செவ்வாய், 2 செப்டம்பர், 2025

உண்மையான சீடத்துவம் ... (7.9.2025)

அன்பு சகோதரர் சகோதரிகளே,



1. ஆண்டவரின் திருவுளத்தை அறிதல் 


“ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?”

உண்மையில் மனித அறிவு குறுகியது, நம் திட்டங்கள் தவறக் கூடியவை. உடலும் உலக சுமையும் நம்மை கீழே தள்ளுகின்றன. விண்ணுலகின் இரகசியங்களை நாம் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் கடவுள் தம் தூய ஆவியை அனுப்பும்போது மட்டுமே, நாம் உண்மையை அறிந்து வாழமுடியும்.
இதன் மூலம் ஒரு உண்மை வெளிப்படுகிறது எனவே கடவுளின் வழிகாட்டுதல் இல்லாமல் நம் வாழ்க்கை வெற்றிகரமாக முடியாது என்பதை உணர்வோம் ...

2. கிறிஸ்துவில் அடிமை  சகோதரன் 

 பவுல், பிலமோனுக்கு எழுதுகிறார். ஒனேசிமு ஒருகாலத்தில் அடிமை. ஆனால் கிறிஸ்துவில் புதிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

“இனி அவரை அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.”

கிறிஸ்துவின் அன்பு, மனித உறவுகளை மாற்றுகிறது.
அடிமை – எஜமான் என்ற பந்தம் அன்பின் பந்தமாக மாறுகிறது.
இது கிறிஸ்தவ சமுதாயத்தின் மகத்துவம்.... நம்மிடையே உயர்வு–தாழ்வு இல்லை, எல்லோரும் சகோதரர் சகோதரிகள்.

3. சீடத்துவத்தின் விலை 

 இயேசு சொல்கிறார்:
“உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

இங்கே இயேசு மூன்று நிபந்தனைகளை முன்வைக்கிறார்:

  1. கிறிஸ்துவை முதன்மையாக நேசித்தல் – குடும்பம், செல்வம், உயிர் எல்லாவற்றையும் விட உயர்வாக கிறிஸ்துவை மையப்படுத்த வேண்டும்.
  2. சிலுவையைச் சுமத்தல் – துன்பத்தைத் தவிர்க்காமல், அதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வது நம் வாழ்க்கையின் படிப்பினையாக வேண்டும்.
  3. முழுமையான அர்ப்பணிப்பு – அர்பணிப்பு அரைமனதுடன் அல்ல; முழுமனதுடன் இருக்க வேண்டும். 

இவை எளிதல்ல. ஆனால் உண்மையான சீடரால் மட்டுமே இவை சாத்தியமாகும்...

4. இன்று நமக்கான  செய்தி

இன்று நாம் இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்விகள்..

  • நான் உண்மையில் கடவுளின் திருவுளத்தை தேடுகிறேனா?
  • என் உறவுகளை கிறிஸ்துவின் அன்பு மாற்றுகிறதா?
  • நான் எனது சிலுவையைச் சுமந்து இயேசுவின் பாதையில் செல்வதற்கு தயாரா?

சகோதரர் சகோதரிகளே,
நாம் பலவீனமானவர்கள். நம் திட்டங்கள் தோல்வியடையலாம். ஆனால் தூய ஆவியின் வழிகாட்டுதலால், கிறிஸ்துவில் சகோதரத்துவ அன்பால், சீடத்துவத்தின் முழு அர்ப்பணத்தோடு நாம் வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்வாக மாறும்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம் வாழ்வு எதில் வேரூன்றப்பட வேண்டும் ...(17.9.2025)

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, நமது அடித்தளம்... திருத்தூதர் பவுல் கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளை மிகச் சிறிய சொற்களிலே மிகப் பெரி...