வெள்ளி, 1 ஜூலை, 2022

இறைவனின் பாதையில் ...(2.7.2022)

இறைவனின் பாதையில் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகத்தில் தவறி போன இஸ்ரயேல் மக்களின் தவறை ஆமோஸ் இறைவாக்கினர் சுட்டிக்காட்ட,
ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் இறைவனது வார்த்தைகள் என்பதை உணர்ந்து, தங்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிற அவர்களுக்கு, ஆமோஸ் இறைவாக்கினர், கடவுளின் வாக்காக, "இதோ நாட்கள் வருகின்றன. அப்போது தாவீதின் குடும்பத்தை உயர்த்துவார் எனக் கூறி, அவர்களின் மனமாற்றத்திற்கான பரிசாகிய இறைவனது அளப்பரிய வல்லமையான செயல்களை சுட்டிக்காட்டுகிறார். 

         இந்த இறைவார்த்தைப் பகுதியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது, மனிதர்களாகிய நாம் செய்கிற ஜெபம் தவம் தர்மச் செயல்கள் இவை அனைத்துமே நமக்கு நிறைவை தருவதை விட, இவைகளின் மூலமாக நாம் இறைவனை விலைக்கு வாங்க எண்ணுவதை விட, இவைகளின் அர்த்தத்தை உணர்ந்தவர்களாய் நாம் பின்பற்ற வேண்டும் என்ற செய்தியினை, நமக்குத் தருகின்றன. 

        நோன்பு இருப்பதனை ஒரு சடங்காகவே மட்டுமே கருதி, சட்டமாக அதனை தங்கள் இதயத்தில் எழுதிக் கொண்டு, பின்பற்றுபவர்களாகத் தான் பரிசேயர்களும் சதுசேயர்களும் இருந்தார்கள். 
ஆனால் இறைவன் இயேசு கிறிஸ்து, நோன்பு பற்றிய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றார். எந்தவித மாற்றமும் இல்லாமல் வெறுமனே, இந்த ஒறுத்தல் மட்டுமே நம்மை ஆண்டவர் இடத்தில் ஐக்கியப்படுத்தும் என்பது அல்ல. 

           நோன்பு என்ற பெயரில் நாமும், உண்ணாது இருக்கின்ற உணவை இயலாதவரோடு பகிர்ந்து கொள்ளும் போது தான், நோன்பு முழுமை பெறுகிறது. பாவங்கள் செய்து விட்டு, உதவிகள் செய்யாமல் நோன்பு இருப்பதில் அர்த்தம் இல்லை.  நோன்பு இருக்கிறேன் என்று சொல்லி விட்டு பொருட்களை வீட்டில் சேமித்து வைப்பதாலும் அர்த்தம் இல்லை. உறவுகளை புதுப்பித்துக் கொண்டு, நாம் தியாகம் செய்கின்ற உணவுகளை அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டு, அடுத்தவர் மனம் குளிர செய்வது தான் நோன்பின்  உண்மை அர்த்தம் என்பதை இயேசு உணர்த்துகிறார்.  

              நாம் செய்கின்ற சின்ன சின்ன அறப்பணிகளும், எத்தகைய மனநிலையோடு செய்யப்படுகிறது? அல்லது எந்த அளவிற்கு அதன் உண்மை தன்மையை நாம் உணர்ந்தவர்களாக செய்கின்றோம்? என்பதை இதயத்தில் இருத்தி  சிந்திக்கவும், நமது செயல்களை சரி செய்து கொண்டு இறைவனின் பாதையில் அவர் விரும்பும் மக்களாக தொடர்ந்து பயணிக்கவும், இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...