புதன், 15 ஜூலை, 2020

"நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்" ஜூலை - 15



 "நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்"

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிக்கும் போது மனதுக்குள் மனநிறைவானது உருவானது. இன்றைய வாசகத்தில் "என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்" என்ற வார்த்தைகளை  மையமாகக்கொண்டு என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் படைத்த இந்த அழகிய உலகில் அனைத்து விதமான உரிமைகளையும், சுதந்திரத்தையும் நமக்கு தந்திருக்கிறார் .
இயேசு இந்த சமூகத்தில் வாழ்ந்தபோது தேவையில் இருப்பவருக்கு தன்னாலான உதவிகளை செய்தார், சமூகத்தில் நிலவிய அவலங்களை எதிர்த்து குரல் எழுப்பினார், சமூகத்தில் உயர்ந்தவர்கள், கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என எண்ணியவர்களின் தவறுகளையும் சுட்டிக் காட்டினார். இயேசுவைப் போலவே  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ உரிமையும் சுதந்திரமும் உள்ளது. ஆனால் இன்று இயேசுவை பின்பற்றி வருவேன் எனக் கூறக்கூடிய நம்மில் பலர் இயேசுவைப்போல வாழவில்லை.  காரணம் அவரைப்போல மரணத்தையும் இன்முகத்தோடு ஏற்க நம்மிடம் துணிவு சற்று குறைவாகவே உள்ளது .

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கும் பொருந்தக்கூடியவை கடவுள் நம்மிடமும் எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார் . ஆனால் இயேசுவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம்? நேர்மறையான நல்ல செயல்களையா? அல்லது எதிர்மறையான செயல்களையா? என சந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம் ...

இயேசுவைப் போல அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வாழ நம்மால் இயலும். ஆனாலும் அவரைப்போல் வாழவேண்டுமென மறையுரை நிகழ்த்துவதும், அவரைப்போல் வாழவேண்டும்  என்று கூறுவதும் எளிதாக உள்ளது ஆனால் வாழ்வது மிகவும் சவாலாக இருக்கிறது ...

சவாலை எதிர்கொள்ள... இயேசுவைப் போல வாழ... சிறுவயது முதலே நம் குழந்தைகளை நாம் பழக்குவதும், உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் ...  
தவறு என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை  நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.... தவறு என்றால் அதை  சுட்டிக் காட்டக்கூடிய நல்ல பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நாம் இன்றைய நாளில் உறுதி ஏற்போம் ...

ஏனெனில்  நம் தந்தையாம் இறைவன்   இந்த உலகில் உள்ள   அனைத்தையும்   நம்மிடம்  ஒப்படைத்திருக்கிறார் ஒப்படைத்தவற்றை  நாம் சரியாக பயன்படுத்தாவிட்டாலும்,  நம் குழந்தைகள் நேர்வழியில் சரியாக அவற்றை பயன்படுத்த நாம் வழிகாட்டக் கூடியவர்களாக இருப்போம் ...  
புதிதாக உருவாகி வரக்கூடிய இந்த இளம் தலைமுறையினர் இயேசுவாக உருவாகவும், இயேசுவாக செயல்படவும் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டியது நம் கடமையாகும் ...

கள்ளம் கபடமற்ற குழந்தைகளுக்கு நம் வழியாக நல்லவற்றை இயேசு வெளிப்படுத்த விரும்புகிறார். அவற்றை  வெளிப்படுத்த கூடியவர்களாக உரு மாறுவோம் ...ஏனெனில் "நம் தந்தை எல்லாவற்றையும் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...