அன்புக்கு உரியவர்களே
இன்றைய நாளில் நாம் எதன் மீது நமது அடித்தளத்தை கட்டி இருக்கிறோம் என்பது பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம், பல விதமான நற்செயல்களை நாம் கேட்கின்றோம். நாம் கேட்பதையும், பார்க்கக் கூடிய பல நல்ல செயல்களையும் நமது வாழ்வில் செயல்படுத்துகின்றோமா? என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.
செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை என்று கூறுவார்கள். அது போலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் பல நேரங்களில் கேட்கின்றோம். கேட்ட வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரே ஆண்டவரே என அழைப்பதால் நாம்
ஆண்டவருக்கு ஏற்ற மக்களாக மாற இயலாது. அவரின் வார்த்தைகளை எப்போது வாழ்வாக மாற்ற முயல்கிறோமோ அப்போது தான் நாம் பாறையின் மீது அடித்தளமிட்டவர்களாக உறுதியாக நிலைத்து நிற்க முடியும். எனவே இன்றைய திருப்பலியில் நாம் அனைவரும் இணைந்து நமது அடித்தளமானது எதன்மீது இடப்பட்டிருக்கிறது என்பது குறித்து சிந்திப்போம். பாறையின் மீது அடித்தளமிடப்பட்டவர்களாக உறுதியாக நிலைத்து இருந்து நற்செயல் புரிவதில் இயேசுவை வெளிகாட்ட உள்ளத்தில் உறுதி ஏற்றவர்கள் இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக