செவ்வாய், 28 ஜனவரி, 2020

எங்களுக்கு உண்டா எதிர்காலம்?

எங்களுக்கு உண்டா எதிர்காலம்?
அன்புக்குரிய நண்பர்களே, குடியுரிமை மசோதாவால் நாடெங்கும் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. சிறுபான்மையினர் நசுக்கப்படும் நிலை இன்று வெளிப்படையாகவே நடக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பெரும்பான்மையாக நாங்கள் இருக்கிறோம் எனவே நாங்கள் எடுப்பதே முடிவு என்று கூறி எதிர் கட்சிகளையும் மற்ற மக்கள் பிரதிநிதிகளையும் மதிக்காது தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சட்டமாக இயற்ற கூடிய சூழலில் இன்று நமது பாராளுமன்றம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்களிடையே வன்முறையைத் தூண்ட வேண்டாம், எங்களை மதம் ரீதியாகவும், மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிக்க வேண்டாம் என எண்ணக்கூடிய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் இங்கு நடந்தேறுகின்றன. இதனை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்தால் தடியடி பரிசாகக் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு ஓட்டு தான் அளித்தோம் ஆனால், மூன்று முதல்வர்களை கண்டு விட்ட நிலையில் என்ன செய்வதென அறியாது தவிக்கிறார்கள் மக்கள். பெரும்பான்மை இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நியதியை உடைத்து ஒவ்வொருவரின் கருத்தும் மதிப்புமிக்கது என்பதை உணரும் வகையில் பெரும்பான்மையாக இருந்தாலும் நீதி எது என்பதை சிந்தித்து அதையே சட்டமாகும் வகையில் மாற்றப்பட வேண்டும் நமது சட்டத்திருத்தங்கள். பதவிக்கு வந்தவுடன் செயல்படாமல் இருக்கக்கூடிய அதிகாரிகள், சுயநலம் கொண்டு செயல்படக்கூடிய அதிகாரிகள், அதிகாரத்தால் மக்களை அடக்கி ஆளும் தலைவர்கள் இவர்களை எல்லாம் தேர்வு செய்தது மக்களாகிய நாம். நாம் நினைத்தாலும் இவர்களை மாற்ற இயலாத வகையில் சட்டங்கள் உள்ளன. இந்நிலைகள் மாறவேண்டும். மாற வேண்டியது பழைய ரூபாய் நோட்டுக்கள் மட்டுமல்ல அதிகாரம் அளித்த மக்களுக்கு அதிகாரம் கொண்டிருப்பவர் மீது அதிகாரம் இல்லாமல் இருக்க கூடிய நிலையும் மாற்றம் பெற வேண்டும். இத்தகைய சூழலில் கிறிஸ்து பிறப்பை ஒரு கற்பனை செய்து பாருங்கள். நமது அண்டை நாடுகளில் இயேசு பிறந்து இருக்கிறார் என வைத்துக்கொள்வோம் அவரை கொல்வதற்காக அன்று ஏரோது தேடியது போல ஏதோ ஒரு கும்பல் தேடுகிறது. எனவே சூசை அவர்கள் இயேசுவை எடுத்துக்கொண்டு எருசலேமுக்கு அன்று ஓடி அங்கு பல நாட்கள் தங்கியிருந்தார். அதனடிப்படையில் அவர் நசரேயன் எனவும் அழைக்கப்பட்டார். ஒருவேளை இன்று இச்சூழலில் இயேசுவைத் தூக்கிக் கொண்டு சூசை இந்தியாவிற்கு வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள் அவர் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றினால் மட்டுமே இந்த நாட்டிலே தங்க முடியும் இல்லை என்றால் அவரை இந்த நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்கிறது நமது குடியுரிமை சட்ட மசோதா. அந்த மசொதாவில் கிறித்தவர்களுக்கு விதிவிலக்கு இருந்தாலும் கிறிஸ்துவை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே என்று பார்க்க இயலாது. ‘சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நலம்’ என்கிறது திருப்பாடல். ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி எந்த மதத்தினரும் இங்கு வாழலாம் என்ற கோட்பாட்டை உடைக்கும் வகையிலும் மதம் ரீதியாக ஒரு இனத்தை துன்புறுத்தும் வகையிலும் இன்றைய சூழல் நிலவுகிறது. இந்த குடியுரிமை சட்ட மசோதாவால் இன்றைய சூழலில் பலருடைய மனதில் எங்களுக்கு எதிர்காலம் உண்டா? என்ற கேள்வியே பெரும்பாலான சிறுபான்மையினரின் மனதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இப்போது நமக்குத் தேவையானத ஒன்று மட்டுமே. அது நம்பிக்கை என்பதாகும். ஒரு நாள் விடியும் நமக்கு ஏற்றது போல, நாம் விரும்புவது போல, நல்லதொரு மாற்றம் நிகழும், நமக்கும் உண்டு எதிர்காலம். எனவே நம்பிக்கை இழக்காது இருப்பத அவசியமாகம். அகிலத்தில் உள்ள அனைவரும் சமம். நமது தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வார்த்தைகள் எல்லாம் வெறும் மேடையில் பேசும் வெற்று வார்த்தைகள் அல்ல அது உண்மையான அர்த்தம் கொண்டவை அதனை நாம் மனதில் நிறுத்துவோம். ஒருவரை ஒருவர் அன்பு செய்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டவர்களாய் பிறருடைய கருத்துக்களையும் மதித்து இணைந்து வாழ்வோம். வேற்றுமை உள்ள நாட்டில் ஒற்றுமையோடு வாழ்வோம். அதுவே அகிலத்திற்கு முன் உதாரணமாகும். இச்சிந்தனைகளை எல்லாம் நமது உள்ளத்தில் பதிய வைப்பதுதான் இன்றைய சூழலின் முக்கிய நோக்கமாகும். அதிகாரம் கொண்டவர்கள் ஆயிரம் கருத்துக்களை கூறினாலும் அதை எல்லாம் கேட்டு மயங்கி விடாது, அதற்கு நம்மையே நாம் அடிமையாக்கி கொள்ளாது, சுய சிந்தனையோடு அனைவருடனும் அன்பு கொண்டு இணைந்து வாழ இப்புது வருடத்தில் உறுதி ஏற்றுக்கொள்வோம். மனதிலே எங்களுக்கு உண்டா எதிர்காலம்? என்று ஏங்கக்கூடிய மனங்களுக்கு உண்மையோடும், தைரியத்தோடும், சகோதரத்துவ உணர்வோடு சொல்வோம் உங்களுக்கும் உண்டு எதிர்காலம். 

சகோ. சகாய ராஜ்;
அம்மாபேட்டை
புனித பவுல் இறையியல் கல்லூரி 
திருச்சி

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
இயேசுவில் அன்புக்குரிய இறை மக்களே உங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இயேசு ‘வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவரர்க்குவேன்’ என்று கூறி தம்மை பின்தொடர அழைப்பு விடுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்நாட்டிலே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். கணவன் மனைவியின் பின்னும், மனைவி கணவனின் பின்னும், குழந்தைகள் பெற்றோரின் பின்னும், பெரும்பான்மையான இளைஞர்கள் கனவுகளுக்குப் இன்னும், சில தரைவர்களுக்கு பின்னுமாக சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைய நாளில் நாம் யாரின் பின் சென்று கொண்டிருக்கிறோம்? என்பது குறித்து சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது அவர்களிடம் இருந்து விடுதலையை பெற வேண்டும் என்பதற்காக பலர் அகிம்சையை பின்தொடர்ந்தார்கள். சிலர் ஆயுதம் ஏந்தி போருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த எண்ணங்களின் அடிப்படையில் சிலரை பின் தொடர்ந்தார்கள். அன்று உரிமை வேண்டி உரிமைக்காக விடுதலை வேண்டி விடுதலை எண்ணத்தை பின் தொடர்ந்தவர்கள் பலர். அவர்களால் கிடைத்ததே இந்த சுதந்திரம். ஆனால் இன்று நாம் வாழக்கூடிய நாட்டில் ஆளும் ஆட்சியாளர்களிடமிருந்து வாழ்வதற்கான உரிமையை வேண்டி மக்கள் வீதிகளில் களமிறங்கி இருக்கிறார்கள். இச்சூழலில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘என்னை பின் தொடருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்’ என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்பு தருகிறார்.
இயேசுவை பின்தொடர்பவர்கள் மனிதர்களை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதனை இன்றைய நாளில் எவ்வாறு அர்த்தம் கொள்வது?.
இயேசுவைப் பின்தொடர்பவர்கள் சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஒற்றுமையோடு ஒரே இறைவனின் பிள்ளைகளாக  வாழவேண்டும். நாம் வாழும் பொழுது எந்தவித பாகுபாடுமின்றி ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பற்றிய நல்லவிதமான ஒரு ஒற்றுமை உணர்வோடு உறவுகளை வளப்படுத்திக் கொள்வோம். அப்படி வளப்படுத்திக் கொள்வது மனிதரைப் பிடிப்பதாகும்.
இந்த சமூகத்தில் புறம்தள்ளப்பட்ட ஏழைகள், அனாதைகள், தொழுநோயாளர்கள் ஆகியோரை அன்பால் அரவணைத்து ஒன்றிணைத்து வாழ்ந்து அவர்களுக்காக அவர்களுடனே இறந்தவர் அன்னை தெரசா. அவரின் வழியிலேயே அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது இன்று ஆண்டவர் கொடுக்கக்கூடிய அழைப்பாக இருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்பாக கிறிஸ்தவ ஒன்றிப்பு என்னும் பெயரில் அருகில் இருக்கக்கூடிய பிரிவினையை சகோதரர்களோடு இணைந்து வழிபாடுகளில் நாம் பங்கெடுத்தது ஒற்றுமையின் அடையாளம். நம்மிடையே வேற்றுமைகள் பல இருந்தாலும் இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து நாம் வாழ வேண்டும் என்பதன் அடையாளமாகவே அந்நிகழ்வு அமைந்தது. மதத்தின் பெயராலும், கருத்துக்கள் அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொள்வதை விட வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றித்து வாழ்வதே இறைவன் கொடுக்கக்கூடிய அழைப்பாகும்.
சில காட்களுக்கு முன் நமக்கு மதாந்திர தியானம் கொடுத்த அருள்தந்தை. சேவியர் அந்தோணி அவர்கள் நம்மிடம் நிலவக்கூடிய ஒற்றுமையின்மை குறித்து வேடிக்கையாக ஒர சிறுகதையை கூறியுள்ளார். ஒரு கோவிலிலே ஒரு புறா வாசித்து வந்தது. சில நாட்கள் கழித்து அந்த கோவிலை சுத்தம் செய்யத் துவங்கினார்கள். எனவே புறாக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. வெளியேறிய அந்தப் புறாக்கள் அங்கிருந்து நேரடியாக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றது. அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அங்கும் தூய்மைப்படுத்தும் பணி துவங்கியதால் அங்கிருந்து சென்று மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில நாட்கள் கழித்து மசூதியில் இருந்து வெளியேறி மீண்டும் இந்து கோவிலுக்கு சென்றது. மீண்டும் அங்கிருந்து தேவாலயம் அதனைத் தொடர்ந்து மசூதி என வலம் வந்து கொண்டே இருந்தது. அப்புறாக் கூட்டத்திலிருந்து ஒரு சிறிய புறா பெரிய புறாவை நோக்கி கேட்டது நாம் பல இடங்களுக்கு செல்கிறோம் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் நம்முடைய பிளவுகள் இல்லை ஏன் இந்த மனிதர்கள் மட்டும் சண்டையிட்டு பிளைவுபட்டு பிரிந்திருக்கிறார்கள் என்று கேள்வியை எழுப்பியது.
இன்று மதத்தின் பெயரால் நம்மை பிளவுபடுத்தும் சக்திகள் ஏராளமாக உதயமாகி கொண்டிருக்கின்றனர். இன்று நாம் வாழக்கூடிய நாட்டில் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் பலவிதமான நிகழ்வுகள் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இச்சூழ்நிலையில் ஒற்றுமையை விரும்புவர்களாகவும் அதனை பின்தொடர்பவர்களாகவும் நாம் உருவாகிட அழைக்கப்படுகிறோம்.
திருவிவிலியத்தில் திருப்பாடல் 133 இவ்வாறாகக் கூறுகிறது ‘சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது’ என்று. யோவான் நற்செய்தி 17ஆம் அதிகாரம் 21ஆவது வசனம் கூறுகிறது ‘எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று. இந்த குடியரசு நாளில் இறைவன் நமக்கு கொடுக்கக்கூடிய அழைப்பு ஒற்றுமைக்கான அழைப்பு. நாம் ஒருவர் மற்றவரை மதித்து ஒன்றித்து வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தியாக உள்ளது.
மதத்தின் பெயரால் மொழியின் பெயரால் பலவிதமான பிரிவுகளை இன்று பலர் நம்மிடையே விதைக்க முயன்றாலும் அதில் சிக்கிக் கொள்ளாமல் நாம் ஒருவரை ஒருவர் மதித்தும், ஏற்றுக் கொண்டும் மனிதர் என்னும் முறையில் ஒன்றித்து வாழ நாம் இன்றைய நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம். ஓன்றுபட்டு வாழும் போது நாம் ஆண்டவர் இயேசு கூறியது போல ‘மனிதர்களை பிடிப்பவராகுவோம்’ மனிதரை பிடிப்பவராகும் போது சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களோடு உறவு கொண்டவர்களாக நாம் உருமாறுவோம். நம்மிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமை உணர்வோடு ஒன்றித்து வாழ அருள் வேண்டியவர்களாக இந்த திருப்பலியில் தொடர்ந்து பயணிப்போம்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்
எங்கள் அனைவரின் தாயும், தந்தையும், சக்தியும், வல்லமையுமான இறiவா! இந்த மாலை பொழுதினிலே உமது அன்பு பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் கிறிஸ்துவினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் இங்கு கூடிவர வாய்ப்பு கொடுத்ததற்காக உண்மை வாழ்த்துகிறோம். உம்மை ஆராதிக்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம்.
 இந்த அருமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு பெருவிழாவில் எமக்கு முன்பாக இந்தப் பகுதியில் உண்மை பற்றி பேசி, போதித்து, உண்மை பற்றிய அறிவை என் முன்னோருக்கு வாரி வழங்கி உமது பிள்ளைகளாக எங்களை மாற்றிய எத்தனையோ நற்செய்தி தூதுவர்களை நினைத்துப்பார்த்து அவர்களுக்காக நன்றி கூறுகிறோம். அவர்களுடைய தியாக வாழ்வுக்காகவும், அவர்களுக்கு அந்த ஆற்றலையும், திறமைகளையும் வழங்கிய உமது அளப்பரிய கிருபைக்காகவும் நன்றி கூறுகிறோம்.
தொடர்ந்து உமது சொல்லண்ணா அன்பை தேவரீர் இவ்வுலகின் மீது நீர் கொண்டுள்ள கருணையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல, எடுத்துச் செல்ல தகுதியான ஊழியக்காரர்களையும் எங்களுக்கு வழங்கி கொண்டு இருப்பதற்காகவும் நன்றி கூறுகிறோம்.
நல்ல தகப்பனே உம்மை புரிந்துகொள்வதின் அடிப்படையில் அவர்களிடையே வித்தியாசங்கள் இருப்பினும் அவைகள் எல்லாம் தாண்டி நீர் எம் அனைவருக்கும் தந்தை நாங்கள் அனைவரும் உமது அன்புக்குரிய பிள்ளைகள் என்ற உணர்வையும் உண்மையையும் எங்களிடம் உருவாக்கியுள்ள உமது கிருபைக்கு நன்றி கூறுகிறோம்.
அதனடிப்படையில் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் போதித்த அன்பு, கனிவு, அமைதி, மகிழ்ச்சி, நீதி போன்ற நற்செய்தியின் மதிப்பீடுகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையின் வழியாக போதிக்கின்ற நடமாடும் நற்செய்தியாளர்களாக இவ்வுலகில் திகழ்ந்திட தேவையான வரங்களால் எங்களை உடுத்தியருளும்.
நாங்கள் சந்திக்கின்ற மக்கள் அனைவரும் எங்களில் உம் திருமகன் இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், நீதி நேர்மையையும் கண்டு உம்மைப் போற்றிப் புகழவரமருளும். இவ்வாறாக நாங்கள் நற்செய்தியின் தூதுவர்களாக இவ்வுலகினருக்கு ஒளியாகவும், உப்பாகவும், வழியாகவும், வாழ்வாகவும் மாற உம் அருளினாலும் ஆற்றலினாலும் எம் பணிக்கு மெருகூட்டும்.
மேலும் நாங்கள் இவ்வுலகில் நலமோடும், வளமோடும் வாழ தேவையான வசதி வாய்ப்புகளை எங்களுக்கு தாரும். சிறப்பாக எங்கள் குடும்பங்களில் ஒற்றுமை, சமாதானம், மகிழ்ச்சி, உடல்நலம் நிலவும் படி செய்தருளும். எங்கள் படிப்பு, பணி, தொழில், வியாபாரம், வர்த்தகம், வேளாண்மை, கால்நடைகள், எங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கொடுக்கவும் செய்தருளும்.
இறுதியாக நாங்கள் அனைவரும் உம் அன்புக்கு சாட்சியாக வாழ்ந்து நீர் விரும்பும் முதுமை அடைந்து வான் வீட்டில் உயிர்த்த ஆண்டவர் கிறிஸ்துவோடும், சகல புனிதர்கள் அனைவரின் தோழமையில் உறவுகொண்டு உண்மை எக்காலமும் அங்கு புகழவும், வாழ்த்தவும் வரமருள்வீராக.
பலவீனங்கள் என்று எங்கள் ஜெபங்களை புறக்கணியாமல் எம்மவரின் ஆழமான நம்பிக்கையை கண்ணோக்கி எம் மன்றாட்டுகளுக்கு கனிவாய் செவிசாயும் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே.  ஆமென்.



நீ

நீ 



சிறிய விதை தான் ஆனால் உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது பிரம்மாண்டமான மரம் உன் வேர்களுக்கு பூமியும் எல்லை இல்லை இல்லை உன் கிளைகளுக்கு வானமும் எல்லை இல்லை உன் கிளைகள் நட்சத்திரங்களை நோக்கி கிடைக்கட்டும்


வாழ்வையும் நமது எண்ணத்தையும் ஒரு மலருக்கு ஒப்பிட்டு பார்க்கலாம் நமது எண்ணங்களை ஒரு மலருக்கு காட்சிபடுத்தி பார்க்கும் போது அதனுள் ஒரு வரலாறு புதைந்து இருப்பதை காணலாம் ஒவ்வொரு ஒரு பரிமாண வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்திக்க வேண்டிய தளர்ச்சிகளும் இல்லாமலில்லை...



வாழ்க்கை என்பது எண்ணங்களின் அடிப்படையில் அமைந்திருப்பது....

நமது எண்ணங்களே நமது வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறது.


ரவியும் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள் ஒரு நாள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்கள் வேலை சென்று விட்டு வந்ததால் களைப்பில் வீட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் மனைவியை நோக்கி தேநீர் கொண்டு வா என்று கூறினார் ராஜாவின் மனைவி தேநீரை தயார் செய்து ராஜாவிடம் கொண்டுவந்து கொடுத்தார் தெரிந்தோ தெரியாமலோ அந்த தேனிருக்கும் ஒரு எறும்பு இருந்தது அதை கண்டதும் நிதானம் இழந்த வராய் ராஜா தன் மனைவியைத் திட்ட மனைவியும் பதிலுக்கு திட்ட வீடு இரண்டாக மாறியது.... போலவே ரவியும் வீட்டிற்கு சென்றார் வேலையின் களைப்பு காரணமாக நாற்காலியில் அமர்ந்து தன் மனைவியை நோக்கி தேனீர் கொண்டுவா என்று கூறினார் தேநீர் கொண்டு போய் கொடுத்தால் அந்த தேநீரிலும் ஒரு எறும்பு கிடந்தது கண்டதும் ரவி புன்னகை பூத்த வரை மனைவியை நோக்கி கூறினார் நீ உன் வாழ்நாளில் தேநீர் தயாரிப்பதை நிறுத்தி விடாதே ஏனென்றால் நான் நினைத்துக்கொண்டிருந்தேன் உன்னுடைய தேன் இருக்கு நான் தான் மிகப்பெரிய ரசிகன் என்று ஆனால் என்னையும் மிஞ்சும் அளவிற்கு ஒருவன் எனக்கு முன்பாக அதை குடிக்க சென்று தன் உயிரையும் விட்டு விட்டான் என்று தேனீர் கோப்பையில் இருந்த இரும்பை காண்பித்தார்....

மனைவியும் அதனை எடுத்து வெளியே போட்டால் அதன் பிறகு அவள் போட்ட எந்த தேநீரிலும் எரும்பு இழக்கவில்லை...


வாழ்விலும் நிகழ்ந்தது ஒரே நிகழ்வு தான் ஆனால் இருவரும் கையாண்ட விதம் அதை பார்த்த விதம் வேறாக இருந்தது நாம் எதையும் நேர்மறையான எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது அங்கு உறவு வளர்கிறது நேர்மறையான எண்ணங்களை கடல்கடந்து எதிர்மறை எண்ணங்களோடு நோக்கும் பொழுது அங்கு உறவில் விரிசல் ஏற்படுகிறது... 


புத்தாண்டில் நாம் புத்தொளி பெற்றவர்களாகவும் நல்ல புதிய எண்ணங்கள் கொண்டவர்களாகவும் வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்....


இவ்வுலகில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செயலை நமக்கு நினைவுபடுத்திய அல்லது கற்றுக் கொடுத்துவிட்டு தான் செல்கின்றன அந்த அடிப்படையில் இன்று நமது நாட்டை உலுக்கி கொண்டிருக்க கூடிய மிகப் பெரிய பிரச்சனை என்றால் என்ன என்று பார்த்தால் அது குடியுரிமை சட்ட மசோதா இதனால் இஸ்லாமியர்களும் இலங்கையில் இருந்து குடியேறியவர்கள் பலவாறு பல இன்னல்களுக்கும் தங்களது உரிமையை இழந்தவர்கள் ஆகவும் மாறுகிறார்கள்....


இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன இருப்பது ஒரு காணி நிலமாக இருந்தாலும் அதனை அனைவரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே நம் முன்னோரின் நோக்கமாகவும் அவர்களின் செயலாகவும் இருந்திருக்கிறது....


வந்தோரை வரவேற்று அவர்கள் என்று கூறிவந்த நாம் என்று இருப்போரை வெளியேற்றுவதற்காக ஒரு சட்டத்தை அரசு இயற்றியது இயற்றியுள்ளது..


இதை எத்தகைய கண்ணோட்டத்தோடு காண வேண்டுமென சிந்தித்தபோது இன்றைய தலைப்பு நமக்கு உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்...


சில நாட்களாக நாட்களாகவே நம்முடைய நாட்டில் ஒற்றுமையின்மை நிலவி வருகிறது நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்தி பலர் பல விதமான பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் குடியுரிமை சட்ட மசோதா மூலம் நம்மை பிரித்தாலும முயற்சியில் பலர் ஈடுபடுகிறார்கள் இத்தகைய நேரத்தில் புதிய எண்ணம் கொண்டவர்களாய் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்தவர்களை இணைந்து நின்று அனைவரும் இருப்பதை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே நம் உள்ளத்தில் ஆழமாக இயல்பாக உருவாக வேண்டியதாகும் இதுவே இறைவன் திரும்ப கூடியதுமாகும்...

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது பலவிதமான வார்த்தைகளைப் பேசினார் அவருடைய வார்த்தைகள் பலருக்கு ஆறுதலையும் பலருக்கு உடலிலுள்ள சுகத்தையும் ஊக்கப்படுத்த கூடிய வார்த்தைகளாக இருந்தன அவருடைய வார்த்தைகளில் பலரை ஊக்கமூட்டி எதற்கும் பலரை குணமாக்கிய இதற்கும் காரணம் அவருடைய எண்ணங்கள் அவ்வாறாக இருந்தன நமது எண்ணங்கள் எப்படி இருக்கின்றன நாமும் இயேசுவைப் போல நல்லெண்ணம் கொண்டவர்கள் உருவாவது எப்போது…


4. இளைஞனே ஆற்றலோடு மாற்றம் நோக்கி...

இளைஞனே ஆற்றலோடு மாற்றம் நோக்கி...


“நீ இளைஞன் அது போதும் எனக்கு” என்ற புனித தொன் போஸ்கோவின் வார்த்தைகளின் அடிப்படையில் இளைஞனே துணிந்து வா… ஆற்றலோடு மாற்றத்தை நோக்கி நாம் செல்வோம்… சமூகத்தையும் அழைத்துச் செல்வோம்…

திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “இளைஞர்கள் நமது உலகத்தின் எதிர்காலமாக இருக்கின்றனர் என்று எளிதாக கூறிவிட முடியாது இந்த உலகின்; நிகழ்காலமே அவர்கள்தான்” என்கிறார்.

எதிர்காலம் வளமாக மாற நிகழ்காலத்தில் முழு ஆற்றலுடன் மாற்றத்தை நோக்கி நாம் பயணப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உங்களின் கடமைகளை அறிந்து நீங்கள் செயல்பட திருஅவை உங்களை அழைக்கின்றது. இன்றைய இளைஞர்களிடம் என்ன திறமைகள் இல்லை? “மாற்றத்தை நோக்கிய பாதையில் நாம் எவரையும் திறமையற்றவர்கள் என்றோ, சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கொண்டு ஒதுக்கி வைக்கக் கூடாது. நாமாகவும் நம்மை ஒதுக்கி கொள்ளவும் கூடாது” என திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் குறிப்பிடுகிறார்.

இளைஞர்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு இதை அறிந்ததாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலும் நாம் இளைஞர்கள் சமூகத்தின் பின் தூண்களாகவே இருந்து விடுகிறார்கள் என அருள்தந்தை ஜெரி சே. ச. அவர்கள் குறிப்பிடுகிறார். இன்று உலகில் மாற்றத்தின் முதல் விதையாக இளைஞர்கள் இருப்பதை இளைஞர்களாகிய நாம் முதலில் உணர வேண்டும். சமூக அநீதிகளை காணும்போது தன்னைப் இது தீண்டவில்லை என்று கூறுபவர்களாக இருந்துவிடாமல் துணிந்து அதை சரி செய்திட வேண்டியது நமது கடமையும், பொறுப்புமாகும்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்த டெல்லி கல்லூரி மாணவர்களை போல நாமும் அநீதிக்கு எதிராக சமூகத்தில் மாற்றம் நோக்கிய முதல் குரலாக விளங்கிட வேண்டும். இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் பொறுப்புகளை முன்னெடுக்க தயங்குகிறார்கள். இளைஞர்கள் பல பொறுப்புகளை தயக்கமின்றி முன்னெடுப்பதையே திருஅவை விரும்புகிறது. இதனையே திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “இளைஞர்களின் வேகமும், உள்ளுணர்வும், இறை நம்பிக்கையும் திருஅவைக்கு தேவை” என்கின்றார். மாற்றம் என்பதே மாறாத ஒன்று இச்சூழலில் சமூக, அரசியல், பண்பாடு, சிந்தனை போன்ற பலநிலைகளில் மாற்றத்தை முன்னெடுக்க “நாம் தெளிவான ஞானம் கொண்டவராக இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் நாம் அனுதினமும் கடந்து செல்லும் இவ்வுலகின் போக்கில் மிக எளிதாக பலியாகி விடக் கூடும்”. எனவே தேர்ந்து தெளிவு கொண்டவர்களாக ஆற்றலோடு மாற்றம் நோக்கி பயணிக்க வேண்டும். இதுவே முழு ஆளுமை உடைய இளைஞர்களான நமக்கு தேவையான ஒன்றாகும். முழு ஆளுமை உடைய இளைஞர்களாகிய நாம் ஆற்றலோடு மாற்றம் நோக்கி முன் செல்வோம்… சமூகம் தானாக பின் வரும்… முயலுவோமா?...



என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.

3. இளைஞனே எதை நோக்கிப் போகிறாய்?

இளைஞனே எதை நோக்கிப் போகிறாய்?

ஒருமுறை ஒரு கூட்டத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என கேள்வி எழுப்பினேன். சிலர் இளைஞர்கள் என்றால் நடிகர்களின் பின் தொடர கூடியவர்கள் என்றனர். சிலர் இளைஞர்கள் என்றால் சாலையில் சாகசம் செய்பவர்கள் என்றனர். சிலர் சமூகவலைதளத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் என்றனர். நாம் வாழும் பகுதியில் பெரும்பான்மையானவர்களின் பார்வை இளைஞர்களை பற்றிய எதிர்மறை விமர்சனம் கொண்டதாகவே உள்ளது. மிகவும் குறைவான நபர்களே இளைஞர்களை பற்றி நேர்மறையாக பேசுகின்றனர்.

நண்பா! இன்று நாம் வாழும் உலகில் இளையோர் ஆற்றும் பணி மறக்க இயலாத ஒன்று. உதாரணமாக… 
பண்பாட்டை காக்க மெரினாவில் கூடிய ஜல்லிக்கட்டு போராட்டமாகட்டும், சென்னையில் வெள்ளம் வந்த போது நீரில் தவித்த மக்களை காக்க கரம் நீட்டியதாக இருக்கட்டும், கஜா புயலில் நம் மாநிலம் பாதிக்கப்பட்ட போது தங்களின் வேலைகளை விட்டுவிட்டு வந்து உதவிய சூழலாக இருக்கட்டும். இவைகள் அனைத்துமே இன்று தமிழக இளைஞர்களை நோக்கி உலகை திருப்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது முற்றிலும் உண்மை...

நாம் வாழும் பகுதிகளில் நம்மை பற்றி நேர்மறையாகவும் ,எதிர்மறையாகவும் பேசுபவர்கள் எப்போதும் உண்டு. குறிப்பாக எதிர்மறை கருத்து கொண்டவர்கள் மிகவும் அதிகம். இன்று நேர்மறையானச் செயல்களை விட எதிர்மறையானச் செயல்களையே அனைவரும் கண்காணிக்கின்றனர். மேலும் அதைச் சுட்டிக்காட்டி தங்களை நேர்மையாளராக காட்ட எண்ணுகின்றனர். இச்சூழலில் நாம் எதை நோக்கிப் போகிறோம்? 
சமூகத்தின் நேர்மறையான கருத்து அடிப்படையில் நாம் நமது பாதையை அமைக்கின்றோமா? அல்லது சமூகத்தில் காணப்படும் எதற்கெடுத்தாலும் கெத்து என்று கூறிக்கொண்டு எதிர்மறையான கருத்துக்களின் அடிப்படையில் நமது பாதையை அமைக்க போகின்றோமா? பெரும்பான்மையான இளைஞர்கள் இன்று கெத்து என்ற பெயரில் எதிர்மறை கருத்துக்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள முயன்றனர். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “நாம் வாழும் காலத்தை அதற்குரிய வாய்ப்புகளோடும், ஆபத்துகளோடும், அதன் மகிழ்ச்சியோடும், துயரங்களோடும். அதன் வெற்றிகளோடும், தோல்விகளோடும் நாம் நேசிக்க வேண்டும்” என்றும் “இளைஞர்கள் முதியோர் உடன் இணைந்து பயணிக்க வேண்டும் அவ்வாறு பயணிக்கும்போது நிகழ்காலத்தில் உறுதியாக வேரூன்றி, இங்கிருந்து கடந்த காலத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, எதிர்காலத்தை சிறப்பாக நோக்க முடியும்” என ஊக்கமூட்டுகிறார்.

“நல்ல சிந்தனை (யோசனை) இருந்தால் வாழ முடியும். அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்” என்பதற்கு ஏற்ப சமூகத்தில் காணப்படும் குறைவான நேர்மறையான எண்ணங்களை கருத்தில்கொண்டு தொடர்ந்து பயணிக்க நாம் முயல வேண்டும். ஏனெனில் திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் நினைவூட்டும் பழம்பெரும் முதுமொழியான “இளைஞர்கள் அறிவையும், வலிமையையும் கொண்டு இருந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை” என்பது உண்மையாகும். தெளிவுள்ளவர்களாய் தெளிவான சிந்தனையோடும், நாம் நேர்மறையான எண்ணங்களோடும் முழு ஆளுமை கொண்ட நாம் நமது வாழ்வை அமைத்திடுவோம்… நமது நண்பர்களையும் அப்பாதை நோக்கி அழைத்துச் செல்வோம்...

என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.

2. நீ நீயாக இரு....

நீ நீயாக இரு....

ஒரு நாள் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது அருள்தந்தை ஒருவர் ஒரு கேள்வியை எங்களை நோக்கி எழுப்பினார். நீங்கள் இன்னும் பத்து வருடத்திற்கு பிறகு எப்படி இருப்பீர்கள்? என்று கேட்டார். சிலர் நான் ஏ. ஆர.; இரகுமானைப் போல சிறந்த பாடகராக இருப்பேன் என்றார்கள். சிலரோ நான் உங்களைப்போல ஒரு குருவாக இருப்பேன் என்றார்கள். இன்னும் சிலரோ நான் ஒரு நல்ல ஆசிரியராக இருப்பேன் என்றார்கள். ஆனால் எனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு சகோதரர் கூறினார். நான் இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆனாலும் “நான் நானாகத்தான் இருப்பேன்” என்றார். ஆந்த சகொதரர் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தன. இதுவே இன்றைய முழு ஆளுமை கொண்ட இளைஞர்களுக்கும் தேவை என்று கருதுகிறேன். 
“எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்” என்றார் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று இளைஞர்களில் பலர் பிறரைப் போல மாறவேண்டும் என்று தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்று நமது நாட்டின் பெரும்பான்மையான இளைஞர்கள் பிறரை பின்பற்றக் கூடியவர்களாக மாறியுள்ளனர். ஆனால், இன்று முழு ஆளுமை கொண்ட இளைஞர்களான ஒவ்வொருவரும் “அவர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும்”  (நீ நீயாகவே இருக்க வேண்டும்) என்பது அடிப்படையானது.

“நிஜத்தை விடுத்து நிழலை பின்பற்றக்கூடிய இளைஞர்களாக இல்லாமல் நிஜங்களாக நாம் உருவாக வேண்டும்”. ஒருவர் பாடகராக வேண்டுமாயின் மற்றொரு பாடகபை;ர போல பாடகராக வேண்டும் என்று எண்ணாமல். தங்களுக்கான தனித்துவம் கொண்ட ஒரு பாடகராக உருவாக வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “ஒருவர் சிறந்த கனவுகளை (இலக்குகளை) அடைய நம்பிக்கை, பொறுமை, அர்பணம், அவசரமின்மை போன்றவற்றின் மூலம் கனவுகளை (இலக்குகளை) நனவாக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

இளைஞர்கள் தனித்துவமிக்கவராக உருவாக வேண்டுமாயின் தடைகள் பலவற்றை எதிர் கொள்வது அவசியமானது. அச்சூழ்நிலைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய், பொறுமையோடும், அர்ப்பண உணர்வோடும், அவசரமின்றி செயல்படுவது அவசியமானதாகும். “விதை கூட இங்கு விழுந்து தான் எழுகிறது”. எத்தனை தடவை நம்மேல் கற்களை வீசினாலும் நாம் விழ்வதுப் போல விழ்ந்து மறு நொடியே எழுந்து முன்னேற வேண்டும். மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் கடல்நீரை போன்று. 
இவ்வுலகில் விலங்குகள், பறவைகளிடமிருந்து மனிதன் வேறுபடுவது சிரிப்பாலும், சிந்திக்கும் உணர்வினாளுமே. நூம் ஒவ்வொருவரும் நாம் நாமாக இருக்க (நீ நீயாக இருக்க) சுயமாக சிந்தித்து உறுதி ஏற்போம். முழு ஆளுமை கொண்ட இளைஞர்களான நாம் “தடம் பார்த்து நடக்காமல் தடம் பதித்து நடந்திடுவோம்” இச்சமூகத்தில்....

என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.


1. இளைஞனே நீ யாருக்காக?...

இளைஞனே நீ யாருக்காக?...
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றக் கூடியது இளைஞர்களின் செயல்பாடு என்றால் அது மிகையாகாது. இன்று இவ்வுலகில் பெரும்பாலும் இளைஞர்களை பார்த்து பலர் கேட்கக்கூடிய கேள்விகள் ஒன்று யார் நீ?... என்பதாகும். ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது இளைஞர்களுக்கான ஊக்க உரையில் யாருக்காக நீ இருக்கிறாய்? என்ற கேள்வியை இளைஞர்களை பார்த்து முன்வைக்கின்றார். இளைஞனே நீ யாருக்காக? என்று சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஒரு சமூகத்தில் பலரும் குறிவைப்பது இளைஞர்களையே… இது இன்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக தொடரக்கூடிய ஒன்று. ஏன் நம்மில் பெரும்பான்மையானோர் இளைஞர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். இளைஞனே! இளமைபருவம் இனிமையானது திருவிவிலியம் கூறுகிறது “இளமைபருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு” என்று. (சபைஉரையாளர் 11:9)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற இளையோருக்கான ஊக்க உரையில் “திருஅவையின் இதயம் இளம் புனிதர்களால் நிறைந்துள்ளது” என்கிறார் ஆனால், இளைஞனே நீ யாருக்காக என சிந்தித்தது உண்டா?

உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முழு ஆளுமை கொண்ட நீ யாருக்காக இருக்கிறறாய்? “நூறு இளைஞர்களை கொண்டு இந்தியாவை மாற்றி காட்டுவேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். புதுச்சேரியில் உள்ள ஆரோபில் நகரம் பல இளைஞர்கள் நம் நாட்டிலிருந்து கொண்டுவந்த ஒருபடி மண்ணால் உருவானது என்பார்கள். உலக சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டு இந்த நகரம் இளைஞர்களால் உருவானது.
 
இளைஞர்களால் இயலாதது என்று எதுவும் இல்லை. இவ்வுலகில் முழு ஆளுமை கொண்ட ஒவ்வொரு இளையோரும் இன்று சமூகத்திற்கு தேவை. இதனை அனைத்து இளைஞர்களும் உணர வேண்டியது என்று அவசியமாகும். இன்று பல இளைஞர்கள் சமூக பிரச்சனை குறித்து குரல் எழுப்புவதும், வீதிக்கு வந்து உரிமையை நிலைநாட்ட முயல்வதும், பலவிதமான புதிய அணுகுமுறைகளை சமூகத்தில் கையாளுவதும் போற்றுதலுக்கு உரியதாகும். ஆனால், நாம் ஆழமான வேர்களைக் கொண்டு தெளிவான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். உறுதியாக நன்கு நிலைநாட்டப்படுவதற்கும், நம்மை தாங்கி பிடிப்பதற்கும் வலிமைமிக்க வேர்களைக் நாம் கொண்டிருக்காவிட்டால் வளர்வது என்பது சாத்தியமில்லை. வேரின்றி எதிர்காலத்தை கட்டியெழுப்ப இளைஞர்களை ஊக்கப்படுத்தும் போது தனக்கு அது மிகவும் துயரமாக உள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற ஊக்க உரையில் கூறுகிறார்.

ஒரு மரம் தனது வேர்களை நீர் இருக்கும் இடம் நோக்கி நீட்டி தன்னை உறுதியானதாக மாற்றிக்கொள்ளும். அதுபோலவே முழு ஆளுமை கொண்ட இளைஞர்களாகிய நாமும் நம்மிடையே உள்ள ஆளுமைத் தன்மையாகிய வேர்களை வலுவுள்ளதாக மாற்றி தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு சமூகத்திற்கு நீங்கள் (இளைஞர்கள்) தேவை என்பதை உணர்ந்து தங்களுடைய முழு ஆளுமையுடன் சமூகத்தில் வழிகாட்ட வேண்டும். இதற்காக தூங்கிய தமிழினம் விழிப்பதற்கு தூங்காமல் எழுதியும் படித்தும் உலக அறிவுச் செல்வங்களை தமிழில் வழங்கிய அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளில் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

இளைஞனே (தம்பி)
மக்களிடம் செல்…
மக்களிடம் வாழ்…
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்…
மக்களை நேசி…
அவர்களுக்கு என்ன தெரியுமோ அவற்றிலிருந்து தொடங்கு…
அவர்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உருவாக்கு…
உன்னையும் உலகையும்....



என்றும் அன்புடன்
சகோ. சகாயராஜ் ஜே.
அம்மாபேட்டை, திருச்சி. 

காலம் நிறைவேறிவிட்டது Introduction

அன்புக்குரிய அருள்தந்தை அவர்களே அருமைச் சகோதரர்களே உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டே கலிலேயா விற்கு சென்றதை நாம் வாசிக்க கேட்கிறோம்.
“காலம் நிறைவேறிவிட்டது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று இயேசு நற்செய்தி அறிவிக்கிறார். இன்றைய நாளில் நற்செய்தி என்றால் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்கவும் தியானிக்கவும் அழைக்கப்படுகிறோம்.

துன்பத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியைத் தருவதே நற்செய்தி. இதனை இன்றைய முதல் வாசகத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். இன்று குழந்தைப்பேறு இல்லாமையால் அதனை எண்ணி வருந்தக்கூடிய அன்னாவை அவளது கணவன் எல்கானா என்பவர். தேற்றும் விதமாக ஏன் குழந்தை இல்லை என்று வருத்தப்படுகிறாய். நான் உனக்கு பத்து புதல்வரை விட மேலானவன் என்று எனக் கூறுகிறார். நகைச்சுவையாக பேசினாலும் நல்ல தம்பதியருக்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணம் எனலாம்.
 துன்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் இன்பத்தை உருவாக்குவதே உண்மையான நற்செய்தி.
உள்ளத்தில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் தன் கண்முன் இருக்கக்கூடியவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்தவர் சார்லிசாப்ளின் அவர்கள். அதுப்போலவே ஆதரவற்ற ஏழைகள், கவனிப்பற்ற நோயாளிகளின்  முகத்திலும் புன்னகையை கொண்டு வந்தவர் அன்னை தெரசா அவர்கள்.

எனவே இன்றைய நாளில் நாம் நற்செய்தியாக எதை மற்றவருக்கு வழங்க போகிறோம். ஒருவேளை துயரத்தில் இருப்பவர்களை காணும்போது அவர்களின் துயரத்தை துடைக்க நம்மால்  முடியா விட்டாலும் அவர்களுடன் துணை நிற்பவர்களாக வாழ்வதற்கான அருளை வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து ஒருவர் மற்றவருக்காக செபிப்போம்.


அன்புக்குரியவர்களே இவ்வுலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் ஏதோ ஒன்றை நமக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் ஆலயத்திற்குள் வந்ததும் இஸ்ரேல் மக்கள் அனைவரும் நிலம் அதிரும் அளவிற்கு பெரும் ஆரவாரம் செய்தனர் என நாம் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்க உள்ளோம்.
அதுபோலவே இன்று நாம் வாழக்கூடிய நமது நாட்டில் குடியுரிமை சட்ட மசோதா மூலமாக இஸ்லாமியர்களின் மீது நடத்தப்படக் கூடிய மதரீதியான தாக்குதலிலிருந்து அவர்களை காத்தருள வேண்டுமென்று தமிழகத்தின் பல பகுதியில் மாணவர்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இஸ்லாமியர்களும் ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து நீர் விரும்பினால் எனது நோய் குணமாகும் என்கிறார். இயேசுவும் நான் விரும்புகிறேன் எனக்கூறி அவரை குணப்படுத்துகிறார்.

நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்கிறது. ஒற்றுமையாக மதச்சார்பின்மையோடு வாழ வேண்டிய இந்த நாட்டில் இன்று சில சக்திகள் ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்தோடு மதரீதியான தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள். அவர்களின் எண்ண விருப்பத்தை தங்களிடம் அதிகாரம் இருப்பதால் செயலாக்க முயலுகிறார்கள். மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் இந்த அநீதியான செயலில் ஈடுபடுபவர்களின் செயல்பாடுகளை நாம் தடுக்க வேண்டுமாயின் ஒற்றுமை உணர்வோடு வாழ நாம் வேண்டும். 

இச்சமூகத்தில் நீ விரும்பும்மாற்றமாக முதலில் நீ இரு என்ற காந்தியடிகளின் வார்த்தைக்கு ஏற்ப  ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்தோடு உலகில் நடைபெறக்கூடிய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒற்றுமையை குலைக்க இயலாது என்பதை காட்டும் விதத்தில் மக்களும், மனங்களும் ஒன்றுபட்டு இந்நாட்டில் இன்புற்று வாழவும், அதனை நாம் நமது வாழ்வில் செயல்படுத்தவும் இறை அருள் வேண்டி இந்த திருப்பலியில் அகில உலக ஒற்றுமைக்காக குறிப்பாக இந்தியாவில் வாழக்கூடிய மனிதர்களிடையே மதரீதியான ஒற்றுமை நிலவ அருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைவோம்

திருக்காட்சி பெருவிழா - 2020


திருக்காட்சி பெருவிழா - 2020

அன்புக்குரிய இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விண்மீனை பின்தொடர்ந்து சென்ற ஞானிகள் பாலன் இயேசுவை கண்டு கொண்ட நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். அதன் அடிப்படையில் பிறந்துள்ள இப்புதிய ஆண்டிலே நாம் எதனை அல்லது யாரை பின்பற்றிக் கொண்டு எப்படி அல்லது எதன் அடிப்படையில் செல்லப் போகிறோம்  என சிந்திக்க உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன்.

சமீபத்தில் கடந்த ஆண்டுகளில் விகடன் பத்திரிக்கையில் சாதனை படைத்த 10 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை; பிடித்தவரின் பெயர் டாக்டர் காந்திமதிநாதன். யார் இந்த காந்திமதிநாதன்? என்று தேடிப் பார்த்த பொழுது மதுரைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தோப்பூர் எனும் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக மற்றும் தோற்று நோய் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற கூடியவர் இவர்.

அரசு மருத்துவமனை என்றால் நம் அனைவருக்கும் தெரியும் அது எந்த அளவிற்கு சுத்தமானதாகவும், சுகாதாரமான சூழல் கொண்டதாகவும் இருக்கும் என்று. நகர்புறங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.  அவ்வகையில் இந்த தோப்பூரில் இருக்கக்கூடிய அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனை முழுவதும் முட்புதர்கள்  மண்டையும், மக்கள் கால் வைக்க தயங்க கூடிய ஒரு மருத்துவ மனையாகவே இருந்தது. எனவே மக்கள் அனைவரும் அதனை காட்டாஸ்பத்திரி என்றே அழைப்பார்கள்..

இச்சூழலை மாற்றும் விதத்தில் மருத்துவமனை வளாகத்தை ஒரு பசுமை வளாகமாக மாற்றிய ஒரு மகத்துவமான மனிதர் தான் இந்த டாக்டர் காந்திமதிநாதன் என்பவர். மிகவும் தூய்மையான வார்டுகள், ஒவ்வொரு வார்டிலும் டிவி, ரேடியோ, சுகாதார வசதிகள் கொண்ட சலூன், மூலிகைத்தோட்டம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், நோயாளிகளுக்கு என தொழிற் பயிற்சிகள் என இவரது முயற்சியால் முழுமையான “மறுவாழ்வு மையமாகவே” இம்மருத்துவமனை மாறியுள்ளது.

நாம் நற்செய்தியில் வாசித்த ஞானிகள் விண்மீனை தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை கண்டுகொண்டார்கள். இந்த மருத்துவர் காந்திமதிநாதன் என்பவர் எதனை பின் தொடர்ந்து இத்தகைய நல்ல செயலில் ஈடுபட்டார் என்று நேர்காணல் செய்யும் பொழுது நான் இருக்கும் இடம் மிகவும் சுத்தமாகவும் பலர் வந்து செல்லக்கூடிய வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்ற என்னுடையநல்லெணணத்தின் வெளிப்பாடே இதற்கு காரணம். நான் என்னிடத்தில் உள்ள நல்லெண்ணத்தை கண்டுக் கொண்டு அதன் வழி நடக்கிறேன் என்றார். அதன் விளைவே பலருக்கு நன்மை தரும் நல்ல ஒரு சூழல் கொண்ட மருத்துவமனை உருவாக வழி வகுத்தார்.

விவிலியத்தில் தொடக்கநூல் 1 ஆம் அதிகாரம் 26 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் மனிதரைத் தம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கினார்” என்று.  நாம் ஒவ்வொருவரும் கடவுளின் சாயல்.  கடவுளின் கைவண்மையால் உருவானவர்கள். திருவிவிலித்தில் தொடக்கநூல் 1 ஆம்; அதிகாரத்தில் 31 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் நன்றாய் இருந்தன” என்று.

அன்புக்குரியவர்களே! ஆண்டவர் இயேசுவை கண்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணமே பல மைல் தூரத்தில் இருந்து ஞானிகளை புறப்பட்டு வரச் செய்தது. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உங்களை நல்லது செய்ய வைக்க முடியும். மனிதரான டாக்டர் காந்திமதி நாதனிடத்தில் காணப்பட்ட நல்லெண்ணம் போல் நம் அனைவரிடத்திலும் பலவிதமான நற்பண்புகள் உள்ளன. இப்புதிய ஆண்டில் நம்மிடம் உள்ள நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொள்வோம். ஞானிகள் விண்மீனை பின்தொடர்ந்து பாலன் இயேசுவை கண்டுக்கொண்டதுப் போல நாமும் நம் ஒவ்வொருவரிடத்திலும் புதைந்து கிடக்கும் நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொண்டு இவ்வருடம் முழுவதும் அதனை பின்தொடர்ந்து செல்வொம். வாழ்வில் மற்றவர் வளம் பெற உங்கள் வாழ்வு அவர்களுக்கு உகந்த வாழ்வாக அமையட்டும்.

இதுவே இன்றைய நாளில் மூன்று ஞானிகள் அல்லது திருக்காட்சி பெருவிழா நமக்குத் தரும் மையச் செய்தியாக அமையும்.

ஒன்றை பின்தொடர்ந்து செல்வது என்பது மிகவும் எளிதான காரியமல்ல...  வாழ்வில் நற்செயலை செய்யத் துவங்கும் போதுதான் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் நாம் சந்திக்க நேரிடும்... அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள்.  மனவுறுதி கொண்டவர்களாய் விவிலியத்தின் பேதுரு எழுதிய முதல் கடிதம் 5 ஆம் அதிகாரம் 6 முதல் 10 வரை உள்ள வசனங்களை உங்கள் மனதில் இருத்துங்கள்... 
“கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்போது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்”.

நற்செயல்களை செய்யும் போது நமக்குள் கர்வம் எலலாம், பேராசைகள் எலலாம், புகழை மனம் தேடலாம். ஆனால் கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள் அவர் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்துவார்.

“உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

இவ்வருடம் முழுவதும் நான் செய்ய வேண்டும் என்று எண்ணிய நற்செயல்களை எல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கவலைகள், கஷ்டங்கள் வந்து என்னை குழப்புகின்றன என எண்ணும்போது நினைவில் நிறுத்துங்கள். “உங்கள் கவலைகளை அவரிடம் விட்டுவிடுங்கள் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

“அறிவுத்தெளிவோடு விழிப்பாய் இருங்கள் உங்கள் எதிரியாகி அழகை யாரை விழுங்கலாம் என கர்ஜிக்கும் சிங்கம் போல உங்களை தேடித்தருகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்”.
நற்செயல்கள் செய்யும் போது பலர் உங்களை கண்டு எள்ளி நகை ஆடலாம், இவர் பெரிய ஆளு, பேருக்காக பண்றான் டா... என்றுச் சொல்லக்கூடியவர்கள் உங்களிடையே உதயம் ஆகலாம். அதையெல்லாம் கண்டு மனம் உடைந்து விடாதீர்கள். அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் உங்கள் இலக்கு எதுவோ அதை நோக்கி முன் செல்லுங்கள். நீங்கள் பின்தொடர தீர்மாணிக்கும் நற்செயலை மனதில் உறுதியோடு ஏற்று அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள். 

“உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகளும் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?”

இவ்வுலகில் நீங்கள் மட்டுமல்ல... ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய முன்வரும்போது இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவருமே பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் சந்திக்கிறார்கள். அவர்களில் நீங்கள் மட்டும் தனித்துவமானவர்கள் அல்ல. அவர்களுள் ஒருவர் தான் நீங்களும். மற்றவர்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் எதிர்கொண்டு எப்படி முன்வருகிறார்களோ அதுப்போல உங்களாலும் முடியும் என நம்புங்கள். முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறுவார் “நீங்கள் முடியாது என சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்” என்று. என்னால எல்லாம் இந்த நல்ல செயலை இறுதிவரை செய்ய முடியாது என்று எண்ணக்கூடியவராக நீங்கள் இருந்தால் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்  நீங்கள் முடியாது என எண்ணுவதை எங்கே யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்.. (உதாரணமாக கலெக்டர் திரு. சகாயம் ஐயுளு) எனவே உங்களால் முடியும் என நம்புங்கள்..


“எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார் சிறுதுகால துன்பங்களுக்கு பிறகு உங்களை சீர்படுத்தி, உறுதிபடுத்தி, நிலை நிறுத்துவார்”.

துன்பங்களுக்கு மத்தியில் தான் இன்பத்தை உணர முடியும். துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகாது.... இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. நற்செயலை செய்யும் பொழுது சில துன்பங்களின் மத்தியில் கடவுள் உங்களை உறுதிபடுத்தி, வலுபடுத்தி உங்கள் நற்செயல்களை பின்தொடர்ந்து நீங்கள் வாழ்வில் பலருக்கு வழிகாட்டக்கூடிய மனிதர்களாக உருவாக இறைவன் உங்களுக்கு உதவுவார். நட்சத்திரம் ஞானிகளுக்கு வழி காட்டியது போல நீங்களும் மற்ற மனிதர்களுக்கு வழிகாட்டுங்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் உடன் உள்ள நண்பர்களுக்கும் என ஒருவருக்கொருவர் நல்வழி காட்டுங்கள். பிறந்திருக்கும் இவ்வாண்டு முழுவதும் நற்செயல்கள் நம் வாழ்வில் நிறைந்திருக்க உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இறைவனின் அருளையும் நாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.


சகோ. சகாய ராஜ்



திங்கள், 13 ஜனவரி, 2020

முத்துக்குளித்துறையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள்

முத்துக்குளித்துறையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள் 
பொது முன்னுரை
“உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற இயேசுவின் சொற்றொடருக்கேற்ப நற்செய்தியை அறிவிக்க இயேசுவின் சீடர்கள் உலகெங்கும் பயணப்பட்டனர். அவர்களுள் பலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றினர். அவர்களுள் ஒருவரான புனித தோமா நற்செய்தி அறிவிப்பதற்காக இந்தியாவிற்கு வந்து, நற்செய்தியை அறிவித்து பலரின் மனங்களில் இயேசுவை விதைத்து, இயேசுவுக்காக தன் இன்னுயிரை துறந்தார் என்பதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவரின் அடிச்சுவட்டைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு நற்செய்திப் பணியாற்றுவதற்காக பலர் வந்தனர். அவர்களில் ஒருவரான அண்ட்ரிக் அண்ட்ரிகசுவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையாக இந்த கட்டுரையைப் படைக்கவிருக்கிறேன். இயேசுவைப் பற்றி பலர் நற்செய்தியை அறிவித்தாலும், நம் தாய் மொழியான தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து, தமிழ் மொழியை பலருக்குக் கற்பித்தும், இயேசுவோடு இணைந்து தமிழ் மொழி என்னும் அமுதத்தை அயல்நாட்டவருக்கு, உள்நாட்டவருக்கு என பலரும் சுவைத்திட வித்திட்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. பொதுவாகவே கிறித்தவ சமையப்பணியாளர்கள் தனிநபர்கள் அல்ல, மாறாக ஓட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அடையாளமாகப் பணியாற்றியவர்கள். இவர்கள் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டியவர்கள். இந்தியாவைப் பொருத்தவரையில் சமையப்பணியாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்பவர் புனித சவேரியார். அவருக்குப் பின் அவரைத்தொடர்ந்து சமையப்பணியை வெகுசிறப்பாக மக்களிடையே செய்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார், சமயப் பணியைக் கடந்து, மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்தவர். தமிழ்மொழியில் முதல் அச்சகம், முதல் நூல், தமிழகத்தின் முதல் மருத்துவமனை, நாள்காட்டிச் சீர்திருத்தம், பேச்சுத்தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்தது, போன்ற அவரது பணியை நாம் இன்றையச் சூழலோடு பொருத்திப் பார்த்தால், அவர் அடித்தள மக்களின் வாழ்வில் விடுதலையை சுவைத்துப் பார்க்க வைத்துள்ளார் என்பதைக் கண்டுணர இயலும். முத்துக்குளித்துறை பகுதியில் வாழ்ந்த பரதவச் சமூகத்தைச் சார்ந்த மீனவர்கள் தீண்டாமை எல்லைக்குள் அகப்படாமல் அவர்களைக் கல்வி, வழிபாடு, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற முயற்சி செய்துள்ளனர் சமயப்பணியாளர்கள். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மக்களின் மொழியில் மக்களுக்கான சமயத்தை உருவாக்க விரும்பினார். எனவே தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அந்த மொழியிலேயே மக்களுக்குத்தன் கருத்துகளைப் பரப்புரை செய்துள்ளார். தன் பணிக்காலத்தில் மக்கள் அரசியல், பொருளாதார, சமூக, சமய மறுவாழ்வுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை வாசிப்பது என்பது நாம் நம்மையும், நம் சமூகத்தின் தொன்மை வரலாற்றையும் அறிவதற்கான முயற்சியாக கருதலாம். இது தனிநபர் வரலாறு அல்ல, தனித்து விடப்பட்டவர்களின் வரலாறு என்று கூறுவதே சிறப்பாகும். தமிழ் மண்ணிலே தமிழர்களுக்காகப் பணியாற்றி இறந்துப்போனவரைச் சமயத்தோடு முடக்காமல் சமூகப் போராளியாக, தமிழ் மொழி ஆய்வாளராக மறுவாசிப்பு செய்வது இன்றைய காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும். கிறித்தவ சமயம், தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள், குமுகப் பணிகள் என இவர் முன்னெடுத்த பலவற்றை வரலாற்றுடன் சீர்தூக்கிப் பார்த்து இவ்வாய்வுக் கட்டுரையையும், அதனோடு இவரின் வரலாற்றை அறிந்து கொண்டு புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாய்வுக் கட்டுரையை தயாரிக்கிறேன்.

அலகு – 1
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் வாழ்க்கைக் குறிப்பு
1.1 பிறப்பும், இளமையும்
போர்த்துக்கல் நாட்டிலுள்ள வில்லேவிகாசோ என்ற ஊரில் 1520 - ஆம் ஆண்டு யூதக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். இவரது பெயர் ஹென்றிக்கு ஹென்றிக்கத் (ர்நுNசுஐழுருநு ர்நுNசுஐஞருநுணு) என்று போர்த்துகல் ஆவணங்களில் காணப்படுகிறது. இவரது பெயரை இவர் இயற்றிய தமிழ் நூல்களில் யுNசுஐஞருநு யுNசுஐஞருநுளு என்று பதிவு செய்துள்ளதை நாம் காண இயலும். இவரது பெற்றோர்கள் பெரும் செல்வந்தர்கள் அதிலும் புதிதாகக் கிறித்தவத்தைத் தழுவியவர்கள். செல்வ வளமிக்கக் குடும்பத்தில் இவர் பிறந்தாலும், தன்னை முழுமையாகச் சமயப்பணிக்கும், ஏழை எளியவர்களின் நலவாழ்வுக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. தன்னிடம் இருக்கும் பொருளைத்துறந்து அதைப் பிறருக்குக் கொடுத்திட வேண்டும் என்ற திருவிவிலிய மதிப்பீடுகளின்படி தன் பெற்றோர்களின் செல்வத்திலிருந்து தனக்குச் சேரவேண்டிய பங்கைப் பிரித்து, அதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு துறவுமடம் நோக்கிச் சென்றார். 

1.2 துறவியருக்கான முயற்சியும் பயிற்சியும்
அண்ட்ரிக் அண்ட்ரிகசு (ர்நசெஙைரந ர்நசெஙைரநள) அவர்கள்; சிறு வயது முதல் யூத  சமய சடங்குகளை நன்கு அறிந்து அதனைப் பின்பற்றி வந்தார். ஆனால் இயேசு கிறித்துவின் வாழ்வையும், அவரது சீடர்களின் போதனைகளாலும் கவரப்பட்டு இயேசுவைப் பின்பற்றும் நோக்கத்துடன் தன்னை முழுவதும் வெறுமையாக்கி பிரான்சிசு துறவு அவையில் சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் யூதமரபைச் சார்ந்த கிறித்தவர்கள் என்பதை அறிந்த துறவு அவையினர் அவரை துறவு அவையில் தொடர அனுமதிக்கவில்லை. ஏனெனில் இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்றும், அவர்களே தொடக்கத் திருஅவையில் மறைச்சாட்சியரைக் கொன்று குவித்தவர்கள் என்ற காரணத்தினாலும் கிறித்தவர்கள் யூதர்களை அன்று வெறுத்தனர். தொடக்கத்திலிருந்தே யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே பல கலவரங்களும் போர்களும் நடைபெற்றுள்ளன என்பதை நாம் வரலாற்றிலிருந்து அறியலாம். மேலும் வரலாற்றில் புதிதாகக் கிறித்தவம் தழுவியவர்களை பிரான்சிசு துறவு அவையில் மிகவும் இழிவாக நடத்தினார்கள். “புதிய கிறித்தவ இனத்தினர்” என்றே அவர்களை அழைத்துள்ளார்கள். அதாவது அவர்கள் மரபுக் கிறித்தவர்களைக் காட்டிலும் சமூகத்தில் இழிவானவர்களென்று கருதப்பட்டுள்ளனர். திருஅவையில் யூதர்களை எதிரிகளாகச் சித்தரித்த காலங்களும் உண்டு. அவர்களின் மனமாற்றத்திற்காக மன்றாடிய காலங்களும் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் யூதராகப் பிறந்த அண்ட்ரிக் அடிகளார் கிறித்தவம் தழுவியவர் என்பதால், 'புதிய கிறித்தவர்” இனத்தைச் சார்ந்தவர் என்று பிரான்சிசு அவையிலிருந்து நீக்கப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருத்தந்தையர்களும் ஆயர்களும் நேரடியாகவே யூத சமயத்தை வெறுத்து ஒதுக்கிய காலம். இருப்பினும் அண்ட்ரிக் அடிகளார் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தீராத ஆசையில் இயேசு அவையில் சேர்ந்தார். அந்நாள்களில் இயேசு அவையின் நிறுவுநர் எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட புதிய கிறித்தவர்களைத் தன் அவையில் ஏற்றுக்கொண்டார். சைமன் ரொட்ரிக்கத் என்ற இயேசு அவைத்துறவியின் உதவியால் அண்ட்ரிக் அண்ட்ரிகசு இயேசு அவையில் சேர்ந்தார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் 1545ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் கொம்பேராநகரில் திருஅவையின் சட்டங்களைக் கற்றார். 1546ஆம் ஆண்டு இயேசு அவையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டிலே ஏப்ரல் 26ஆம் நாள் இந்தியாவுக்கு மற்ற இருள்பணியாளர்களுடன் பயணமானார். அவருடன் இணைந்து 12 இயேசு சபை குருக்கள் பயணமாகியுள்ளனர். அனைவரும் 1546ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் கோவாவுக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் வந்த போது சவேரியார் அங்கு இல்லை. அவ்வேளையில் சவேரியார் மலாக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அனைவரையும் சவேரியார் முத்துக்குளித்துறைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியபடி அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரும் சென்று பணி புரியத் துவங்கினார். 
1.3. இறுதிக்காலம்
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் தன் இறுதி காலங்களில் பல நாள்கள் நோயின் கொடுமையினால் மிகவும் சிரமப்பட்டார். தன்னுடைய பணிக்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவருக்கு பலவிதமான நோய்கள் உண்டு. இருப்பினும் தன்னுடைய ஆற்றலால் அவற்றைத்தாங்கிக் கொண்டார். வயது மூப்பு காரணமாகக் கீழ்வாத நோயால் நடக்க முடியாத அளவுக்கு அவர் பெரிதும் துன்புற்றார். அவரைக் கட்டிலில் படுக்க வைத்து மக்கள் தூக்கிச் செல்வது வழக்கம். முதுமையின் காரணமாக அவரால் திருப்பலி நிறைவேற்ற முடியவில்லை, 06. 02. 1600 ஆம் ஆண்டு தமது 80 ஆம் வயதில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் புன்னைக்காயலில் மரணமடைந்தார். மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அடிகளார் தன் பணிவாழ்வுக்கு ஓய்வு கொடுத்து இறைவனோடு இணைந்தார். அவரது மரணத்தால் ஒட்டு மொத்த முத்துக்குளித்துறையும் சோகத்தில் ஆழ்ந்தது. கிறித்தவர்கள் மட்டுமல்லாமல் இசுலாமியர்களும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். அன்றைய நாள்களில் புன்னைக்காயல் பரதவர்களுக்கும், காயல்பட்டணம் இசுலாமியர்களுக்கும் இடையே பகைமை உணர்வு மேலோங்கி இருந்தது. ஆனாலும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அனைவருடனும் தோழமை உணர்வு கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு அவரின் இறுதி சடங்கில் பங்கேற்றோரே சான்று. அவரின் இறப்பு காரணமாக பிற சமய மக்களும் இரண்டு நாள்கள் நோன்பிருந்து தங்கள் கடைகளை எல்லாம் மூடித் துக்கம் கொண்டாடினர். பல்சமய உரையாடல்கள் இல்லாத நாள்களிலேயே அவர் எல்லாச் சமயத்தவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய பண்பாளராக வாழ்ந்துள்ளார் என்பதற்கு இது சான்றாகும்.
இயேசு அவையினரின் இல்லத்திலிருந்து அவரது உடலை அவர் கட்டிய பங்கு கோயிலுக்குள் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த செபமாலையை அடிகளாரின் உடல்மீது தொட்டு அதைப் புனித பொருளாக எடுத்துக்கொண்டனர். புன்னைக்காயலிலிருந்து அவரது உடல் இரகசியமாகவே தூத்துக்குடிக்கு கடல் வழியாகத் தோணியில் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தூத்துக்குடிக் கரையை அடைந்தபோது தூத்துக்குடி பரதவர்கள் ஆறு தோணிகளில் கடலில் எதிர்வந்து அவரது உடலைப் பெற்று, ஊர்வலமாக எடுத்துச் சென்று பனிமய மாதா கோயிலில் அடக்கம் செய்துள்ளனர். கோயிலின் பல்வேறு கட்டடப்பணியின் போது அவரது கல்லறை சேதமடைந்துள்ளது. அவரது கல்லறை இருந்த இடத்தில் மக்கள் வழிபாடு செய்துவந்துள்ளனர். திருப்பலியின் போது மக்கள் கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் இருந்த சுவரை முத்தமிட்டுள்ளனர், வழிபடவும் செய்துள்ளனர். இதனைத்தடுக்க வேண்டும் என்ற நோக்கில், அருள்பணியாளர்கள் நற்கருணையை மையப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயிலில் கல்லறை வழிபாட்டை அங்கீகரிக்கவில்லை. அந்தக் கல்லறையை இடித்துவிட்டு அவரது எலும்புகளை மட்டும் கோயில் சுவரின் ஒரு தூணில் வைத்துப் பூசியுள்ளனர். மக்கள் அவரது எலும்புகள் வைக்கப்பட்டிருந்த தூணை வழிபடத்தொடங்கினார்கள். பின்நாள்களில் அதையும் தடுக்க விரும்பிய அருள்பணியாளர்கள் தூணை இடித்து எலும்புகளை எடுத்துப் பாதுகாப்பாக பனிமய அன்னை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் மண்டபத்தில் வைத்தனர். இவருடைய எலும்பின் ஒரு பகுதி கொடைக்கானல் செம்பகனூர் இயேசு அவையினரின் அருஞ்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது மண்டை ஓடு இன்றும் பனிமய மாதா கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் சிலர் பனிமய மாதா கோயிலில் உள்ள மண்டை ஓடு 'பெண் புனிதரின் மண்டை ஓடு” என்றும் பதிவு செய்கிறார்கள். ஆனால் அந்நாள்களில் பெண் புனிதர்கள் யாரும் சமயப்பணிக்காக முத்துக்குளித்துறைக்கு வந்ததில்லை என்பது தெளிவான உண்மையாகும்.
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை மக்கள் தங்களோடு வாழ்ந்த புனிதராகவே கருதினர். அவரது வாழ்வின் புனிதம் கருதி மக்கள் அவரது இறப்பிற்குப் பிறகும் அவரது கல்லறையை நோக்கி வந்தனர். அவருடைய பரிந்துரையால் நன்மைகள் கிடைக்கும் என்று நம்பினர். வாழ்ந்தபோது அரசியல் பொருளாதார, சமயச் சிக்கலில் இருந்து பாதுகாத்த அடிகளார் தங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார் என்ற நம்பிக்கை ஒருபுறம், மக்களுக்காக வாழ்ந்த இறையடியார்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடிந்துள்ளனர் என்பதற்கு இவரது கல்லறை சான்றாக உள்ளது. எரியும் திரிகளைக் கையில் ஏந்தி ஐந்து பெண்கள் ஒரு குழுவாக அவரின் கல்லறையில் மன்றாடிக் கொண்டிருந்தனர் என்று ஜோசப் தெத்கதெத் பதிவு செய்துள்ளார். இசுலாமியர்களும், பிறசமயத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் அவருடைய கல்லறையைத் தேடிவந்து மரியாதை செய்தனர். இவர்கள் அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீது உயர்வான மரியாதை வைத்திருந்தனர். மேலும் அன்றைய நாளில் கடற்கரையோர மீனவர்கள் ஆணையிட வேண்டுமென்றால் “சாமி அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீது ஆணையாக" என்றுதான் வாக்குறுதி கொடுப்பார்கள். தங்கள் பணிவாழ்வு முழுவதும் எந்த மக்களுக்காக உழைத்தாரோ, அந்த மக்கள் அவரைப் போற்றினர், அவரது மறைவுக்குப் பிறகு அவரை வழிபடவும் செய்தனர்.


அலகு – 2
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் சமயப்பணி
2.1 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் பணிகள்
சமயத்தொண்டு, தமிழ்த்தொண்டு மட்டுமல்லாது குமுகாயத்தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். தொடக்க காலத்தில் கோவாவில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடியில் குடியேறினார். கிறித்தவ சமயப்பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமை பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார். மேலும் அருள்பணியாளர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு மீன்வள கடற்கரையின் திருத்துஸதர் (1520-1600) என்றும் அழைக்கப்பட்டார்.
2.2 இந்தியாவில் இயேசு அவையின் மேலதிகாரி
அண்ட்ரிக் அண்ட்ரிகசு ஆரம்பத்தில் கோவாவில் 1557 வரை வாழ்ந்தார். பின்னர் புனித பிரான்சிசு சேவியரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகருக்குச் சென்றார். அங்கு அவர் 1547 முதல் 1549 வரை சமயப்பரப்பாளராகப் பணியாற்றினார். அந்தோனி கிரிமினாலியின் படுகொலைக்குப் பின்பு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரைத் தலைமைக் அருள்பணியாளராக முத்துகுளித்துறைக்கு சவேரியார் நியமித்தார். 1549ஆம் ஆண்டு இருபத்தொன்பது வயது இளம் வயதினரான இவர் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மூன்று காரணிகள் உண்டு.
இவர் இப்பதவிக்குத் தகுதியானவர்.
தாம் பணியாற்றிய பகுதியில் வாழும் மக்களின் மொழியை முறையாகப் படித்தவர்.
மக்களுடன் நல்லுறவு கொண்டிருந்தவர். 
இளம் வயதிலேயே இவர் இப்பொறுப்பிற்குத் தகுதியானவர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அவர்மீது சில விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் 'புதிய கிறித்தவர்” இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பிரான்சிசு அவையிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவர் இப்பொறுப்பிற்கு வரக்கூடாது என்று பலர் கூறினார்கள். 
2.3 புன்னைக்காயல் தலைமை இடமாதல்
முத்துக்குளித்துறையின் மிகப்பெரிய ஊர்களாகிய தூத்துக்குடி, வேம்பார், புன்னைக்காயல், வைப்பாறு போன்ற ஊர்களில் இவர் பணியாற்றினார். 1546ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாள் முழுவதும் அவர் புன்னைக்காயலைத்தான் தன் இருப்பிடமாகக் கொண்டார். அங்கு தங்கியிருந்து கொண்டே எல்லா ஊர்களிலும் மறைக்கல்வியைப் போதித்தார். சமயப்பணியாளர்களும், போர்த்துக்கீசியப் படை வீரர்களும் புன்னைக்காயலைத் தலைமையிடமாகத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணி, அது ஒரு தீவு என்பதேயாகும். போரிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தீவுப் பகுதியான புன்னைக்காயல் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்தது. 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் புன்னைக்காயல் பணிகளை மூன்று தளங்களில் வகைப்படுத்த முடியும். அவை: 
மக்களின் மொழியில் வழிபாடுகளை நடத்துவது. 
கிராமத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்குவது. (எ. கா.) மருத்துவமனை, கல்விச்சாலை. 
பிறரன்புக் குழுமம் போன்ற மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்புவது.
2.4 மறைக்கல்விப் பணி 
தொடக்ககால சமயப்பணியாளர்களின் மறைக்கல்விப் பணியை இக்காலத் தலைமுறையினரால் புரிந்து கொள்வது சிரமம்தான். இன்று நிறுவனமயமாக்கப்பட்ட திருஅவையில் எல்லா வசதி வாய்ப்புகளோடு மறைக்கல்விப் பணி நடைபெறுகிறது. ஆனால் தொடக்ககால சமயப்பணியாளர்களின் பணி என்பது காலச்சூழலை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு மக்களுக்குத் திருமுழுக்கு கொடுப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டார். முத்துக்குளித்துறையில் வாழ்ந்த பரதவர்கள் 1536 - 1537ஆம் ஆண்டுக்குள் கிறித்தவம் தழுவினாலும் அவர்களுக்கு முழுமையான திருஅவையின் கோட்பாடுகளும், இறைவேண்டல்களும் கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழ் மொழி தெரிந்த சமயப்பணியாளர்கள் இல்லை. பிரான்சிசு சவேரியார் ஓரளவு மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு மறைக்கல்வி வழங்கியிருந்தாலும், அவரால் முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியவில்லை. அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவையும் சூழலும் இருந்தது. ஆகவே அவர் முத்துக்குளித்துறைக்குப் பொறுப்பாக அந்தோனி கிரிமினாலியை நியமிக்கிறார். அவர் வடுகர்களால் படுகொலை செய்யப்படுகிறார். அவரைத்தொடர்ந்து அந்தப் பணிக்கு மிகச் சரியான நபர் யார் என்று சிந்திக்கின்ற வேளையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை சவேரியார் நியமிக்கிறார். இவர் மறைக்கல்விப் பணிக்காகவே தமிழை நன்கு கற்றுத்தேர்ந்தார். தமிழ் மொழியை 12 மாதங்களில் கற்றுத்தேர்ந்தார். மற்ற மறைப்பணியாளர்களும் சமயக்கல்வியை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து இலக்கண நூல்களையும் அவர் எழுதியுள்ளார். மக்களிடம் பேசும்போது பேசுவதை அப்படியே எழுதிக்கொள்வார். அதனை மீண்டும் மீண்டும் சொல்லி தன் தொடர்பு மொழியாக மாற்றிக்கொண்டவர். இவர் தமிழை மக்களிடமிருந்து கற்றார் என்பது வியப்புக்கு உரியதாகும். 
2.4.1 மக்களின் மொழியில் மறைக்கல்வி
 மறைக்கல்விப் பணி என்பது அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் தனிச் சிறப்பான பணியாகும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் மக்களின் மொழியிலேயே மறைக்கல்வி நடத்துவார். சிறுவர்களுக்கு மறைக்கல்வியை அறிமுகம் செய்தார். அந்நாள்களில் முத்துக்குளித்துறை முழுவதும் புதிதாகக் கிறித்தவத்திற்கு மாறியவர்கள் என்பதால், அவர்களுக்குக் கிறித்தவ இறைவேண்டல்களும், பக்தி முயற்சிகளும் அதிகம் தெரியாது. எல்லா மக்களுக்கும் மறைக்கல்வி சொல்லிக் கொடுப்பது என்பது மிகவும் சிரமமானது. சிறுவர்கள், பெரியவர்கள், இளையோர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் மறைக்கல்விக்கு அழைப்பது அன்றைய நாள்களில் மிகவும் கடினமே. மக்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதால், அவர்களின் வட்டார வழக்கில்தான் அனைத்து இறைவேண்டல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அதனைச் செவ்வனே செய்தார். முதிர்ந்த வயது பெண்களுக்கும், விதவைகளுக்கும் வெள்ளிக்கிழமைகளிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மறைக்கல்வி நடத்தினார். இவர்களுக்கு அடிப்படை இறைவேண்டல்களைச் சொல்லிக் கொடுப்பதே சமயப் பணியாளர்களின் தொடக்ககாலப் பணியாக இருந்தது. வேதங்களும், புராணங்களும் அந்நிய மொழியில் இருந்த காலகட்டத்தில் மக்களின் மொழியை அடிகளார் அங்கீகரித்தார். சொந்த நாட்டு மக்களுக்கு அந்நிய மொழியில் வேதம் சொல்லிக்கொடுத்த ஆதிக்கவாதிகளுக்கு நடுவில், அந்நிய நாட்டிலிருந்து வந்து மக்களின் மொழியைக் கற்று அவர்களின் மொழியிலேயே மறைக்கல்வி நடத்தினார் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அவாகள். 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் கடுமையான சமயப்பணியின் பயனாக 1551ஆம் ஆண்டு மட்டும் 30 கோயில்கள் (மரம், களிமண், பனை ஓலையால் வேயப்பட்டு) கடற்கரையோர ஊர்களில் கட்டப்பட்டன. இவையெல்லாம் 1553ஆம் ஆண்டு திருவாங்கூர் மன்னரால் சேதமாக்கப்பட்டாலும் அவை மீண்டும் கட்டப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் மறைக்கல்விப் பணியால்தான் முத்துக்குளித்துறையில் கிறித்தவம் ஆழமாக வேரூன்றியது என்றால் அது மிகையாகாது. தொடக்ககாலத்தில் மக்கள் மறைக்கல்வி போதித்தவர்களை உயர்வாக எண்ணினர். வேம்பார் ஊரைச் சார்ந்த ஓர் இந்து சமய முனிவர் ஒருவரை அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மனந்திருப்பி உள்ளார். கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அவருக்கு விளக்கியுள்ளார். அதன் பயனாக அவர் 1550ஆம் ஆண்டு தூய ஆவியார் பெருவிழாவின்போது திருமுழுக்குப் பெற்றுள்ளார். கி. பி. 1578 – 80ஆம் ஆண்டுகளில் கிறித்தவக் கிராமங்களைப் பார்வையிட வந்த இயேசு அவை அருள்பணியாளர் வலிஞ்ஞானோ (ஏயடபையயெழ) அடிகளார் கொடுத்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “முத்துக்குளித்துறையிலுள்ள முப்பது கிறித்தவக் ஊர்களில் முப்பதுக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. கிறித்தவர்களின் தொகை நாற்பதினாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை இருக்கும். இயேசு அவையினர் ஆறு இடங்களில் தங்கியுள்ளனர். கடலோரப் பகுதியிலுள்ளக் கோயில்கள் சிறப்பாக உள்ளன….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2.4.2 பண்பாட்டோடு இணைந்த மறைக்கல்வி
 பரதவர் புதிதாகச் சமய மாற்றம் பெற்றதால் அவர்களிடையே நீண்ட நாள்களாக இருந்து வந்த சில பழக்கங்களை மாற்ற முடியவில்லை. அவற்றை அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் பரிவுடன் அனுமதித்து விதிவிலக்களித்தார். எடுத்துக்காட்டாக, முத்துக்குளித்துறை மக்கள் நெருங்கிய உறவினரிடையே மணவுறவு கொண்டு வாழ்ந்தனர். இரத்த உறவுடையோர் திருமணம் செய்யக்கூடாது என்பது கிறித்தவக் கோட்பாடுகளிலொன்று. இரத்த உறவுடைய உடன்பிறப்புகள் நீங்கலாக ஏனைய உறவினருடன் மண ஒப்பந்தம் செய்வதை ஏற்றுக்கொண்டார். அவர்களை அதிகம் வற்புறுத்துவது அவர்களுக்கு இடர்ப்பாடாக அமையும் என்று எண்ணினார். மணஉறவுகள் எல்லாம் பண்பாட்டு அடிப்படையில் ஆழமாக வேர் கொண்டவை, உணர்வுபூர்வமானவை. அதனால் அத்தை மக்கள், மாமன் மக்கள் மண உறவு கொள்வது தமிழ்நாட்டு வழக்கம், அவ்வழக்கம் மாற்றுவதற்கு அரியது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் அதனை மாற்ற முயலவில்லை. எனவே மக்களுக்கான சமயமாகவே கிறித்தவத்தை உருவாக்கினார். அதுபோலவே சப்பரம் தூக்குவது, திருவிழாக்கள் கொண்டாடுவது, கொடிமரம், காணிக்கைகள் செலுத்துவது, நேர்ச்சைகள் என்று அனைத்து உரிமைகளையும் மக்கள் பெற்றார்கள். இதுவும் அன்றைய காலத்தில் மறைக்கல்வியாகவே பார்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறையாவது பாவமன்னிப்பு பெறவேண்டுமென்பது கிறித்தவக் கடமையாகும். போதிய அருள்பணியாளர்களில்லாத குறையால் இதனையும் வலியுறுத்தவில்லை. உள்ளத்தூய்மையைக் கிறித்தவ சமயம் வலியுறுத்துகிறது. அதற்கு ஒரு வடிகாலாகப் பாவமன்னிப்பை கருதியது. ஆனால், போதிய அருள்பணியாளர்கள் இல்லாபோது இறுக்கமான அந்த விதியைச் சற்று தளர்த்தி, நெகிழ்ந்து கொடுத்து, சமயப் பணியாற்றினர். திருமண உறவு சமுதாய அடிப்படை சார்ந்தது. ஆனால் கத்தோலிக்கக் கிறித்;தவ சமயத்தில் அது சமய நிகழ்வாகவே மாற்றப்பட்டு விட்டது. கோயிலில் வைத்துத்திருமணம் செய்யவேண்டும் என்பதே விதி. இருப்பினும் அதனை மீறி இரகசியமாகத் திருமணம் முடித்துக் கொள்பவர்களுக்குச் சாதாரணத்தண்டனை கொடுத்தார் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். கடன் திருநாள், நோன்பு இவற்றைக் கட்டாயப்படுத்தவில்லை. குழந்தைகளுக்கு ஆடம்பர செலவு இல்லாமல் வீடுகளிலேயே திருமுழுக்குச் சடங்குநடத்த அனுமதி அளித்தார்.

