ஞாயிறு, 24 அக்டோபர், 2021

இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...(26.10.2021)

இறையாட்சி மலர்வது நம் செயல்களால் தான் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகம் எதிர்நோக்கி மையப்படுத்துகிறது நற்செய்தி வாசகம் இறையாட்சியை மையப்படுத்துகிறது இறையாட்சி மலரும் என்ற எதிர் நோக்கோடு இந்த சமூகத்தில் நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

இறையாட்சி என்பது இறைவனது விருப்பத்தின்படி இந்த உலகத்தில் அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி நிற்கின்ற இறைவனது ஆட்சியை குறிக்கின்றது. இறைவனது ஆட்சியை இவ்வுலகத்தில் நிலைநாட்டிட இறைவன் தான் வர வேண்டும் என்பது அல்ல மனிதர்களாகிய நம்மால் இந்த இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய முடியும் என்பதைத்தான் இன்றைய நாள் வாசகங்கள் எடுத்துரைக்கின்றன நாம் செய்கின்ற சின்னஞ்சிறு நல்ல செயல்கள் கூட இறையாட்சியின் விதைகள் ஆகவே கருதப்படுகின்றன.

இதற்குச் சான்றாக நாம் குழந்தை இயேசுவின் புனித தெரசாவைக் கூறலாம்.நான்கு சுவற்றுக்குள் தான் இருந்த நிலையிலேயே தன்னுடைய சின்னச் சின்ன செயல்களால் இயேசு விதைக்க விரும்பிய இறையாட்சிக்கு அவர் சான்றானார். அவருடைய வாழ்வு இன்று உலகம் முழுதும் அறியப்பட்டு இறையாட்சியை அமைக்க விரும்புவோருக்கு  வழிகாட்டுதலாக உள்ளது.



இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நாம் நமது செயல்கள் மூலமாக இறையாட்சி மண்ணில் மலர உழைத்திட வேண்டும். மனிதர்களால் இது சாத்தியம் அல்ல என எண்ணிவிட முடியாது. இயேசு இந்த மண்ணில் மனிதனாய் வாழ்ந்த போது இறையாட்சியின் மதிப்பீடுகளை தன் வாழ்வின் தன் செயல்கள் மூலமாக வெளிக்காட்டி நமக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார். 
தொடக்க நூல் 1:28 கூறுகிறது. "கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் " என்று. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் இந்த இயேசுவைப் பின்பற்றி நாமும் அவரைப் போல இந்த சமூகத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளை மலர செய்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

சிறிய கடுகு விதை பெரிய மரமாகி பலருக்கு பயனுள்ளதாக இருப்பதுபபோல, சிறிதளவு புளிப்பு மாவு பல மாவுகளை புளிப்பேற்றுவது போல நாம் செய்கின்ற சின்னஞ்சிறு செயல்கள் எல்லாம் இறையாட்சி இம்மண்ணில் மலரச் செய்யும் என்ற எதிர் நோக்கோடுதொடர்ந்திட வேண்டும்.

"ஒரு செயல் இருபதாயிரம் விற்று பேச்சுக்களை விட சிறந்தது" என்கிறார் விவேகானந்தர்.

இறையாட்சியின் மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாம் செய்கின்ற சிறு செயல் கூட நமக்கு பின் வருபவர்களுக்கும் நம்மைப் பார்த்து இச்சமூகத்தில் வளர்ப்பவர்களுக்கு  முன் உதாரணமாக அமைந்திட வேண்டும்.

இறைவன் இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்க கூடிய வகையில் நமது செயல்களை அமைத்துக் கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணம் செய்திட இறைவன் இந்த புதிய நாளை நமக்குத் தந்திருக்கிறார். இந்த புதிய நாளில் இறையாட்சி இம்மண்ணில் மலர்வதற்கான விதைகளை நமது செயல்கள் வழியாக விதைத்திட இறைவனது அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...