வியாழன், 18 செப்டம்பர், 2025

பணி செய்யபாலினம் ஒரு தடை அல்ல (19.09.2025)

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,


இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுல் நமக்கு சொல்லுகிறார் – "நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு" என்று. அடுத்ததாக லூக்கா நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது – இயேசுவோடு பன்னிரு திருத்தூதர்கள் மட்டுமல்லாமல், பல பெண்களும் அவரோடு இருந்து தங்கள் உடைமைகளைக் கொண்டு சேவை செய்தார்கள் என்று... இந்த இறை வார்த்தை பகுதிகள் ...இன்று நமக்குத் தரும் செய்திகள். 

1. இயேசுவின் குழுவில் ஆண்கள் மட்டும் அல்ல....

“என் பணி பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை ஏற்று உலகிற்கு எடுத்துரைத்தார் நம் செய்திகளின் வழியாக ... இயேசுவின் வாழ்வை உற்று நோக்குகிற போது  மகதலா மரியாள், யோவன்னா, சூசன்னா – இவர்களெல்லாம் இயேசுவோடு நடந்தார்கள். இயேசுவின் பணி வாழ்வில் தங்களால் இயன்ற உதவிகளை முன்வந்து செய்தார்கள்...

2. செல்வ ஆசை vs. சேவை ஆசை

பவுல் சொல்லுகிறார் – “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்.”
 இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்கள் வாழ்வில் பொருள் ஆசையை தவிர்த்து சேவை செய்யும் ஆசையை வளர்த்துக் கொண்டு பல்வேறு சேவைகளால் இயேசுவின் பணிக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

3. நீதியும் நம்பிக்கையும் – தினசரி பயிற்சியாகட்டும்...

பவுல் இன்றைய வாசகங்கள் வழியாக “விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு.” என்று அழைப்பை விடுகிறார். 
வாழ்க்கை என்றால் எளிதல்ல. சிலர் சொல்வார்கள் – “நம்பிக்கை வைக்கிறேன், ஆனா சோதனைகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கிறது.”
அதற்கு பதில்: சோதனை இல்லாமல் இருந்தால், நாம் பலவீனமானவர்களாகவே தென்படுவோம். சோதனைகளில் தான் நாம் பலம் பெறுகிறோம் .

4. பணிவு – வெற்றியின் ரகசியம்

நாம் எவ்வளவு தெரிந்தாலும், பணிவு இல்லையெனில் அது சும்மா “Wi-Fi இல்லாத phone” மாதிரி தான். 

அழகானது,  விலை உயர்ந்தது – ஆனாலும் பயன் இல்லை.


ஆனால் இயேசுவால் தேர்ந்தெடுத்தவர்கள் – மீனவர்கள், வரி வசூலிப்பவர்கள், பெண்கள் – எல்லோரும் சாமானியர்கள். ஆனால் பணிவோடு இயேசுவைப் பின்தொடர்ந்ததால், உலகையே மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள் ...

எனவே அன்புக்கு உரியவர்களே இயேசு தன் பணி வாழ்வில் பாலினத்தை பார்க்கவில்லை ... ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், யாராக இருந்தாலும் – நீதியும், இறைப்பற்றும், நம்பிக்கையும், மன உறுதியும், பணிவையும் நாடுபவர்கள்தான் ஆண்டவரின் பணியை செய்ய முடியும். எனவே பாலினத்தை அடிப்படையாக வைத்து ஆண்டவரின் பணியை செய்வதிலிருந்து நம்மை நாமே சுருக்கிக் கொள்ளாமல் எப்போதும் இறைவனுக்கு உகந்த பணிகளையும் முன்னெடுத்து இறைவன் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...