வியாழன், 21 ஜூலை, 2022

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....(20.7.2022)

ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                   இன்றைய முதல் வாசகத்தில் எரேமியாவின் அழைப்பை பற்றி நாம் வாசிக்க கேட்கின்றோம். எரேமியாவின் அழைப்போடு இந்த புத்தகமானது துவங்குகிறது. தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கடவுள் நம்மை அறிந்திருக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய உதாரணமாக எரேமியாவின் அழைப்பு பார்க்கப்படுகிறது.

                      நம்மை அறிந்து வைத்திருக்கின்ற இறைவன்,  அவரது வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான அழைப்பை அனுதினமும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக,   நூறு மடங்கு விளைச்சல் தரக்கூடிய 
மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.  இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக, ஆண்டவரின் வார்த்தைக்கு கவனத்தோடு செவிகொடுத்து அவரின் வார்த்தைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நூறு மடங்கு விளைச்சல் தருகின்ற நல்ல மக்களாக, ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...