திங்கள், 18 ஜூலை, 2022

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...(19.7.2022)

வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின்  அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய முதல் வாசகம் மீக்கா நூலில் இருந்து எடுக்கப்பட்டது.  மீக்கா புத்தகமானது கண்டனத்தோடு தொடங்கி, கடவுள் மீதான ஆறுதலான வார்த்தைகளை கொடுத்து, இறை புகழ்ச்சியோடும், பிறகு கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையோடும் இந்த புத்தகமானது நிறைவை நோக்கி செல்லும். அதன் அடிப்படையில் கடவுளுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதையும், இந்த இறைவன் நமது பாவங்களை மன்னிக்க வல்லவர், நமது  குற்றங்களை எல்லாம் மன்னித்து, ஆசிகளை நமக்கு தரக்கூடியவர் என்பதை எடுத்துரைக்கிறது. இதையே இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

          இன்றைய நற்செய்தி வாசகத்தில் என்னுடைய வார்த்தைகளை கேட்டு கடைபிடிப்பவரே என் தாயும் சகோதரரும் என இயேசு குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு, அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய நபர்களாக நாம் இருக்கின்ற போது, நாமும் கடவுளின் மீதான நம்பிக்கையோடு அவரிடம் இருந்து ஆசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.  நமது குற்றம் குறைகளை எல்லாம் மன்னித்து நம்மை ஏற்றுக்கொண்ட இந்த இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாம் வாழ இறைவனிடத்தில் தொடர்ந்து அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...