வியாழன், 23 மே, 2024

நிலை வாழ்வை நோக்கி! (23-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    இன்றைய இறை வார்த்தையானது, நாம் இயேசுவின் பெயரால் மற்றவருக்கு செய்கின்ற சின்னஞ்சிறிய காரியங்களுக்கான கைமாறை கண்டிப்பாக பெற்றுக் கொள்வோம் என்பதை மனதில் இருத்திக்கொண்டு, தவறுகளை குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்தவர்களாக, இந்த அகிலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை நமது வாழ்வின் வாழ்வுக்கான பாடமாக இன்றைய இறைவார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ள நாம் அத்தனை பேரும் அழைக்கப்படுகிறோம். 

   இயேசுவின் பெயரால் எத்தனை விதமான இடர்பாடுகளை சந்தித்தாலும், இறைவன் நம்மை காக்க வல்லவர், இடர்பாடுகளுக்கு மத்தியில் நாம் கடந்து செல்வதற்கான ஆற்றலைக் கொடுப்பவர் என்பதை உணர்ந்தவர்களாக, உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக, இயேசுவுக்கு உகந்தவர்களாக, சென்ற இடமெல்லாம் நன்மை செய்த அந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் நன்மைகளை அதிகம் செய்து, ஆண்டவருக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...