வெள்ளி, 29 ஜூலை, 2022
புனித மார்த்தா நினைவு....(29.7.2022)
வியாழன், 28 ஜூலை, 2022
புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...(28.7.2022)
புதன், 27 ஜூலை, 2022
இழக்கத் துணிந்த மனிதர்களாக...(27.4.2022)
வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க(24.7.2022)
அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...(23.7.2022)
மகதலா மரியா வழியாக...(22.7.2022)
வியாழன், 21 ஜூலை, 2022
கடவுளுக்கு அர்ப்பணம்....(21.7.2022)
ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....(20.7.2022)
திங்கள், 18 ஜூலை, 2022
வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...(19.7.2022)
இறைவனோடு இணைந்த வாழ்வு....(16.07.2022)
இறைவனோடு இணைந்த வாழ்வு....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் அருகில் அமர்ந்திருக்க, ஆண்டவரோடு உரையாட, ஆண்டவரோடு உறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பை தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளின் தூதர்களை கண்டு கொள்வதையும், அவர்களை உபசரிப்பதையும், அவர்களோடு உரையாடி, உறவாடி, அவர்களின் ஆசிகளை பெற்றுக் கொள்வதையும் வலியுறுத்துகின்றன.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய நபராக, ஆண்டவரின் வார்த்தைகளின் மீது அவர் கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையும், இந்த வார்த்தைகளின் வழியாக அவரோடு அவர் இணைந்துள்ள வாழ்வையும் நம்மிடையே எடுத்துரைப்பதாக இரண்டாம் வாசகம் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மார்த்தா மரியா என்ற இருவரில், மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என, தன் அருகில் அமர்ந்து தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த மரியாவைப் பற்றி இயேசு புகழ்ந்துரைப்பதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகப் பகுதிகள் அனைத்துமே வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, கடவுளோடு நேரம் செலவிடக்கூடிய மனிதர்களாக, அவரோடு உரையாடக் கூடியவர்களாக, உறவாடக் கூடியவர்களாக, நாளும் வளர நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனோடு இணைந்த வாழ்வை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம், இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
அடையாளமாக நாம் மாறுவேரம்......(18.07.2022).
அடையாளமாக நாம் மாறுவேரம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருகிறது. நல்லது எதுவோ, நேர்மையானது எதுவோ, நீதி எதுவோ, அதனை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்ற அழைப்பு முதல் வாசகம் வழியாக நமக்கு தரப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் தங்களுக்கு அடையாளத்தை காட்டுமாறு பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவை அணுகுகிறார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு அடையாளம் தரப்பட மாட்டாது என்கிறார்.
இயேசுவின் இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கின்ற போது, அடையாளங்களை கேட்கின்ற நபர்களாக நாம் இல்லாமல், நமது செயல்கள் மூலமாக நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கான அடையாளமாக நாம் மாறுவதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
Photography Topics with Pictures...
Photography Topics: 1. Street Photography: 2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...