அலகு – 3
அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் சமூகப்பணி
3.1 போர்த்துக்கல் குடியேற்ற நாட்டினரும் தமிழும்
ஐரோப்பாவில் இருந்து சமயப் பரப்பு பணிக்காக இந்தியாவிற்கு பல சமயப்பரப்புப் பணியாளர்கள் வந்தனர். அவர்கள் எல்லாரும் போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழியினைக் கற்றுக் கொண்டனர். “பாதிரியார்” என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்து தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டவர்களுள் முதன்மையானவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அவர்கள். இவர் வாழ்ந்த முத்துக்குளித்துறைப் பகுதிகளில் உள்ள எல்லா சமயத்தினரும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை நேசித்தனர்.
3.2 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் தமிழ் மொழி மீதான தாகம்
தமிழில் உள்ள எல்லா இலக்கண நூலையும் அறிந்தவர் அல்ல அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். ஆனால் மக்களுக்கு மறையுரை, மறைக்கல்வி, இறைக்கோட்பாடுகளை விளக்கிச் சொல்லும் அளவுக்கு வட்டார மொழியை முத்துக்களித்துறைப் பகுதிகளில் நன்கு கற்றுக் கொண்டார். பேச்சுத்தமிழை அவர் நன்கு கற்றுக்கொண்டார். ஞாயிறு மறையுரைகளை ஒவ்வொரு வாரமும் தவறாமல் அவர் தமிழிலேயே எழுதிப் பயன்படுத்தினார். அதனை மற்ற கிராமங்களுக்கும் கொடுத்து வாசிக்க வைத்தார். தமிழ் மொழியில் நன்கு பேசக் கற்றுக்கொண்டதால், நல்ல நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினார். சவேரியார் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த இறைவேண்டல்களை எல்லாம் திருத்தம் செய்ய முற்பட்டார். அதில் சில சிரமங்கள் இருக்கவே அவரே புதிதாக மொழிபெயர்த்துள்ளார். இதனால் இவரைப் பேச்சுத்தமிழ் மொழியின் முதல் இலக்கண ஆசிரியர் என்றால் மிகையாகாது. 
3.2.1 தமிழ் மொழியை வளர்த்திட கல்லூரி
தமிழ்மொழியைக் கற்றதோடு மட்டுமல்லாமல் அந்த மொழியை வளர்க்க புன்னைக்காயலில் 1567ஆம் ஆண்டு தமிழ்க் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். முத்துக்குளித்துறைப் பகுதியில் பணியாற்றிய இயேசு அவையினர் இக்கல்லூரியில் தமிழ் பயின்றனர். இக்கல்லூரியில் இயேசு அவையின் முதல் அருள்பணியாளர் கேரளத்தைச் சேர்ந்த பேதுரு லூயித் தமிழ்ப் பேராசிரியராக இருந்துள்ளார். அடிகளாரின் தமிழ் மொழி பெயர்ப்புப் பணியிலும், நூல் அச்சாக்கப்பணியிலும் இவர் பெரும் உதவியாக இருந்துள்ளார். இவரது போதனையால் பலர் உள்நாட்டில் கிறித்தவர்களானார்கள். மேலும் பரதவர்களின் பெரும் உதவியுடன் 1588ஆம் ஆண்டு புன்னைக்காயலில் குருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவியுள்ளார். இதில் பயிலும் மாணவர்களுக்கு இலத்தின், போர்த்துக்கீசியம் போன்ற மொழிகளும் இறையியல், இசை, வழிபாட்டு முறைகள் ஆகியனவும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பணியைப் பாராட்டி, அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதும்படி, இயேசு அவை தலைவருக்கு 1549ஆம் ஆண்டு சவேரியார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “போர்த்துக்கல் நாட்டு இயேசு அவையைச் சார்ந்த அருள்பணியாளர் கன்னியாகுமரியில் இருக்கிறார். அவர் பெயர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு. தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்த இவர் மிகவும் நல்லவர், முன்மாதிரியானவர். இந்த மொழியை நன்கு அறிந்திருப்பதால் இருவர் செய்யக் கூடிய நல்லதை காட்டிலும் அதிகமாக இவர் ஒருவரே செய்கிறார். இந்தப் பகுதியில் உள்ள கிறித்தவர்கள் இவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மொழியில் அவர் செய்யக் கூடிய மறையுரைகளையும், சொற்பொழிவுகளையும் போற்றுகின்றனர்... என்று குறிப்பிட்டுள்ளார். 
அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் சமயப்பணிக்காக மட்டும் தமிழ் மொழியைக் கற்றவர் அல்ல, மாறாக அம்மொழியை வளர்ப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழகத்தில் தமிழால் வளர்ந்தவர்கள் ஏராளம். தமிழை வளர்த்தவர்கள் சிலரே, இவவகையில் சமயப்பணியாளர்களால் உலக அரங்கில் மிக சிறப்பான இடத்தினை தமிழ் பெற்றுள்ளது.
3.3 முதல் அச்சுக்கூடம் தந்த அண்ட்ரிக் அண்ட்ரிகசு
ஜெர்மனியின் “ஆயணெ” என்ற நகரில் பிறந்த குட்டன்பெர்க் தான் முதல் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1455ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் அச்சு முறையில் உலகின் முதல் நூல் உருவானது. இலத்தின் மொழியில் இரண்டு தொகுதிகளில் திருவிவிலியம் 300 பக்கங்களுடன் வெளியானது. ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் திருவிவிலியம்” (புரவநnடிநசப டீiடிடந) என்றே அழைக்கப்பட்டது. இவர் கண்டுபிடித்த முதல் அச்சு இயந்திரம் பிரான்சிசு துறவு அவை இல்லத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அது சமயப்பரப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. 
புன்னைக்காயல் தலைமையிடமாக போர்த்துக்கீசியர்களுக்கு இருந்தது. சமயப்பணியாளர்களும் அதைத் தங்களின் தலைமையிடமாகக் கொண்டனர். புன்னைக்காயலில் தன் வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்த அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் முதல் அச்சகத்தை உருவாக்கினார். இந்த அச்சகத்திற்கு முத்துக்குளித்துறை பரதவர்கள் நானூறு குருசேடாக்கள் நிதி வழங்கியுள்ளனர்.. 
3.3.1 தம்பிரான் வணக்கம் 
தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்ட நூல் 'தம்பிரான் வணக்கம்”. இது 1578ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, கொல்லம் மீட்பர் இறையியல் கல்லூரியில் அச்சிட்டப்பட்டது. இதை வெளியிட்டவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் ஆவார். 1542ஆம் ஆண்டு சவேரியார் கோவா வந்தவுடன், புதிதாக கிறித்தவ சமயம் தழுவிய மக்களுக்கு இறைவேண்டல், மன்றாட்டுகளைச் சொல்லிக் கொடுப்பதற்காக னுழஉவசiயெ ஊhசளைவரஅ என்ற நூலைப் போர்த்துக்கீசிய மொழியில் எழுதினார். பின்னர் 1557ஆம் ஆண்டு கோவாவில் அச்சிடப்பட்டு சமயப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நூலில் வெளியான நம்பிக்கைப் அறிக்கை என்ற இறைவேண்டல்களைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு “தம்பிரான் வணக்கம்” எனும் பெயரில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் வெளியிட்டார். சவேரியார் தனது போர்த்துக்கீசிய நூலுக்கு னுழஉவசiயெ ஊhசளைவரஅ என்று பெயரிட்டிருந்தார். இதனைக் கிறித்தவக் கோட்பாடு என்றே தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அடிகளார் தம்பிரான் வணக்கம் என்று மொழி பெயர்த்துள்ளார். தம்பிரான் என்றால் கடவுளைக் குறிக்கும் சொல், தாமே பிரான் என்ற சொல்லை வெளிப்படுத்துவதாகும். 
3.3.2 கிரிசித்தியானி வணக்கம் 
    1579ஆம் ஆண்டு கொச்சியில் அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் இரண்டாவது நூலான 'கிரிசித்தியானி வணக்கம்” அச்சானது. மார்க்கோத் ஜார்ஜ் என்பவர் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய னுழஉசiயெ ஊhசளைவயஅ என்ற நூலின் தமிழாக்கமே இந்நூலாகும். இந்நூல் வினா - விடை வடிவில் அமைந்துள்ளது. இது கிறித்தவத்தின் அடிப்படை உண்மைகளைக் கூறுகிறது. இந்நூலை உருவாக்க வேறு தமிழறிஞர்களின் துணையை இவர் நாடிப்பெற்றுள்ளார். இந்நூலின் பெயர்க்காரணி குறித்து இராசமாணிக்கம் அடிகளார் பின்வருமாhறு விளக்கம் தருகிறார். “கிரிசித்தியானி” என்ற சொல்லுக்குக் கிறித்தவன் என்று பொருள். இறைவேண்டல் அல்லது வழிபாடு அல்லது வணக்கம் என்று பொருள் தரும். ஆகவே கிரிசித்தியானி வணக்கம் என்பது கிறித்தவன் செய்யும் வழிபாட்டைச் சுட்டிக்காட்டும் என்கிறார்.

3.3.3 கொம்பெசியொனாரு 
கத்தோலிக்கர்களின் சமய வாழ்வில் தாம் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டு அதற்குப் ஒப்புரவு தேடுவது முதன்மை இடம் பெறுகிறது. பாவங்களைத்தலையான பாவங்கள், சாவான பாவங்கள் என இரண்டாகப் பகுத்துள்ளனர். தான் செய்த பாவங்களை ஒரு கத்தோலிக்கர் இரண்டு வழிகளில் ஒத்துக்கொண்டு அதற்குப் பொறுத்தல் (ஒப்புரவு) தேடலாம். 
திருப்பலியின் தொடக்கத்தில் அனைவரும் தாம் செய்த பாவங்கள் என்ன என்று குறிப்பிடாது பொதுவாக இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவது. “என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே" என்று தன் மார்பில் அடித்து பாவமன்னிப்பு வேண்டுவது. இது ஒரு வெளிப்படையான நிகழ்வாகும். 
அருள்பணியாளரிடம் தாம் செய்த பாவங்கள் என்ன என்று குறிப்பிட்டு, ஆண்டவரிடம் பொறுத்தல் கேட்பது ஒப்புரவு அருளடையாளம் என்று அழைக்கிறார்கள். செய்த பாவங்களுக்கேற்ற பரிகாரங்களை மேற்கொள்ள அருள்பணியாளர் வழிகாட்டுவார். 
எனவே ஒவ்வொரு கத்தோலிக்கரும் பாவங்கள், பாவ மன்னிப்பு தொடர்பாகச் செய்ய வேண்டிய இறைவேண்டல் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம். இதன் பொருட்டே இந்நூலை அடிகளார் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். ஊழகெநளளழையெசைழ என்ற போர்ச்சுக்கீசிய மொழிச் சொல்லின் ஒலி வடிவமாகவே இந்நூலின் தலைப்பு அமைந்துள்ளது. 
3.3.4 அடியார் வரலாறு
தமிழ் நாட்டு எல்லைக்குள் இரண்டாவது தமிழ் நூலாக அச்சிடப்பட்ட நூல் 'அடியார் வரலாறு” ஆகும். இது ஸ்பானிய மொழியில் கத்தோலிக்கப் புனிதர்களின் வரலாறைக் கூறும் குடழள ளுயnஉவழசரஅ என்ற நூலின் மொழிப்பெயர்ப்பாகும். ஆயினும் மூலநூலில் இருந்து விலகாமல் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பல்ல. தாம் பணியாற்றும் பணித்தளத்தில் வாழும் பெரும்பான்மையினரான பரதவர்களை மனதில் கொண்டு ஆங்காங்கே அவர்களுக்கு அறிவுரைகள் கூறும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் முந்தைய மூன்று படைப்புகளையும் விட அதிகப் பக்கங்களைக் கொண்டது. இந்நூல் 669 பக்கங்கள் கொண்டது. 
3.4 நாள்காட்டி சீர்திருத்தம் 
இந்நூலின் இறுதியில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மேற்கொண்ட நாள்காட்டிச் சீர்திருத்தம் இடம் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த அருள்பணியாளர்களுக்கு தமிழ் நாள்காட்டி தெரியாது. அதுபோன்றே புதிதாகக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியப் பரதவர்களுக்கு ஐரோப்பிய நாள்காட்டி தெரியாது. இதனால் கத்தோலிக்கச் சமயம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தீர்க்கும் வகையில் அடிகளார் நாள்காட்டி சீர்திருத்தம் ஒன்றை உருவாக்கினார். இதன்படி தைத்திங்கள் ஆண்டின் முதல் மாதமாகி, சனவரி மாதத்திற்கு இணையாக்கப்பட்டது. சனவரி ஒன்றும், தை ஒன்றும் ஒன்றாக ஆக்கப்பட்டன. மாசி மாதம் பிப்ரவரிக்கு இணையாக்கப்பட்டு 28 நாள்களைக் கொண்டதாகியது. பிப்ரவரியைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருபத்தொன்பது நாள்களைப் பெற்றது. மார்கழி மாதத்தில், கிறித்து பிறப்பு விழா மார்கழி 25ஆம் நாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நம்முடைய நாயகன் இயேசு கிறித்து பிறப்பு பெருநாள் என்று அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் மறைவுக்குப் பின்னரும் அவரது நாள்காட்டி சீர்திருத்தம் தமிழ்நாட்டில் கத்தோலிக்க மக்களிடையே நிலைபெற்றிருந்துள்ளது. வீரமாமுனிவர் தமது தேம்பாவணி காப்பியத்தில் இயேசுவின் பிறப்பைக் குறிப்பிடும்போது மாதம் “மார்கழி வைகல் ஐயைந்தாய்” என்றே குறிப்பிடுகிறார். தற்போதும் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் பணிபுரிந்த பரதவ மக்களின் பேச்சு வழக்கில் அடிகளாரின் நாள்காட்டி சீர்திருத்தம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆகத்து ஐந்தாம் நாள் நிகழும் தூத்துக்குடி பனிமய மாதா திருநாளை 'ஆவணி ஐந்து திருநாள்” என்று குறிப்பிடும் வழக்கம் பரதகுல முதியவர்களிடம் இன்றும் உள்ளது. 
3.5 அண்ட்ரிக் அண்ட்ரிகசு மலர்வித்த மக்கள் இயக்கம்
மக்கள் வரலாறை மறந்து போனால், வரலாறு மக்களை வேறு திசையில் கொண்டுசெல்லும் என்பதற்குச் சிறந்த சான்று அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் தொடங்கிய பிறரன்புச் சகோதரத்துவ அவை ஆகும். இது ஆங்கிலத்தில் ஊழகெசயவநசnவைல ழக ஊhயசவைல என்றும், போர்ச்சுக்கீசிய மொழியில் ஊழகெசயசயை னய ஊயசனையனய என்றும் அழைக்கப்பட்டது. இன்று இது கொம்பீரியர் அவை என்று அழைக்கப்படுகிறது. மணப்பாடு, ஆலந்தலை, கூடுதாலை, வீரபாண்டியன் பட்டணம், உவரி, பெருமணல் போன்ற கடற்கரைக் கிராமங்களில் இந்த அவை இன்றும் காணப்படுகிறது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இந்தச் அவையைத் தொடங்கியதன் நோக்கம் மிக உயர்வானது. ஆனால் வரலாற்றில் இது வெறும் பக்த அவையாக மாறியுள்ளது வேடிக்கையும், நகைப்புக்குரியதுமாகும். அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் முத்துக்குளித்துறைப் பணித்தளத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு மீனவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, சமய வாழ்வில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு மக்கள் இயக்கமாக மாறுவதுதான் என்பதை அவர் உணர்ந்து அவர்களை இயக்கமாக மாற்றி “பிறரன்பு சகோதரச் அவையைத்” தொடங்கினார். 1572ஆம் ஆண்டு இந்த அவை புன்னைக்காயலில் தொடங்கப்பட்டது. இந்தச் அவைக்கு 13 அதிகாரங்களைக் கொண்ட விதிமுறைகளை அவர் வகுத்தார். இவ்வமைப்பு கத்தோலிக்கப் பொதுநிiலையினருக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் விதிமுறைகளுள் பெரும்பாலானவை எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடியதாகவே இருந்தது. இதில் ஆண்களும் பெண்களும் இணைந்தே இருந்துள்ளனர். பிறரன்பு சகோதரத்துவ அவையின் மிக முக்கியப் பணிகளாக அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் வரையறுத்தவை பின்வருமாறு…
இறைவேண்டல் 
பிறரன்புப் பணிகள் 
நோயுற்றோருக்கு உதவுவது 
தேவையில் இருப்போருக்கு உதவுதல் 
சமூக ஒற்றுமை 
மருத்துவத்தொண்டு 
நற்பண்புகள் 
குழந்தை வளர்ப்பு
3.6 மருத்துவப் பணி
தமிழக வரலாற்றில் முதல் மருத்துவம் புன்னைக்காயலில் தொடங்கப்பட்டது. மருந்து இல்லாத காலத்தில் மக்கள் பெரும் கொள்ளை நோயினால் செத்துமடிவது அன்றாடச் செயல்பாடாக இருந்தது. இதைக் கண்டு மனம் வருந்திய அடிகளார் மக்களுக்காக மருத்துவமனையை நிறுவினார். உள்ூளுர் மக்களின் நன்கொடையாலே அந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நாளடைவில் மருத்துவமனையை நடத்துவதற்குப் போதிய பணம் இல்லாமல் துன்புற்றனர். ஏனென்றால் நோயுற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. மருந்துகளை வாங்குவதும் அதை மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுப்பதும் பெரும் பொருள் செலவை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் உண்டியலில் மருத்துவமனை பராமரிப்புக்காகக் காணிக்கை பிரிக்கப்பட்டது. போர்த்துக்கல் படைத்தளபதிகளுக்கும் இங்கு மருத்துவம் செய்யப்பட்டது. அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவமனைகள்தான் இருந்தன. ஒன்று கோவாவில் உள்ள சால்செட்டிலும் மற்றொன்று தமிழகத்தின் புன்னைக்காயலிலும் என்பதை நாம் பெருமையோடு எண்ணி வியக்க வேண்டியது. இரண்டையும் நிறுவியவர்கள் போர்த்துக்கீசியர்கள். அதில் தமிழகத்தில் நிறுவியவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். புன்னைக்காயலில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் உருவாக்கிய மருத்துவமனைதான் தமிழ்நாட்டின் முதல் மருத்துவமனையாகும். முத்துக்குளித்துறையின் முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இம்முதல் மருத்துவமனையை 1550ஆம் ஆண்டு நிறுவினார் என்பதைப் பல்வேறு ஆவணங்களும் உறுதி செய்கின்றன. இதுபற்றி அடிகளார் உரோமையிலுள்ள இயேசு அவைத்தலைமையகத்திற்கு 12. 01. 1551ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப்பகுதியிலும் பிணியுற்ற ஏழைமக்களின் நலனுக்காக புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இம்மருத்துவமனை, இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்க புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை. இம்மருத்துவமனை நமது (இயேசு அவை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் சாதிமத வேறுபாடின்றி அனைவரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக உள்ளது. அதனால் கிறித்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக் கருதுகிறார்கள். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருமுழுக்குப் பெற்று இறந்தனர்....” என்று குறிப்பிடுகிறார்.
புன்னைக்காயலில் மட்டுமல்லாது கிறித்தவ மக்கள் அதிகம் வாழும் பிற ஊர்களிலும் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். மருத்துவனை என்பது அன்றைய நாளில் எங்கும் இல்லாத சூழலில் மக்கள் மருத்துவமனையால் அடையும் நன்மையைப் பார்த்துவிட்டு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பெரும் முயற்சியால் ஏழு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. மாக்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்பு அனைத்தையும் கிறித்தவ மக்களிடமே கொடுத்துள்ளார். மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையால்தான் அனைத்து மருத்துவமனைகளும் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளனர். அதைக் கிறித்தவ வாழ்வின் விழுமியமாகவும் போதித்துள்ளார். 1572ஆம் ஆண்டு இயேசு அவை கணக்குப்படி முத்துக்குளித்துறையில் மொத்தம் 27 கிறித்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன. மணப்பாடு, வீரபாண்டியன் பட்டணம், புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார், மன்னார் இவற்றில் புன்னைக்காயல் மருத்துவனையும், தூத்துக்குடி மருத்துவமனையும் ஏனைய மருத்துவமனைகளைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருந்தன. இங்கு சமய வேறுபாடின்றி நோயுற்றோர் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1575ஆம் ஆண்டு அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் எழுதிய கடிதம் ஒன்றில் “கிறித்தவராக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிறித்தவரல்லாத நோயுற்றோருக்கும் இங்கு இடமுண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

3.7 அண்ட்ரிக் அண்ட்ரிகசுவின் வாழ்வு நமக்கு தரும் பாடம்
முத்துக்குளித்துறை மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியதற்கு மிக அடிப்படைக் காரணி மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்ததே ஆகும். கிறித்தவ சமயம் பாதுகாப்பையும், மதிப்பையும், மாண்பையும், அங்கீகாரத்தையும் வழங்குகின்றது. அருள்பணியாளர்கள் மக்கள் சார்பாளர்களாகவே நிலைப்பாடு எடுக்கிறார்கள். அதற்காகத்தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள். தமிழகத் திருஅவை வரலாற்றில் அருள்பணியாளர்கள் புனிதர்களாக கருதப்பட்டு வணக்கத்திற்கு உரியவர்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களின் புரட்சிகர அரசியல், மாற்றுப் பன்பாட்டுப் பணிகளுக்கு எல்லாம் புனிதம் என்று கற்பிக்கப்படுகிறது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரின் பணியும், வாழ்வும் அப்படியே சமயத்தளத்திற்குள் முடக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைப் பணி இன்றுவரை மக்களுக்கு விளக்கப்படவில்லை. எல்லா அருள்பணியாளர்களையும் சமயத்திற்குள்ளே முடக்கிவிட முடியாது. மாறாக அவர்களின் மாற்றுப் பணிகளை நாம் புதிய பொருள்கோள் முறையில் மறுவாசிப்புச் செய்ய வேண்டும். 
நிறைவாக
தமிழ்ச் சமூகம் இவரது தமிழ்ப் பணிக்காக இவரைப் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் இன்றுவரை தமிழை முதலில் அச்சேற்றியவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் என்பதை அரசும், பொதுச் சமூகமும் அங்கீகரிக்க மறுக்கிறது. வரலாற்றை ஆதிக்கவாதிகளின் மனநிலையிலே நாமும் வாசித்துப் பழக்கப்பட்டுப் போனோம், அதில் கொலையுண்ட அடிமைக்கும் வரலாறு உண்டு என்பதை மறந்து போனோம். சமயங்களையும் கடந்த மனிதநேயப் பணியையே அடிகளார் செய்துள்ளார். இது இன்றைய சமயவாதச் சக்திகளுக்குப் பாடமாகும். 
வரலாறு என்பது நடந்த நிகழ்வுகளையும், செயல்களையும் நினைவுகூறுவது மட்டுமல்ல, மாறாக அவற்றைப் பின்புலமாகக் கொண்டு தற்கால வாழ்வியலை அமைத்துக்கொள்வது. அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இன்றைய மக்கள் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு சான்றாக உள்ளார். மேலும் அவர் இன்று மக்களின் அன்றாட அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளார். இவர் தமிழைக் கற்றது என்பதை பார்ப்பனிய மறுப்பாகவே புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சமற்கிருதம் மட்டுமே இறைமொழி, சமய மொழி என்று தம்பட்டம் அடித்து மற்ற மொழிகளை அழிக்கும் ஆரியத்திற்கு எதிராக அன்றே மாற்று விதைகளை விதைத்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார். தமிழைக் கற்பது என்பது அடித்தள மக்களின் மொழியைக் கற்பதாகும். மக்களின் மொழியில் மக்களிடம் பணிசெய்ததால் இன்றும் அவர் மக்களின் மனதில் வாழ்கிறார். திண்ணைப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்த மக்கள் அடிகளாரின் கல்லூரியில் மனிதராக மதிக்கப்பட்டார்கள். அடித்தள மக்கள் பார்வை என்பதும், அடித்தள மக்களை மதிப்பது என்பதும் அவர்கள் மொழியை மதிப்பதுமாகும். இவ்வகையில் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் இன்றைய தலைமுறைக்கு சான்றாக உள்ளார். இன்று மக்களுக்கான நிலைப்பாடு எடுத்து வாழ்வோர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளாரை வாசிக்காமல் பணிசெய்ய இயலாது. தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் அண்ட்ரிக் அண்ட்ரிகசு அடிகளார் என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

பொங்கல் விழா 2020


பொங்கல் விழா

இயேசுவில் அன்புக்குரிய அருள் தந்தையர்களை, அருள் சகோதரர்களே!

உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம.; இன்று நாம் அனைவரும் இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை சிறப்பிக்க இங்கு ஒன்று கூடி இருக்கிறோம்.


நாம் வாழும் இவ்வுலகில் விழாக்கள் எல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டது என்றால் அது உறவையும், ஒற்றுமையையும், அன்பையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டவை. இவ்வுலகில் நாம் கொண்டாடக்கூடிய ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமான வரலாறும், அர்த்தமும் இருக்கும். ஆனால் இன்றைய நாளில் நாம் சிறப்பிக்க கூடிய இந்த பொங்கல் திருநாளானது உழைப்பின் நாளாகவும், அறுவடைத் திருநாளாகவும், உழைப்புக்கு உதவி செய்யக்கூடிய உபகரணங்களையும், உயிர்களையும் மதித்து வணங்கும் நாளாகவும் இந்நாள் அமைந்துள்ளது. எனவே இன்றைய நாளில் உங்கள் ஒவ்வொருவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


பொங்கல் வைக்கும் பொழுது பொங்கல் பொங்குகிறது. பொங்கல் பொங்கும் போது சுற்றியுள்ள அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இப்படி கூறுவதோடு மட்டும் நமது மகிழ்ச்சி நிறைவடைவது அல்ல. மாறாக அதையும் கடந்து இன்றைய விழாவானது பலரின் மனங்களிலும் மகிழ்ச்சியை உருவாக்க கூடியதாக அமைந்திட வேண்டுமாயின் அதற்கான செயல்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.


விழாக்கள் என்பதெல்லாம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காகத்தான் உருவாகின. பிரிந்து போன உறவுகளை இன்று இனம் கண்டு கொள்வோம். பேச மறுத்த உறவுகளோடு இன்று உறவுகளை புதுப்பித்துக் கொள்வோம்.


இன்றைய நாளின் முதல் வாசகமானது சிறுவன் சாமுவேலின் அழைப்பை பற்றி நமக்கு கூறுகிறது. சிறுவன் சாமுவேலை ஆண்டவர் அழைத்தபோது தன்னை அழைப்பது ஆண்டவர் தான் என்பதை அறிந்து கொள்ள இயலாதவனாய் ஏலி என்ற குருவின் உதவியை நாடுகிறான். எலி என்பவரோ அழைப்பது ஆண்டவர் என்பதை அறிந்துகொண்டு அதை அந்தச் சிறுவன் சாமுவேல் கண்டுணர உதவி செய்கிறார். அதுபோலவே இன்றைய நாளானது வெறும் வார்த்தைகள் வழி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதோடு அல்லாமல் செயல்வடிவம் கொடுக்க கூடிய விழாவாக மாறுவதே அவசியமாகும் இன்றைய நாளின் மகிழ்ச்சி என்பது உறவுகளை புதுப்பித்துக் கொள்வதில் தான் அமைந்திருக்கிறது. நம் வாழ்வில் நம்முடைய உழைப்புக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களையும், உயிர்களையும் நினைவு கூறக்கூடிய நாம் இன்று நம்மை விட்டு பிரிந்த அல்லது நம் பிரிந்துக் கொண்ட உறவுகளையும் நினைவு கூறுவோம். உறவு  சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உறவுகளை புதுப்பித்து இன்பமுற்று வாழ்வோம் இந்நாள் முதல்.


ஒற்றுமை இல்லாத காரணத்தினாலே இன்று உலகில் பலவிதமான பிரச்சனைகளுக்கு நாம் ஆளாகி கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலருடைய நோய்களை குணமாக்குகிறார், பலரை தேடி சென்று உதவி செய்கிறார். “வாருங்கள் நாம் அடுத்த ஊருக்கு போவோம் அங்கும் நான் நற்செய்திப் பணியை ஆற்ற வேண்டும்” என்று கூறி சீடர்களை அழைத்துக் கொண்டு இயேசு செல்வதை நாம் இன்றைய நற்செய்தி வாசகங்களில் வாசிக்க கேட்டோம்.


