அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ....
இன்றைய இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நான்கு நிலைகளில் இறைவாத்தையோடு உரசி பார்க்க உங்களை அழைக்கின்றேன் ...
1. விளக்கு ஒளிக்காக....
விளக்கு ஏற்றப்படும் போது அதை மறைப்பதில்லை; விளக்கு தண்டின் மீது வைத்து அனைவருக்கும் ஒளி தரச் செய்கிறோம்....
அதுபோல நம் கிறிஸ்தவ வாழ்வும் மறைந்து போகக்கூடிய வாழ்வு அல்ல; அது பிறருக்குப் பயன் தரும் ஒளி மிகுந்த வாழ்வாக இருக்க வேண்டும்.
2. இயேசுவை அறிந்துள்ள நம் அனைவரது பணி...
நம் வாழ்க்கை வெறும் தனிப்பட்ட நலனுக்காக மட்டும் அல்ல; சுற்றியுள்ளவர்களுக்கு வழிகாட்டும் வாழ்வாக இருக்க வேண்டும்.
இயேசுவின் போதனைகளான, அன்பு, நேர்மை, இரக்கம்—இவையே நம் வாழ்வின் ஒளியாக வேண்டும்.
3. இறைவார்த்தை மறைவதில்லை
நமது வாழ்வில் நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் செயலும், இறை வார்த்தையை வெளிப்படுத்தும் அன்னமாக அமைய வேண்டும்.
எனவே, எவ்வாறு இறைவார்த்தையை கேட்கிறோம், அதை எவ்வாறு வாழ்வாக்குகிறோம் என இந்த நாளில் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்...
4. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்
இறைவார்த்தையை உண்மையோடு ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்கு இறைவனின் அருள் நாள்தோறும் அதிகரிக்கும். இறையருளை அதிகரிக்கும் வகையில் நம் வாழ்வு அமைய வேண்டும் ... இறை வார்த்தையை புறக்கணித்து வாழ்கிற போது நாம் நம்மிடம் இருப்பதை இழக்கிறோம் என்பதை இதயத்தில் நிறுத்தி ...இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் ...
இந்த இறை வார்த்தையை நமக்கு இன்று தருகின்ற வாழ்வுக்கான பாடம் ....
இயேசுவின் சீடர்களாகிய நாம் உலகுக்கு ஒளியாய் இருக்க வேண்டும்.? நம் ஒளி நமது செயலில் வெளிப்பட வேண்டும் ....வெளிப்பாடு வழியாக இறைவன் விரும்புகிற மக்களாக நம் வாழ்வு மூலமாக பலரும் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்ளும் வகையில் பலருக்கு ஒளி தருகின்ற விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்காக நீங்களும் நானும் நமது வாழ்வை வைத்துக்கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக