வியாழன், 23 மே, 2024

யார் பெரியவர்? (21-5-2024)


 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

       தங்களுள் யார் பெரியவர் என்ற மனநிலையோடு இயேசுவின் சீடர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, சிறு பிள்ளையை முன்னிறுத்தி என் பெயரால் இச்சிறு பிள்ளையை ஏற்றுக் கொள்ளுகிறவரே எனக்குரியவர் என்ற வார்த்தைகளை இயேசு உதிர்க்கின்றார். 
             குழந்தைக்குரிய மனநிலை கொண்ட மனிதர்களாக நாம் வாழுகிற சமூகத்தில் எப்படிப்பட்ட நிகழ்வுகளை சந்தித்தாலும், இடர்பாடுகளை சந்தித்தாலும், அத்தனைக்கும் மத்தியிலும் அனைத்தையும் மன்னித்து மனதார மற்றவர்களை ஏற்றுக்கொண்டு, நம்மால் இயன்ற நன்மைத்தனங்களை அவர்களுக்கு செய்கிற நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுவது ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வு என்பதை உணர்ந்தவர்களாக, கடவுள் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை இன்றைய நாளில் அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக, இறைவன் விரும்புகிற மக்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை இன்றைய நாளில் நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செல்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...