இவ்வுலகில் இயேசு வாழ்ந்த போது ஒவ்வொரு மனிதனையும் தேடிச் சென்று, அவர்களின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களோடு ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டார.; அவரை தேடி வந்தவர்களை அதே உறவோடு ஏற்றும் கொண்டவர்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனை இன்றும் பின் தொடரக் கூடிய நாம். வெறும் வார்த்தை வடிவில் அவரை பின் தொடர்வதை விட்டுவிட்டு அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கியவர்களாக அவரை பின் தொடர்வதே அவசியமானதாகும். அதனடிப்படையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறரை தேடிச் சென்று அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது போல, நாமும் நம் அருகில் உள்ளவர்களோடு நல்லுறவுடன் வாழ்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ஏன்? நமது குடும்பங்களில் உள்ளவர்களுடன் உடலுறவுடன் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? என்பதை சிந்திக்க இன்றைய நாள் உங்களை அழைக்கின்றது. ஒருவேளை உறவுகளிடையே சிக்கல்கள் இருக்குமாயின் புதுப்பித்துக் கொள்வோம். பொங்கல் பொங்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை போல உறவுகள் இணையும்போதும், உறவுகள் புதுப்பிக்கப்படும் பொதும், உள்ளத்தில் எழக்கூடிய மகிழ்ச்சி அளவிடமுடியாதது. அந்த மகிழ்ச்சியே ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்பும் மகிழ்ச்சி. அதுவே இயேசுவையும் மகிழ்விக்க கூடியதாகும். உறவுகளை புதுப்பிக்கும் பொழுது உண்மையில் நாம் ஆண்டவர் இயேசுவோடு உறவில் இணைந்தவர்கள் இருக்கிறோம்.


ஒரு முறை வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்ட போது ஒரு மாணவன் கூறினான் அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்வது தான் வாழ்க்கை என்று. அதாவது “கருவறையிலிருந்து கல்லறைக்கு செல்வதுதான் வாழ்க்கை” என்று கூறினான். இன்னொரு மாணவன் “சோதனை” என்று எழுதினான் அதில் இருக்கக்கூடிய “N” அழித்துவிட்டு கூறினான் “சாதனை”.  “சோதனையை உடைத்து சாதனை படைப்பதே வாழ்க்கை” என்றான். மற்றொரு மாணவி “யானையின் பலம்  தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையிலே” நம்பிக்கை தான் வாழ்க்கை என்றால். இன்னொரு மாணவன்.

“அன்பிலிருந்து வருவதும், அன்பைத் தருவதும், மீண்டும் அதே அன்பில் இணைவதும் தான் வாழ்க்கை” என்றான். அன்பற்ற உலகில் அன்பை விதைப்பது தான் விழாக்களின் மையமாகும். மனிதர்களிடத்தில் அன்பை விதைப்போம்.


“அன்புதான் உங்கள் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீங்கள்தான்” என்கிறார் அன்னை தெரசா அவர்கள். யாரென்று தெரியாதவர்களையும், குழந்தைகளையும் நோயாளிகளையும் அள்ளி அரவணைத்து, அவர்களுக்காக வாழ்ந்து, அவர்களுக்காகவே பணி செய்து, அவர்கள் மூலம் இயேசுவை கண்டவர் அன்னை தெரசா அவர்கள். இன்று நாம் வாழக்கூடிய இவ்வுலகில் அடுத்தவர் மீது அக்கறையும், அன்பும் காட்டக்கூடிய மனிதர்களே தேவைப்படுகிறார்கள்..


“குடும்பத்தில் அன்பை விதையுங்கள் அன்பை அங்கு நாம் அறுவடை செய்ய இயலும்”. அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் குடும்பங்களில் அன்பை விதைப்போம். ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வோம். வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டு கொள்வோம். இந்நாள் முதல் ஒற்றுமையை வாழ்வின் இலக்காக அமையட்டும்  “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”. தமிழர் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் ஒற்றுமை உணர்வு நம்மிடையே மேலோங்கி வளர இறையருள் வேண்டியவர்களாய் இணைந்து இந்த திருப்பலியில் செபிப்போம். 





வியாழன், 9 ஜனவரி, 2020

திருத்தூதர் பவுல் மனமாற்ற விழா 2020

திருத்தூதர் பவுல் மனமாற்ற விழா 
திருப்பலி முன்னுரை
மனமாற்றம் வாழ்வு மாற்றத்தின் இதை இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம் அன்னை திருஅவை திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழாவை கொண்டாட அழைக்கின்றது. இவ்விழாவில் பங்கேற்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

தூதர் பவுல் பெரியவரிலிருந்து கடைநிலையவருக்கும். யு
யூதத்தின் இறுகிய மனப்போக்கில் இருந்து சான்று பகரும் வாழ்வுக்கும் . துன்பத்திலிருந்து இயேசுவுக்காக துன்பம் ஏற்ப வராகவும் .சவுல் என்னும் யூதராக இருந்து பவுலாக மாறி பிற இனத்தவருக்கு தூதரானார். 
இயேசுவை சந்திப்பதற்கு முன்பு இவருடைய வாழ்வு தன்னலம் மிக்கதாகவும் மேலோட்டமான சமய சடங்குகளை ஆன்மீக வாழ்வாக கொண்டதாக இருந்தது .ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அவருடைய வாழ்வு தன்னலம் கடந்து பிறர் நலம் மையமாகவும் இயேசுவின் மீது அவரின் இறையாட்சியின் மீது ஆர்வமுள்ள ஆன்மீக வாழ்வும் உருமாற்றம் பெற்றது.

வாழ்வது நான் அல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் கலாத்தியர் 2: 20 என்ற பவுலின் வார்த்தை முற்றிலும் அவர் இறைவனின் இறையாட்சி பணியில் இரண்டறக் கலந்திருக்கும் நிறைவாழ்வை சுட்டிக்காட்டுகின்றது.
இயேசுவின் சந்திப்பு இவருக்கு புதிய பிறப்பை கொடுத்திருக்கிறது நற்செய்தி அறிவிப்பு பணி புதிய பாதையைக் காட்டுகிறது இவரின் வாழ்வில் அனைத்தையும் இயேசுவுக்காக இழக்கின்ற அவருக்காக உயிரையும் அளிக்கின்ற சான்று பகரும் புனித வாழ்வைத் தருகிறது.

அன்புக்குரியவர்களே இயேசுவின் பாதையை தன் இலக்காகவும் அவரின் வாழ்வை முன்மாதிரியாகவும் அவர் பணியை உயிர் மூச்சாகவும் கொண்டு திருத்தூது பணியாற்றிய பவுலை போல நாமும் இயேசுவுக்காக அவரின் இறையாட்சி மதிப்பீடு களுக்காக நம் வாழ்வையும் அர்ப்பணிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

திருக்காட்சி பெருவிழா - 2020


திருக்காட்சி பெருவிழா - 2020

அன்புக்குரிய இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விண்மீனை பின்தொடர்ந்து சென்ற ஞானிகள் பாலன் இயேசுவை கண்டு கொண்ட நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். அதன் அடிப்படையில் பிறந்துள்ள இப்புதிய ஆண்டிலே நாம் எதனை அல்லது யாரை பின்பற்றிக் கொண்டு எப்படி அல்லது எதன் அடிப்படையில் செல்லப் போகிறோம்  என சிந்திக்க உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன்.

சமீபத்தில் கடந்த ஆண்டுகளில் விகடன் பத்திரிக்கையில் சாதனை படைத்த 10 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை; பிடித்தவரின் பெயர் டாக்டர் காந்திமதிநாதன். யார் இந்த காந்திமதிநாதன்? என்று தேடிப் பார்த்த பொழுது மதுரைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தோப்பூர் எனும் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக மற்றும் தோற்று நோய் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற கூடியவர் இவர்.

அரசு மருத்துவமனை என்றால் நம் அனைவருக்கும் தெரியும் அது எந்த அளவிற்கு சுத்தமானதாகவும், சுகாதாரமான சூழல் கொண்டதாகவும் இருக்கும் என்று. நகர்புறங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.  அவ்வகையில் இந்த தோப்பூரில் இருக்கக்கூடிய அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனை முழுவதும் முட்புதர்கள்  மண்டையும், மக்கள் கால் வைக்க தயங்க கூடிய ஒரு மருத்துவ மனையாகவே இருந்தது. எனவே மக்கள் அனைவரும் அதனை காட்டாஸ்பத்திரி என்றே அழைப்பார்கள்..

இச்சூழலை மாற்றும் விதத்தில் மருத்துவமனை வளாகத்தை ஒரு பசுமை வளாகமாக மாற்றிய ஒரு மகத்துவமான மனிதர் தான் இந்த டாக்டர் காந்திமதிநாதன் என்பவர். மிகவும் தூய்மையான வார்டுகள், ஒவ்வொரு வார்டிலும் டிவி, ரேடியோ, சுகாதார வசதிகள் கொண்ட சலூன், மூலிகைத்தோட்டம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், நோயாளிகளுக்கு என தொழிற் பயிற்சிகள் என இவரது முயற்சியால் முழுமையான “மறுவாழ்வு மையமாகவே” இம்மருத்துவமனை மாறியுள்ளது.

நாம் நற்செய்தியில் வாசித்த ஞானிகள் விண்மீனை தொடர்ந்து ஆண்டவர் இயேசுவை கண்டுகொண்டார்கள். இந்த மருத்துவர் காந்திமதிநாதன் என்பவர் எதனை பின் தொடர்ந்து இத்தகைய நல்ல செயலில் ஈடுபட்டார் என்று நேர்காணல் செய்யும் பொழுது நான் இருக்கும் இடம் மிகவும் சுத்தமாகவும் பலர் வந்து செல்லக்கூடிய வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்ற என்னுடையநல்லெணணத்தின் வெளிப்பாடே இதற்கு காரணம். நான் என்னிடத்தில் உள்ள நல்லெண்ணத்தை கண்டுக் கொண்டு அதன் வழி நடக்கிறேன் என்றார். அதன் விளைவே பலருக்கு நன்மை தரும் நல்ல ஒரு சூழல் கொண்ட மருத்துவமனை உருவாக வழி வகுத்தார்.

விவிலியத்தில் தொடக்கநூல் 1 ஆம் அதிகாரம் 26 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் மனிதரைத் தம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்கினார்” என்று.  நாம் ஒவ்வொருவரும் கடவுளின் சாயல்.  கடவுளின் கைவண்மையால் உருவானவர்கள். திருவிவிலித்தில் தொடக்கநூல் 1 ஆம்; அதிகாரத்தில் 31 ஆம் வசனம் கூறுகிறது “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் நன்றாய் இருந்தன” என்று.

அன்புக்குரியவர்களே! ஆண்டவர் இயேசுவை கண்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணமே பல மைல் தூரத்தில் இருந்து ஞானிகளை புறப்பட்டு வரச் செய்தது. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உங்களை நல்லது செய்ய வைக்க முடியும். மனிதரான டாக்டர் காந்திமதி நாதனிடத்தில் காணப்பட்ட நல்லெண்ணம் போல் நம் அனைவரிடத்திலும் பலவிதமான நற்பண்புகள் உள்ளன. இப்புதிய ஆண்டில் நம்மிடம் உள்ள நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொள்வோம். ஞானிகள் விண்மீனை பின்தொடர்ந்து பாலன் இயேசுவை கண்டுக்கொண்டதுப் போல நாமும் நம் ஒவ்வொருவரிடத்திலும் புதைந்து கிடக்கும் நல்லெண்ணங்களையும், நற்பண்புகளையும் கண்டுக் கொண்டு இவ்வருடம் முழுவதும் அதனை பின்தொடர்ந்து செல்வொம். வாழ்வில் மற்றவர் வளம் பெற உங்கள் வாழ்வு அவர்களுக்கு உகந்த வாழ்வாக அமையட்டும்.

இதுவே இன்றைய நாளில் மூன்று ஞானிகள் அல்லது திருக்காட்சி பெருவிழா நமக்குத் தரும் மையச் செய்தியாக அமையும்.

ஒன்றை பின்தொடர்ந்து செல்வது என்பது மிகவும் எளிதான காரியமல்ல...  வாழ்வில் நற்செயலை செய்யத் துவங்கும் போதுதான் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் நாம் சந்திக்க நேரிடும்... அப்படி உங்கள் வாழ்வில் நீங்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூறுகளையும் சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள்.  மனவுறுதி கொண்டவர்களாய் விவிலியத்தின் பேதுரு எழுதிய முதல் கடிதம் 5 ஆம் அதிகாரம் 6 முதல் 10 வரை உள்ள வசனங்களை உங்கள் மனதில் இருத்துங்கள்... 
“கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்போது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்”.

நற்செயல்களை செய்யும் போது நமக்குள் கர்வம் எலலாம், பேராசைகள் எலலாம், புகழை மனம் தேடலாம். ஆனால் கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள் அவர் உங்களை ஏற்ற காலத்தில் உயர்த்துவார்.

“உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

இவ்வருடம் முழுவதும் நான் செய்ய வேண்டும் என்று எண்ணிய நற்செயல்களை எல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கவலைகள், கஷ்டங்கள் வந்து என்னை குழப்புகின்றன என எண்ணும்போது நினைவில் நிறுத்துங்கள். “உங்கள் கவலைகளை அவரிடம் விட்டுவிடுங்கள் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.

“அறிவுத்தெளிவோடு விழிப்பாய் இருங்கள் உங்கள் எதிரியாகி அழகை யாரை விழுங்கலாம் என கர்ஜிக்கும் சிங்கம் போல உங்களை தேடித்தருகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்”.
நற்செயல்கள் செய்யும் போது பலர் உங்களை கண்டு எள்ளி நகை ஆடலாம், இவர் பெரிய ஆளு, பேருக்காக பண்றான் டா... என்றுச் சொல்லக்கூடியவர்கள் உங்களிடையே உதயம் ஆகலாம். அதையெல்லாம் கண்டு மனம் உடைந்து விடாதீர்கள். அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் உங்கள் இலக்கு எதுவோ அதை நோக்கி முன் செல்லுங்கள். நீங்கள் பின்தொடர தீர்மாணிக்கும் நற்செயலை மனதில் உறுதியோடு ஏற்று அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள். 

“உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகளும் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?”

இவ்வுலகில் நீங்கள் மட்டுமல்ல... ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய முன்வரும்போது இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவருமே பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் சந்திக்கிறார்கள். அவர்களில் நீங்கள் மட்டும் தனித்துவமானவர்கள் அல்ல. அவர்களுள் ஒருவர் தான் நீங்களும். மற்றவர்கள் பலவிதமான இன்னல்களையும், இடையூருகளையும் எதிர்கொண்டு எப்படி முன்வருகிறார்களோ அதுப்போல உங்களாலும் முடியும் என நம்புங்கள். முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கூறுவார் “நீங்கள் முடியாது என சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்” என்று. என்னால எல்லாம் இந்த நல்ல செயலை இறுதிவரை செய்ய முடியாது என்று எண்ணக்கூடியவராக நீங்கள் இருந்தால் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்  நீங்கள் முடியாது என எண்ணுவதை எங்கே யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்.. (உதாரணமாக கலெக்டர் திரு. சகாயம் ஐயுளு) எனவே உங்களால் முடியும் என நம்புங்கள்..


“எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார் சிறுதுகால துன்பங்களுக்கு பிறகு உங்களை சீர்படுத்தி, உறுதிபடுத்தி, நிலை நிறுத்துவார்”.

துன்பங்களுக்கு மத்தியில் தான் இன்பத்தை உணர முடியும். துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகாது.... இன்பமும் துன்பமும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. நற்செயலை செய்யும் பொழுது சில துன்பங்களின் மத்தியில் கடவுள் உங்களை உறுதிபடுத்தி, வலுபடுத்தி உங்கள் நற்செயல்களை பின்தொடர்ந்து நீங்கள் வாழ்வில் பலருக்கு வழிகாட்டக்கூடிய மனிதர்களாக உருவாக இறைவன் உங்களுக்கு உதவுவார். நட்சத்திரம் ஞானிகளுக்கு வழி காட்டியது போல நீங்களும் மற்ற மனிதர்களுக்கு வழிகாட்டுங்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் உடன் உள்ள நண்பர்களுக்கும் என ஒருவருக்கொருவர் நல்வழி காட்டுங்கள். பிறந்திருக்கும் இவ்வாண்டு முழுவதும் நற்செயல்கள் நம் வாழ்வில் நிறைந்திருக்க உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இறைவனின் அருளையும் நாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.


சகோ. சகாய ராஜ்



இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...