ஞாயிறு, 19 ஜூலை, 2020

"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."




"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."


இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..

இயேசுவிடம் சிலர் "போதகரே நீர்  அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்..."என்று கேட்பதை இன்று இச்சூழலில் நாம் இவ்வாறாக சிந்தித்துப் பார்க்கலாம் ...


இன்று அடையாளம் அனைவரும் தேடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சிலர் மற்றவர்களின் முன்பாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பல விதமான செயல்களை முன்னெடுக்கின்றனர். இன்னும் சிலர் யாராவது எதையாவது கூறினால் அவர்கள் கூறுவது உண்மையா? என அடையாளம் கேட்கின்றனர் ...  இவ்வாறு கேட்பதில் தவறு இல்லை மாறாக எதிர்மறை எண்ணத்தோடு அடையாளங்கள் கேட்பது ஏற்க இயலாத ஒன்றாகும். இதனையே இன்றைய நற்செய்தி வாசகங்களில் நாம் காண்கின்றோம் ...   

இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணக் கூடிய கூட்டம் அவருடைய சொல்லையும் ,  செயலையும் மதித்து அவரை ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்னும் சிலரோ இவர்தான் மெசியாவாக இருப்பாரோ? என்ற எண்ணத்தோடு அவர் அடையாளங்கள் தந்தால் அதை கண்டு அவரை ஏற்றுக் கொள்ளலாம் என எண்ணினர்.  எனவே இயேசுவிடம் அடையாளம் ஒன்றை கேட்டனர்.

அடையாளம் கேட்பவர்களின் நோக்கத்தை உணர்ந்த இயேசு அவர்களுக்கு அடையாளங்கள் எதுவும் தராமல்  அவர்களின் இறுதிகாலம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எச்சரிக்கிறார் ...


இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அடையாளங்களை விரும்பியவராக இருக்கவில்லை. மாறாக அடையாளமாகவே  இருந்தார்.
 இயேசுவின் சொல்லும், செயலும் தான் மிகப்பெரிய அடையாளம். அதை கண்டு தான் அவர் மீது பற்று கொண்டு அவரைப் பின் தொடர்ந்தது ஒரு கூட்டம் .... அவரைப் பின் தொடர்ந்த கூட்டம் என்றுமே அடையாளங்களை எதிர்பார்த்த கூட்டமல்ல, மாறாக  அடையாளங்களாக மாற விரும்பிய கூட்டம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் அடையாளங்களைத் தேடி அடையாளங்களை நாடி ஓடி திரிவதை விட.... நாம் பிறருக்கு அடையாளங்களாக மாறக் கூடியவர்களாக உருமாற ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 
இயேசு அடையாளங்களை தந்தவர் மட்டுமல்ல அடையாளமாக இருந்தவர் அவரை பின்தொடர கூடிய நாம் அடையாளமாக மாற வேண்டும். அடையாளங்களை எதிர்பார்த்து ஓடுவதை விட ...  சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்த இயேசுவைப் போல நாமும் அடையாளங்களாக மாறிட இயேசுவின் அடிச்சுவட்டை பின் தொடர்வோம் ....

"சமூகத்தில் அடையாளமாகத் திகழ்ந்திட...."




1 கருத்து:

  1. இச்சமூகத்தில் நாமும் இயேசுவைப் போல அடையாளங்களாக திகழ அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி இறை அனுபவம் பெற்று பிறரன்பு செயல்களில் நம்மை அடையாளப் படுத்திட, அனுதினமும் நம்மையும் தயார்படுத்துவோம்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...