சனி, 27 நவம்பர், 2021

விழிப்போடு எதிர்நோக்கிட.... (28.11.2021)

விழிப்போடு  எதிர்நோக்கிட.... (28.11.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று  நாம் தாய் திருஅவையாக இணைந்து திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இந்த நல்ல நாளில் விழிப்போடு இருந்து ஆண்டவரை எதிர்நோக்க கூடியவர்களாக வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
பாடலிபுத்திரம் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அக்கிராமத்தில் ஒரு அரண்மனை அந்த அரண்மனையில் ஒரு அழகிய பெண்மணி இருந்தால். இந்தப் பெண்மணியின் பார்வை தன் மீது படாதா என்ற எண்ணத்தோடு பல இளைஞர்கள் அரண்மனையின் வாயிற்  கதவருகே காத்து கிடப்பார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையோ முற்றும் துறந்த ஒரு முனிவரின் மீது பட்டது. அரண்மனையில் இருந்து இறங்கி வந்த அந்தப் பெண்மணி முனிவரை பார்த்து வாருங்கள் என்னோடு அமர்ந்து உணவு அருந்துங்கள் என அழைத்தாள். அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து வர வேண்டிய நேரத்தில் வருகிறேன் என கூறிவிட்டுச் சென்றார்.  காலங்கள் சில கடந்தன மீண்டும் அதே அரண்மனை வாயிலை நோக்கி முனிவர் வந்தார். ஆனால் ஒரே ஆச்சரியம் எப்போதும் நிறைந்து காணப்படுகின்ற கூட்டம் அன்று அங்கு இல்லை. அரண்மனையின்  வாயிற்கதவை அடைந்தார். முக்கலும் முனகலுமாக ஒரு ஓசை. ஓசை கேட்டு அத்திசை நோக்கி நடந்தார். உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு அந்த அழகிய பெண்மணி வீதியில் படுத்திருந்தாள். அப்பெண்மணியை தன் கரங்களால் தூக்கி அவளது காயங்களுக்கு மருந்திட்டு கொண்டே அப்பெண்மணியை நோக்கிச் சொன்னார். வரவேண்டிய நேரத்தில் வருகிறேன் என்றேன் அல்லவா இதோ வந்துவிட்டேன் என்றார். 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் முழுவதும் நாம் வாசித்த வாசகங்களும் இன்றைய நாளின் நற்செய்தி வாசகமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து நமக்கு சிந்திக்க அழைப்பு தருகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி நாம் நமது சொல்லிலும் செயலிலும் ஆண்டவருக்கு உகந்த மக்களாக வாழ அழைக்கப்படுகின்றம். அவரது வருகை எப்போது வரும் என அறியாத வண்ணம் உள்ளது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வந்தே தீரும் ஆண்டவரின் வருகைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள இன்றைய நாள் அழைப்பு தருகிறது.

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. இம் மண்ணில் அவதரித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளை நினைவு கூறுவதற்கும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது கற்பித்த அவைகளை எல்லாம் நமது வாழ்வை மாற்றிக் கொள்வதற்கும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைப்பு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது அகிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. எனவேதான் நாம் காலத்தை கிறிஸ்து பிறப்புக்கு முன் கிறிஸ்து பிறப்புக்குப் பின் கி.பி. கி.மு. என பிறக்கின்றோம்.

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாக்களிக்கப்பட்ட இறைவன் எனவேதான் இன்றைய முதல் வாசகம் இவரை தாவீதின் வழிமரபில் இருந்து தளிர் ஒன்று தோன்றுகிறது என இவரை பற்றி குறிக்கப்படுகிறது.. தொடக்க காலத்திலிருந்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை மக்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக பிறந்த போது அரசனுக்குரிய பண்புகளோடு அல்ல மாறாக ஏழைகளுக்கும் ஏழையாக இவ்வுலகில் பிறந்தார். 

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் வாழ்ந்த போது மனிதர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும், என்பதை எல்லாம் தன் வாழ்வில் நமக்கு வெளிக்காட்டினார். அவர் காட்டிய வழியில்  அவரை பின் தொடரக்கூடிய மனிதர்களாகிட,  மேலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அவரை எதிர் கொள்ளக் கூடிய மக்களாக அவரது திருமுன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவர் களாக மாறிட வேண்டும். 

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர் பகுதியில் வாழ்ந்த மக்களின் தவறான வாழ்வு முறைகளை சுட்டிக் காண்பித்து அவைகளிலிருந்து அவர்கள் மாற்றம் பெற்று, கடவுள் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளின் அடிப்படையில் உங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என பவுல் தெசலோனிக்கருக்க பகுதியில்  வாழ்ந்த மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

  பவுலின் வார்த்தைகளைக் கேட்டு மாற்றமடைந்த மனிதர்களாக தெசலோனிக்கர் பகுதி மக்கள் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை விழுமியங்களை வாழ்வாக்கி  கொண்டார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆவலோடு எதிர்நோக்கி கொண்டிருக்கக்கூடிய நாமும் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்த பாடங்களை வாழவாக்குவோம். இறுதி நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்கொள்ள நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ளவும்.இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...