சாட்சிய வாழ்வை நம் வாழ்வாக மாற்றிட...
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
இன்று தாய் திரு அவையோடு இணைந்து நினைவு கூறுகின்ற புனித யோவான் கிறிசோஸ்தோம் அவர்களின் வாழ்வும், இன்றைய வாசகங்களும் ஒரு உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றன...
கிறிஸ்துவை அறிந்தவர், அவர் வார்த்தைகளை மட்டும் கேட்பதல்ல; அவற்றை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
1. கிறிஸ்து வந்த நோக்கம் பற்றிய பவுலின் பார்வை...
திருத்தூதர் பவுல் தெளிவாகச் சொல்லுகிறார்:
“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.”
அந்தப் பாவிகளுள் தானும் முதன்மையானவர் என்று பவுல் தன்னைத் தாழ்த்திக் கூறுகிறார்.
இங்கே அவர் தன் பலத்தைப் புகழவில்லை; கடவுளின் கருணையையே வெளிப்படுத்துகிறார்.
இப்பகுதி என்று நமக்குத் தரும அழைப்பு ... நம்முடைய பலவீனங்களை ஒப்புக்கொண்டு, கடவுளின் கருணையோடு புதிய மனிதர்களாய் நாம் பிறப்பெடுக்க வேண்டும்...
இப்போதைய பிறப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று அதையே என்ற எனர் செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது ...
2. வார்த்தை மட்டும் போதாது
இயேசு நம்மை சவாலுடன் கேட்கிறார்:
“நான் சொல்வதைக் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?” (லூக் 6:46)
ஆண்டவரின் வார்த்தையை கேட்பதோடு நிறுத்தாமல், அதன்படி வாழ வேண்டும்.
நல்ல கனிகள் தரும் நல்ல மரம் போல,
நம் வாழ்க்கையும் நற்செயல்கள் மூலம் நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
புனித யோவான் கிறிசோஸ்தோம் – நம் முன்மாதிரி
இன்று நாம் தான் திரு அவையோடு இணைந்து நினைவு கூறுகின்ற புனித யோவான் கிறிசோஸ்தோம்
- சிறந்த மறைபோதகர், “தங்கவாய்” (Golden Mouth) போதகர் என்று இவரை அழைப்பதுண்டு.
- கல்வியிலும் தவ வாழ்விலும் சிறந்தவர்.
- ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து, ஏழைகளுக்குச் சேவை செய்தவர்.
- அநீதிக்கு முன்பாக அஞ்சாமல் உண்மையைப் பேசியவர்.
அதற்காகவே அரசர்களால் துன்புறுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.
ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கி கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகர்ந்தவர் .
இன்றைய இறைவாத்தை நமக்குத் தரும் அழைப்பு...
- கிறிஸ்துவின் வார்த்தையை கேட்டு மட்டும் நகர்ந்து விடாமல் அதை செயலில் நிறைவேற்ற வேண்டும்.
- வாழ்வில் சவால்களும் துன்பங்களும் வந்தாலும், உண்மையை விட்டுவிடாமல் பின்பற்றி வாழ வேண்டும்.
- ஏழை, தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நிற்கும் தைரியம் நம் வாழ்வில் மேலோங்க வேண்டும்.
எனவே அன்பிற்குரியவர்களே,
பவுலைப் போல தாழ்மையுடன் கடவுளின் துணையை நம்பி,
இயேசுவின் வார்த்தையைச் வாழ்வாக்கி,
புனித யோவான் கிறிசோஸ்தோம் போல சாட்சிய வாழ்வை நம் வாழ்வாக மாற்ற முயல்வோம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக