புதன், 10 செப்டம்பர், 2025

திருச்சிலுவை உற்று நோக்குவோம் ...(14.9.2025)

“மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்” (யோவான் 3:14)

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,



இன்று தாய் திரு அவை திருச்சிலுவையை நினைவு கூற நமக்கு அழைப்பு விடுக்கிறது ... திருச்சிலுவை  கிறிஸ்தவ நம்பிக்கையின் இதயமாகும். சிலுவை வெறும் துன்பத்திற்கும் அவமானத்திற்கும் அடையாளமல்ல; அது மீட்ப்பின் சின்னமும், கடவுளின் அன்பின் சிகரமும் ஆகும்.

1. உயர்த்தப்பட்ட வெண்கலத் தூண் – உயிருக்கு வழிகாட்டியது

எண்ணிக்கை நூலில் நாம் வாசிக்கலாம்:
இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுக்கு எதிராக முறையிட்டார்கள். அப்போது கொள்ளிவாய்ப் பாம்புகள் அவர்களைத் தாக்கின. ஆனால் கடவுள், வெண்கலப் பாம்பை கம்பத்தில் உயர்த்தும்படி மோசேயிடம் கட்டளையிட்டார். அதை நோக்கியவர்கள் உயிர்பெற்றனர்.
இப்பகுதி நம்பிக்கையின் அடிப்படையில் நம் வாழ்வு அமைகிற போது உயிர் பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது... 

மோசே உற்று நோக்கச் சொன்னபோது அவர் சொன்னதை அனைவரும் நம்பினர் அந்த நம்பிக்கையோடு உற்று நோக்கினார்கள் உயிர் பிழைத்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இன்றைய இரவு வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

2. கிறிஸ்து – தாழ்மையால் உயர்ந்தவர்

இதையே  இரண்டாம் வாசகத்தில் பிலிப்பியருக்கான திருமுகத்தில் பவுல் சொல்லுகிறார்.
இயேசு, “தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார்.
இந்தத் தாழ்மையே அவரை உயர்வுக்கு இட்டுச் சென்றது.
நாம் உலகில் பெருமை, புகழ், ஆடம்பரத்தில் உயர்ந்திட நினைக்கிறோம். ஆனால் உண்மையான உயர்வு, சிலுவையை ஏற்ற இயேசுவின்.  தாழ்மையில்தான் உள்ளது என்று உண்மையை உணர்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகின்றோம்.

 சிலுவை – கடவுளின் அன்பின் அடையாளம்

இதையே என்ற எனச் செய்தி வாசகத்தில் இயேசு கூறுகிறார்...
மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்.
அந்த சிலுவை உயர்வு, தண்டனையல்ல, மாறாக மீட்பின்ன் பாதை.

  • சிலுவை, பாவத்தை குணப்படுத்துகிறது.
  • சிலுவை, நம் வாழ்வின் துன்பங்களுக்கு அர்த்தம் தருகிறது.
  • சிலுவை, கடவுளின் அன்பின் உச்ச சின்னமாகிறது:
    உலகை இவ்வளவு அன்பு கூர்ந்த கடவுள், தம் ஒரே மகனை அளித்தார்.” (யோவான் 3:16) என்ற வார்த்தைகள் அதற்கு சான்று பகர்கின்றன ...

இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் பெறுகின்ற அழைப்பு ...

அன்புக்குரியவர்களே ,

  • சிலுவையை நம்முடைய வாழ்விலும் ஏற்றுக்கொள்வோம்.
  • சோதனை, துன்பங்கள், அவமானம் என எதுவாக இருந்தாலும், சிலுவை வாழ்வின் வழியாக உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
  • சிலுவை நம்மைத் தாழ்மையிலும் சேவையிலும் வாழ அழைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் ...

எனவே திருச்சிலுவையை நினைவு கூறும் இந்நன்னாளில் திருச்சிலுவையை நாமும் பார்க்க வேண்டும் — வெண்கலப் பாம்பைப் பார்த்த இஸ்ரயேலர் போல.
ஆனால்  சிலுவையில் வெளிப்பட்ட அன்பைப் நாமும் பற்றிக்கொண்டு நம் வாழ்வை அடுத்தவருக்காக நம்மை முழுவதும் அர்ப்பணிக்கின்ற ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சிலுவையை ஏற்ற கிறிஸ்து நம்மை மீட்டார்; நாமும் சிலுவையை ஏற்றுக்கொண்டு அவருக்குச் சாட்சியமாய் வாழ்வோம்...

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...