திங்கள், 2 டிசம்பர், 2019

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)
அன்புக்குரியவர்களே 
எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு”. இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறிய வார்த்தை
இன்று நாம் அனைவரும் இணைந்து புனித சவேரியாரின் திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றியவர் இவர். “ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்ற இன்னாசியாரின் வார்த்தைகளால் கவரப்பட்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவராய் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நற்செய்தி பணியாற்றி பல உள்ளங்களை ஆண்டவர் இயேசுவை விதைத்தவர். 
    இன்றைய நற்செய்தி வாசகங்கத்தில் ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிப்பதற்கு சீடர்களை அனுப்பிய நிகழ்வை நாம் வாசிக்க இருக்கிறோம். இன்று நாம் வாழும் உலகில் நம்மில் பலர் பலவற்றை பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பேசுவதை யாராவது கவனிக்கிறார்களா? அல்லது நாம் தான் பிறர் பேசும் போது கவனிக்கின்றோமா? கவனித்ததையும், பேசியதையும் நம் வாழ்வில் நாம் செயல்படுத்துகிறோமா? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி. இன்னாசியாரின் வார்த்தைகளை புனித சவேரியார் கேட்டார் அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். நாமும் அனுதினமும் திருப்பலியில் பங்கெடுக்கிறோம், இறைவார்த்தையைக் கேட்கிறோம், பல நல்ல மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களின் வாய் மொழி வார்த்தைகளை கேட்கிறோம், நாம் கேட்டவற்றையும், பார்த்த நல்லவைகளையும் நமது வாழ்வு செயல்படுத்தி இருக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
 இன்றைய நாளில் உறுதி ஏற்போம் நமது வாழ்வில் நாம் கேட்கக் கூடிய நல்ல செயல்களை நமது வாழ்வில் செயல்வடிவமாக்கிடுவோம் என்று அதற்கான அருள்வேண்டி இறைவனை நாடி செல்வோம். இறைவனை மட்டும் நாடிச் செல்வதால் செயல்வடிவம் பெற முடியாது. நமது முயற்சியும், உறுதியான நிலைப்பாடுமே அதற்கு வழிவகுக்கும் எனவே ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு கேட்ட நல்லவற்றை செயலாக்க முயலுவோம்.

1 கருத்து:

  1. Today it is really a great challenge for many to listen to others and the greatest challenge is to see the goodness in others point of view! Well done Sahayam! Thanks for your suggestion to find and follow the goodness in others!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...