செவ்வாய், 9 நவம்பர், 2021

நன்றியுள்ளவர்களாகிட....(10.11.2021)

நன்றியுள்ளவர்களாகிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம், கடவுளின் பணியாளர்களான நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 10 தொழு நோயாளர்கள் இயேசுவிடம் வந்தார்கள்.  நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அனைவரும் இணைந்து இருந்தார்கள்.  ஆனால் அவர்கள் நலம் பெற்ற போது ஆளாளுக்கொரு திசையில் என பிரிந்து சென்றார்கள்.  ஒருவன் மட்டுமே ஆண்டவரை நோக்கி வந்தான். 


நமது வாழ்வில் துன்பங்கள் வருகின்ற போது நாம் அனைவரும் இறைவனை நோக்கி வேண்டுகிறோம். துன்பங்களின் மறைக்கின்ற போது அந்த இறைவனை கண்டு கொள்ளாமல் செல்கிறோம். 

 ஒரு பிரச்சினையின் போது ஒன்று சேருகின்றன நாம், நல்லது செய்வதற்காக ஒன்று சேரத் தயங்குகிறோம். ஆனால், இன்றைய
முதல் வாசகம், நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. நம் எண்ணங்களையும், 
நமது திட்டங்களையும் ஆய்ந்து அறிந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  நாம் அவருடைய பார்வையில் நேர்மையானவர்களாகவும், அவருடைய திருச்சட்டத்தை  கடைப்பிடிப்பவர்களாகவும் திகழ வேண்டும். அதில் நாம் நடக்கின்ற போது, அவர் நம்மை பாதுகாப்பார், பராமரிப்பார்.  இந்த ஆண்டவரிடமிருந்து,  ஞானத்தை பெற்றுக் கொண்டு, தூய்மையான வாழ்க்கை வாழ இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...