புதன், 10 நவம்பர், 2021

கிறிஸ்துவின் மனநிலையில் ...(11.11.2021)

கிறிஸ்துவின் மனநிலையில் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்று நம் அன்னையாம் திருஅவை புனித மார்ட்டின் அவர்களை நினைவு கூறுகிறது.

பட்டங்களையும் பதவிகளையும் தேடி திரிகின்ற மனிதர்களுக்கு மத்தியில் எளிமையை தேடித் திரிந்தவர் தான் இன்று நாம் நினைவு கூறுகின்ற புனித மார்ட்டின் அவர்கள்.

இவரை ஆயராக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்பட்டார்கள் ஆனால் இவர் அதனை வேண்டாம் என மறுத்து வந்தார். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு நபருக்கு நோயில் பூசுதல் அருள்சாதனம் வழங்கவேண்டுமென இவரிடத்தில் வேண்டியபோது உடனே ஒப்புக்கொண்டு விரைந்து பயணித்தார். சென்று சேர்ந்த இடம் ஒரு ஆலயமாக இருந்தது. அங்கு அனைத்து சக குருக்களும் கூடியிருந்தார்கள். அனைவரும் இணைந்து இவரை ஆயராக அங்கு திருப்பொழிவு செய்தார்கள். பதவியையும், பட்டத்தையும் விரும்பாத நபராக இருந்த இவர் தன் மீது தனக்கு கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்புக்களை எல்லாம் இறைவனின் விருப்பம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார். திறம்பட செயல்பட்டார் என்பதை வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

இன்று நாம் நினைவு கூறுகின்ற புனித மார்ட்டினை போல அனைத்து செயல்பாடுகளிலும் நாம் கிறிஸ்துவின் மனநிலையை அறிந்தவர்களாக இந்தச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இன்றைய நாள் வாசகங்கள் இதைத் தான் வலியுறுத்துகின்றன.

ஏழைகளை தேடிச் செல்வதும்... சிறைப்பட்டோரை தேடிச் செல்வதும்... எளியவருக்கு உதவி செய்வதும்..... நீதியை நிலைநாட்டுவது.... நம் ஒவ்வொருவரின் கடமையாகவுள்ளது. நாம் இருக்கின்ற இடத்தில் நம்மால் செய்யக்கூடிய அனைத்து விதமான நற்செயல்களையும் செய்திட அழைக்கப்படுகின்றோம். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எந்நிலையில் இருந்தாலும் நாம் கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையை கொண்டு இந்த சமூகத்தில் இறையாட்சி மலர்வதற்கான விதைகளை விதைத்து கொண்டே செல்ல அழைக்கப்படுகின்றோம்.

இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யும் வகையில் நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்கள் கூட இறைவனுக்கு செய்ததாக கருதப்படுகின்றது. செயல்களுக்கான கைமாறு இறைவன் கண்டிப்பாக நமக்குத் தருவார். ஆனால் கைமாறு எதிர்பார்த்து அல்ல, இறையாட்சியின் மதிப்பீடுகளை மண்ணில் மலரச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்தவர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் பேணும் நல்ல செயல்களில் ஈடுபடவும், அச் செயல்கள் மூலமாக இற வார்த்தைக்கு உயிரோட்டம் தரவும், இறையாட்சியை மண்ணில் மலரச் செய்யவும், இறைவனது அருளை வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...