அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்வது மிகவும் சவாலான ஒரு உண்மையைப் பற்றி:
கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று இன்பத்தில் திளைத்து, ஏழைகள் புறக்கணிக்கப்படும்போதும்...
இறைவனுக்கு உரிய நீதியும் கருணையும் நாம் இழக்கும்போதும்...
அதனால் வரும் ஆபத்து எவ்வளவு கடுமையானது என்பதை வலியுறுத்துகிறது.
“பகிர்வை மையமாக கெண்ட வாழ்க்கை வாழும் போது நாம் கடவுள் தரும் நிலை வாழ்வில் பங்கேற்க முடியும்....”
- கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார் – உணவு, உடை, வீடு இன்னும் பல.....
- ஆனால் அந்த ஆசீர்வாதங்களை நாம் மட்டும் வைத்துக் கொண்டால் அது வீண்.....
- நம்மைச் சுற்றி “இலாசர்” மாதிரி ஏழை, பசியோடு இருப்பவர்கள் ஏராலமாக உள்ளார்கள்.
- அவர்களிடம் கருணையில்லாமல் இருந்தால், கடவுளின் முன் நம்மை நியாயப்படுத்த முடியாது...
- அதனால், நாம் பெற்ற ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொண்டு, நீதியுடனும் இறைபற்றுடனும் வாழ வேண்டும்.
இன்றைய வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது ...
- ஆமோஸ் இறைவாக்கினர் நமக்குச் சொல்கிறார்: “வசதியோடு இன்பத்தில் மூழ்கியவர்கள் ஏழைகளை மறந்தால், அவர்களுக்குப் பெரிய கேடு வரும்.” என்று...
- பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார்: “செல்வம் அழியும்; ஆனால் நித்திய வாழ்வை பற்றிக்கொள்.” என்று...
- இயேசுவின் உவமை நமக்குச் சொல்லுகிறது: செல்வர் புறக்கணித்த இலாசர், கடவுளின் மடியில் ஆறுதல் பெற்றார். கருணை இல்லாத செல்வம் நித்திய வாழ்வுக்கு வழிவகுக்கவில்லை.
- இன்று நம் வாழ்வில் உள்ள சவால்:
- நம் வீட்டு வாசலில் இருக்கும் “இலாசரை” நாம் கவனிக்கிறோமா? இல்லையென்றால் நிலை வாழ்வில் நமக்கும் இடமிருக்காது....
- நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களில் எவ்வளவு பகிர்கிறோம்?
நம் வாழ்வில் இரக்கம் இல்லையெனில், நிலை வாழ்வில் நமக்கும் இடமில்லை.
எனவே சிந்திப்போம் :
👉 “நான் பெற்ற செல்வங்களில் எந்த அளவு நான் அடுத்தவருக்கு பகிர்கிறேன்...?”
👉 “என் வாழ்க்கையில் யார் யார் ‘இலாசர் என்ற இடத்தில் இருக்கிறார்கள்... ?”
எனவே இன்று முதல் ஆசீர்வாதங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....
👉 ஏழையின் குரலைக் கேளுங்கள்....
👉 கருணையுடன் வாழுங்கள்....
அவ்வாறு வாழும்போது தான், கடவுள் நம்மை நிலை வாழ்வில் ஆறுதல் பெறச்செய்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக