சனி, 18 மே, 2024

இவரது சான்று உண்மையானது!(18-05-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இன்றைய இறை வார்த்தையானது, இறைவன் மீது ஆழமான அன்பு உறவு கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் சமகாலத்தில், இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யோவான் இயேசுவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தார் என்பதும், இந்த யோவானுக்கு அழிவு என்பது இல்லை என்பதும் இயேசுவின் சீடர்களின் மன நிலையாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் இவருக்கு என்னவாகும் என்று கேள்வியை இயேசுவை நோக்கி எழுப்பிய போது ஆண்டவர் அதே அன்பு கொண்டவர்களாக ஒவ்வொருவரும் தமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.. இந்த யோவானை போலவே நீங்களும் நானும் இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டவர்களாக யோவானை போலவே இயேசுவுக்கு சான்று பகருகின்றவர்களாக இயேசுவைப் பற்றி இறுதிவரை அறிவிக்கின்ற நபர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இந்த இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். இந்த இறைவா வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்திக்கொண்டு ஆண்டவர் இயேசுவை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பகைவரிடமும் அன்பு கூருங்கள்! (17-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...