வெள்ளி, 10 ஜூலை, 2020

ஏழைகளும் நமக்குத் தெரிந்தவர்களே (ஜூலை 11 )


"ஏழைகளும் நமக்குத் தெரிந்தவர்களே..."
அனைவருக்கும் இயேசுவின் பெயரால் இனிய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 

"மக்களின் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவர்கரை விண்ணுலகில்  இருக்கும் என் தந்தையின் முன்னிலையில்  நானும் ஏற்றுக்கொள்வேன்..."


இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம்  யாரை ஏற்றுக்கொள்கிறோம் என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...

நமது வாழ்க்கையில் நாம் பெரும்பாலும் புகழ்மிக்க உயர்ந்த மனிதர்களை நமக்கு தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்புகிறோம் . ஆனால் நமக்குத் தெரிந்த ஏழைகளையும்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களையும் நமக்குத் தெரிந்தவர்களாக பலரின் முன்னிலையில் காண்பித்துக் கொள்ள தயங்குகிறோம் . 


அமைதியாக அமர்ந்து நமது வாழ்வில் இத்தகைய செயலில் நாம் ஈடுபட்டிருக்கின்றோமா? நம்மை யாரேனும் இப்படி செய்திருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது பல உண்மைகளை நாம் நமது வாழ்விலிருந்து உணர்ந்து கொள்ளலாம். ஒருவேளை இத்தகைய சூழலை நாம் வாழ்வில் எதிர்கொண்டு இருப்போமாயின் அப்போது நம் மனம் அடைந்த வேதனையை தான் நாம்  நமது செயலால் ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இது இறைவனுக்கு உகந்தது அல்ல என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன .

அன்போடு அனைவரையும் அரவணைக்க கூடியவர்களாக நாம் இந்த சமூகத்தில் உருவாகிட வேண்டும். மதிப்பு மிக்கவர்களை  நமக்கு  தெரிந்தவர்களாக காட்டிக் கொண்டு அவர்களோடு நின்று புகைப்படம் எடுக்கக் கூடிய நாம், ஏழைகளையும் அனாதைகளையும்,  சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும்  நமக்கு தெரிந்தவர்கள் என்பதை  அடுத்தவர் இடத்தில் காண்பிப்பதால் நமது மதிப்பு குறைந்துவிடும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு அவர்களோடு இணைந்து அவர்களோடு வாழ இன்றைய நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
இதுவே இறைவன் விரும்புவதாகும். இச்செயலில் ஈடுபடும்போது இறைவனும் விண்ணுலகில் இருக்கிற நமது தந்தைக்கு முன்னால் நம்மையும் தெரிந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வார் என்ற சிந்தனையோடு இன்றைய நாளில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முயலுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...