சனி, 11 ஜூலை, 2020

...விதை என்றும் உறங்காது ..." ஜீலை - 12

...விதை என்றும் உறங்காது ..."

(பொதுக்காலம் 15-ம் ஞாயிறு) 

அன்புக்குரியவர்களே இன்று விதைப்பவர் உவமை பற்றிய நற்செய்தி வாசகம் நமக்குத் தரப்பட்டுள்ளது ...

இந்த மண்ணில் வைத்து புதைக்கக் கூடிய அனைத்து பொருள்களும் ஒருநாள் மக்கிப் போகும் ஆனால் விதை மட்டுமே என்றும் உறங்காமல்  மண்ணை முட்டி கொண்டு மேலே வந்து செடியாகி மரமாகி பின் அதன் மூலம் பூக்களையும் பழங்களையும் மற்றொரு விதையையும் கொடுத்து செல்கிறது இது நாம் அனைவரும் அறிந்ததே ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்ணிருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை என்ற வார்த்தைகள் நமது வாழ்வை திரும்பிப்பார்க்க அழைக்கின்றது ...

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பலவிதமான அநீதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன அவற்றையெல்லாம் நாம் கண்டும் காணாதவர்களா இருந்து கொண்டிருக்கிறோம் . அதுபோலவே பலவிதமான மக்களுடைய துயரக் குரல்கள் நம் செவியை நோக்கி வந்துகொண்டு தான் இருக்கின்றன ஆனால் அவற்றை எல்லாம் காதுகள் இருந்தும் நாம் கேட்காமல் இருந்து கொண்டிருக்கிறோம் ...

இந்நிலையிலிருந்து நாம் மாற்றம் பெற இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.

மண்ணுக்குள் புதைக்கப்படக்கூடிய விதை முட்டிக்கொண்டு வெளியே   வருவது போல சமூகத்தில் நிலவக்கூடிய அநீதிகளை கண்டு நாம் அவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் ..நம் காதுகளை நோக்கி வரக்கூடிய  துயரத்தில் வாடுபவர்களின் குரல்களுக்கு  நாம் செவி கொடுத்து அவர்களின் துயர் துடைக்க நம்மாலான இன்ற   உதவிகளை செய்ய வேண்டும்...

இது மிகவும் எளிதானது அல்ல அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் போது பலவிதமான இன்னல்களை நாம் சந்திக்க நேரலாம் அடுத்தவரின் துயரை துடைக்க எண்ணும் போது கண்டிப்பாக பலவிதமான சிக்கல்களை நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளக் கூடும் இருந்த போதும் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட விதையைப் போல மீண்டும் மண்ணைப் பிளந்து கொண்டு வெளிவந்து அடுத்தவரின் நலனுக்காக வாழ்வது போல நாமும் நம்முடைய செயல்பாடுகளும் அமைந்திட வேண்டும்.  அப்போதுதான் நாம் கண்ணிருந்தும் காண்பவர்களாகவும் காதுகள் இருந்தும் கேட்பவர்களாகவும் அடுத்தவருக்காக வாழ்ந்த ஆண்டவர் இயேசுவைப் போல நமது வாழ்வை அமைத்திட முடியும் ...

இயேசுவின் வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாய்  தொடர்ந்து பயணம் செய்ய உங்களை அன்போடு அழைக்கின்றேன் ...

"...விதை என்றும் உறங்காது ..."

1 கருத்து:

  1. நமக்குள் இருக்கும் இறை உணர்வு மனித உணர்வு என்னும் விதையை அன்பு என்னும் நீர் ஊற்றி முளைக்கச் செய்வோம் அனுதினமும். கருத்துகள் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...