புதன், 13 ஜூலை, 2022

இறைவன் விரும்புகின்ற மாற்றம்...(12.7.2022)

இறைவன் விரும்புகின்ற மாற்றம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கடவுள் மனிதனை படைத்து இந்த மண்ணில் வாழ்வதற்கான, வாழ்வுக்கான நெறிகளை கற்பித்தார். கடவுள் கற்பித்த நெறிகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் மனிதன் பல நேரங்களில் தன் மனம் போன போக்கில் வாழக்கூடியவனாகவே இருந்தான். படைப்பின் தொடக்கத்திலேயே மனிதனை குறித்து கடவுள் வருந்துவதை தொடக்க நூல் ஆறாம் அதிகாரம் 5 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கலாம்.

       இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட கடவுள் சில நகரங்களை தண்டிக்கக் கூடியவராக, கடுமையான வார்த்தைகளை அவர்களிடம் உதிர்க்கக் கூடிய நபராக இருக்கின்றார். ஏன் இத்தகைய வார்த்தைகள் இயேசுவிடமிருந்து வெளிப்பட்டன? என சிந்திக்கின்ற போது கடவுளுடைய வார்த்தைகளை கேட்டும் மனம் மாற்றம் அடையாத மனிதர்களாகவே அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கடின உள்ளத்தை பொறுத்தே கடவுள் கடுமையாக வார்த்தைகளை அவர்களோடு உதிர்க்கக் கூடிய நபராக இருக்கின்றார். கடவுள் உதிர்க்கின்ற இந்த வார்த்தைகள் கூட, ஒரு விதமான மன மாற்றத்தை அடைந்து கொண்டு, ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்வதற்கான அழைப்பை அந்த மக்களுக்கு அன்று தந்தது.

          இன்று நாமும், வார்த்தையை கேட்கின்ற ஒவ்வொருவருமே இந்த ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகிறோமா? அல்லது கேட்டுவிட்டு தன் மனம் போன போக்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? என சிந்திக்க இந்த நாள் அழைப்பு தருகிறது. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய், நமது வாழ்வில் ஆண்டவர் விரும்புகின்ற மாற்றங்கள் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, இறைவன் விரும்புகின்ற மாற்றத்தை நம் வாழ்வில் நாம் பின்பற்றக்கூடிய மனிதர்களாக மாற இறைவனிடத்தில் அருள் வேண்டி இந்த நாளை ஆண்டவருக்கு உகந்த நாளாக மாற்றுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...