புதன், 13 ஜூலை, 2022

நம்பிக்கை கொண்ட மனிதர்களாக....(14.7.2022)

நம்பிக்கை கொண்ட மனிதர்களாக....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில்  மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய நாள் இறை வார்த்தை முழுவதுமே, கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனித வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒன்று. இரண்டும் எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் அனுமதிக்கின்றார். துன்பம் வரும்போது துவண்டு விடாமல் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு
 பயணிக்க இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

     சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள்  என்று கூறக்கூடிய இறைவனின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போது, இறைவனின் துணையை நாடக்கூடிய மனிதர்களாக, இறைவனின் துணையோடு துன்பங்களை துணிவோடு எதிர்கொள்ளக்கூடிய மனிதர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணம் செய்ய இறைவன் அழைப்பு தருகின்றார்.

     இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு நாம் ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை அவரின் பாதையில் அமைத்துக் கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...