இன்றைய இறை வார்த்தையானது தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
தூய ஆவியானவரின் குரலுக்கு இயேசுவின் சீடர்கள் செவிகொடுத்தார்கள். அதன் விளைவாக யாருக்கெல்லாம் அஞ்சி நடுங்கி பயந்து போனார்களோ அத்தகைய மனிதர்களின் முன்னிலையில் போய் நின்று இயேசுவின் இறப்பை குறித்தும் உயிர்ப்பை குறித்தும் உறுதியோடும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக தங்கள் வாழ்வை அவர்கள் மாற்றிக் கொண்டார்கள் இந்தத் தூய ஆவியானவருக்கு நாமும் செவி கொடுக்கிற போது, இந்த அகிலத்தில் இருக்கின்ற அநீதிகளைக் கண்டு அஞ்சாமல், நீதியையும் உண்மையையும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை சீடர்களின் சீடர்களின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடமாக கற்றுக்கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம்.
நமக்கு நன்மை தீமையை எடுத்துரைக்கும் அத்தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக