)
சாவு என்பது கடந்து செல்வதாக இருக்கின்றது. இவற்றில் இரு இயக்கங்கள் உள்ளன. ஒன்று மனிதன் தம்மை முற்றிலும் இறைவனுக்கு கொடுத்தல், மற்றொன்று மனிதனின் அச்செயலை இறைவன் ஏற்றுக்கொள்ளல். கல்வாரி மலையில் இயேசு தம்மையே தந்தையிடம் அர்பணித்தார், தந்தையும் அவரை ஏற்றுக்கொண்டார் அதன் அடையாளம்தான் உயிர்ப்பு என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
எம் இறைவா, உம் அன்புத் திருச்சபையை காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
நீதியின் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்பு இறைவா, எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருவுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்பின் இறைவா, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கடவுளின் கவனத்தைப் பெற்றிட...(22.11.2021)
சனி, 20 நவம்பர், 2021
கிறிஸ்து அரசர் பெருவிழா...(21.11.2021)
வெள்ளி, 19 நவம்பர், 2021
வானதூதர்கள் போல வாழ....(20.11.2021)
வியாழன், 18 நவம்பர், 2021
ஆலயத்தின் மகத்துவம் அறிவிப்பது நமது கடமை ...(19.11.2021)
புதன், 17 நவம்பர், 2021
ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட...(18.11.2021)
செவ்வாய், 16 நவம்பர், 2021
பொறுப்போடு செயல் பட்டால் புது வாழ்வு கிட்டும் ....(17.11.2021)
பொறுப்போடு செயல் பட்டால் புது வாழ்வு கிட்டும் ....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காற்றில் ஒரு மயிலிறகு பறந்து வந்தது. அந்த மயிலிறகை எடுத்த ஒரு ஓவியன் அதைக்கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தார். அதே மயில்இறகு மீண்டும் பறந்து சென்றது. அது ஒரு மருத்துவரின் கையை அடைந்தது. மருத்துவர் அதை எடுத்து காயப்பட்ட ஒருவனின் காயங்களுக்கு மருந்திட்டார். மீண்டும் அதே மயிலிறகு பறந்து சென்று ஒரு இளைஞனின் கைக்குச் சென்றது. அவன் அதில் இருக்கக்கூடிய சிலவற்றை நீக்கிவிட்டு அதைக் கொண்டு தனது காதைக் குடைய கூடியவனாக இருந்தான். ஒரே மயிலிறகு தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதனை பயன்படுத்தினர். இறைவனும் இந்த மயிலிறகை போலத்தான் இந்த மனித வாழ்வை நம் அனைவருக்கும் ஒன்றாகவே தந்திருக்கின்றார். இறைவன் தந்திருக்கும் இந்த அழகிய வாழ்வில் நாம் நமது பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து சிறப்புடன் செயல்படக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தவர், பெரிய பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டதை வாசிக்க கேட்டோம். நம்மிடமும் இறைவன் பலவிதமான பொறுப்புகளை கொடுத்து இருக்கிறார். இறைவன் கொடுத்துள்ள பொருப்புகளை எல்லாம் உணர்ந்துகொண்டு... நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் நலமான நல்ல பணிகளை அனுதினமும் முன்னெடுக்க கூடியவர்களாக, சின்னஞ்சிறிய காரியங்களில் கூட நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை உணர்ந்து இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவர் நமக்கு தந்திருக்கின்ற விலைமதிக்க முடியாத வாழ்க்கை என்ற இந்த பரிசினை நாம் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி பலருக்கும் பலன் தரக்கூடிய வாழ்வை வாழ இறைவன் அருள் வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்...
திங்கள், 15 நவம்பர், 2021
இறைவனை ஏற்றால் மண்ணகத்தில் மீட்பு சாத்தியமாகும்....(16.11.2021)
ஞாயிறு, 14 நவம்பர், 2021
பார்வை பெறுவோம்....((15.11.2021)
வெள்ளி, 12 நவம்பர், 2021
இறை வார்த்தைகள் வாழ்வாகட்டும்...இறுதி நாள் நமதாகட்டும்.....(14.11.2021)
நம்பிக்கையால் இணைந்திருப்போம்.....(13.11.2021)
வியாழன், 11 நவம்பர், 2021
இயேசுவின் பிம்பமாக....(12.11.2021)
இயேசுவின் பிம்பமாக....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களை இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பகல் இரவு காக காத்திருக்கிறது.
இரவு பகல் உகாக காத்திருக்கிறது.
சூரியன் நிலவுகாக காத்திருக்கிறது.
நிலவு சூரியனுக்காக காத்திருக்கிறது.
காத்திருத்தல் என்பது ஒருவிதமான சுகம்... கிறிஸ்தவர்களாகிய நாமும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றோம்.
எப்போது வரும் எப்படி வரும் என தெரியாது ஆனால் திடீரென நாம் எதிர்பாராத நேரத்தில் மானிட மகன் வந்தே தீருவான்... ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் நமது வாழ்வில் இறைவன் வெளிப்படுத்துகின்ற அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு நமது வாழ்வை சீர் தூக்கிப் பார்த்து அவரின் வருகைக்கு நம்மை தயார் படுத்த இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
உலகில் உள்ள துன்பங்கள், அழிவுகள் அனைத்தும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மூலம் முடிவுக்கு வரும். அனைத்துப் படைப்புகளும் கிறிஸ்துவினால் புத்துயிர் பெறும். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ள அழிவுக்குப் பிறகும், லோத்துவின் காலத்தில் சோதோம் கொமாரா வில் ஏற்பட்ட அழிவுகளிலும் கடவுளின் மாட்சி வெளிப்பட்டது போல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது கடவுளின் மாட்சி இந்த உலகில் வெளிப்படும். அப்போது கிறிஸ்துவின் பிம்பங்களாக இருந்து பிறருக்கு உதவி செய்த நல்லவர்கள் முதலில் மீட்படைவர். இதுதான் நம் நம்பிக்கை.
இன்று வெள்ளப்பெருக்கு, பெருந்தொற்று போன்றவற்றால் அவதிப்படுகின்ற மக்களுக்கு இயேசுவின் பிம்பமாக இருந்து உதவி செய்ய வேண்டும். நாம் கிறிஸ்துவின் பிம்பமாக மாறி கடவுளை மாட்சி படுத்த வேண்டும்.
நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளிலும் அடையாளங்களிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதையும் உணரக்கூடிய ஞானத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகிறார். மானிட மகன் வருகையின் போது ஏற்படும் அடையாளங்களைக் அறிய ஞானத்தோடு நம்மையே நாம் தயார் செய்ய வேண்டும் என இயேசு கூறுகிறார்.எனவே ஞானத்தோடு கடவுளை அறிந்து அவருடைய வருகைக்காக தயார் செய்ய முயற்சி செய்வோம்.
புதன், 10 நவம்பர், 2021
கிறிஸ்துவின் மனநிலையில் ...(11.11.2021)
செவ்வாய், 9 நவம்பர், 2021
நன்றியுள்ளவர்களாகிட....(10.11.2021)
இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
திருமண திருப்பலி முன்னுரை அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது இல்வாழ்க்கையில் அன்போடும் அறத்தோடும் விளங்கினால் ...