ஞாயிறு, 19 மே, 2024

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
      இன்றைய முதல் வாசகம், முதல் பெற்றோரின் பாவத்தை சுட்டிக் காட்டுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் முதல் பெற்றோரின் பாவத்தால் இழந்த உறவை மீண்டும் இறைவன் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக, தன்னுடைய ஒரே தாயை நமக்குத் தாயாக கொடுத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்கின்றோம். இந்த இறை வார்த்தைப் பகுதிகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கிற போது ஆண்டவர் நமக்கு கொடுத்த அன்புத் தாயாகிய அன்னை மரியாவின் மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொண்டு அன்னை மரியாவின் வழியாக ஆண்டவரிடத்தில் இறை வேண்டலை முன்னெடுக்கவும், அன்னை மரியா ஆண்டவருக்கு உகந்த வாழ்வை தம் வாழ்வாக அமைத்துக் கொண்டது போல நீங்களும் நானும் நமது வாழ்வை அன்னை மரியாவின் வாழ்வு போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் நமது வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த வாழ்வுக்கான பாடத்தை வெறும் வார்த்தையாக எண்ணி கடந்து விடாமல், இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக இந்த அகிலத்தில் கடவுளின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாக கையளித்து வாழ்ந்த அந்த அன்னையை நமக்கு அன்னையாக கொடுத்த ஆண்டவருடைய பண்பை உணர்ந்து கொண்டவர்களாக நீங்களும் நானும் அன்னை மரியாவைப் போல் அகிலத்தில் பல அறப்பணிகளை முன்னெடுக்கவும், ஆன்மீகப் பணிகளை முன்னெடுக்கவும், ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...