திங்கள், 3 ஏப்ரல், 2023

நீங்கள் விடுதலை பெற்றவர்கள்! (29-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுக்கின்ற மக்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். கடவுளுடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்படுகிறபோது நமது வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக இருக்கும். எப்போதெல்லாம் இஸ்ரேல் மக்கள் கடவுளின் குரலுக்கு செவி கொடுக்க மறந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வில் பலவிதமான துன்ப துயரங்களுக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்ள முடியும். நாளும் நமது வாழ்வை நலமோடு அமைத்துக்கொள்ள இறை வார்த்தையை இதயத்தில் இருத்திக் கொள்வோம். கடவுளின் வார்த்தைகளை பின்பற்றுவது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக, நாளும் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இருக்கிறவர் நானே! (28-3-2023)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பவர். இந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.  உடன் இருக்கின்ற இறைவனது குரலுக்கு செவி கொடுக்காமல் இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வை தங்கள் மனம் போன போக்கில் அமைத்துக் கொண்ட போதெல்லாம் கடவுள் மீண்டும் மீண்டுமாக அவர்களை தம் வழிக்கு அழைத்து வந்தார்.

      அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இம்மண்ணில் வாழ்ந்த போது எத்தனையோ நன்மைத்தனங்களை எடுத்துரைத்த போது அதற்கு செவி கொடுக்காத மனிதர்களாக பல யூதர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய மனிதர்களைப் போல நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளக்கூடாது என்பதை தான் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் வலியுறுத்துகிறார். நம்மோடு இருக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து, நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

உங்களுள் பாவம் இல்லாதவன்!!!! (27-3-2023)


    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

             இன்றைய நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி ஒரு பெண்ணை இயேசுவின் முன்னால் நிறுத்தி, மோசேயின் சட்டப்படி இவரை கல்லால் எரிந்து கொல்லலாமா என்ற கேள்வியை எழுப்புகிற போது ஆண்டவர் அடுத்தவரை தீர்ப்பிடுவதற்கு பதிலாக நாம் நேர்மையாளராகவும் நீதியோடும் செயல்பட வேண்டும் என்பதை இலை மறை காயாக எடுத்துரைக்கின்றார். உங்களின் குற்றமில்லாதவர் முதல் கல்லை எரியட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் அங்கிருந்த ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஊடுருவியது.

    ஒருவரும் தங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து  சிறுவர் முதல் பெரியவர் வரை கையில் ஏந்திய கல்லை தரையில் போட்டுவிட்டு நகர்ந்து சென்றார்கள் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

 குற்றம் செய்தார் என்றும், கையும் களவுமாக பிடிபட்டார் என்றும் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தியது ஒரு பெண்ணை மட்டுமே. ஆணாதிக்க சமுதாயம் தன்னை காத்துக் கொண்டு, ஒரு பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிறுத்துகின்ற ஒரு நிகழ்வினை அன்று முன்னெடுத்தது. கடவுளின் பார்வையில் அனைவரும் மதிக்கத்தக்கவர்கள்.  பாலினமோ அல்லது இனத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நம்மில் பிளவுகள் இல்லை; வேறுபாடுகள் இல்லை என்பதை இயேசு எடுத்துரைக்கும் வண்ணமாக, பிறரை குற்றவாளி என யாரும் தீர்ப்பிடக்கூடாது; இந்த தீர்ப்பிடுதல் என்பது இறைவனுக்கு உரியது என்பதை எடுத்துரைக்கின்றார். இயேசுவிடம் இருந்து நாம் இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக கற்றுக்கொண்ட இந்த தீர்ப்பிடக்கூடாது என்ற பண்பினை இதயத்தில் இருத்திக் கொள்வோம். நாம் வாழுகின்ற சமூகத்தில் மற்றவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பிடுகிற போதெல்லாம் நாமும் தீர்ப்பிடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்; குற்றவாளிகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மால் முடிந்த நன்மைகளை மற்றவருக்குசா செய்யவும் நீதியோடும் நேர்மையோடும், என்றும் பயணிக்கவும் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே! (26-3-2023)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

               இயேசுவின் இறப்புக்கு பிறகாக யூதர்கள் பலரும் கொல்லத் தேடிய ஒரு நபர் இலாசர். காரணம், இறந்த இலாசாரை ஆண்டவர் உயிர்த்தெழச் செய்தார். இந்த உயிர்ப்புச் செய்தியானது பலருக்கும் பரவியது. எனவே இந்த லாசர் இயேசுவை பற்றி பேசுவதற்கு காரணமாக இருக்கிறார் என்ற எண்ணத்தோடு இந்த இலாசாரை அழித்து விடுவதற்கான முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. 

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறந்த இலாசரை ஆண்டவர் உயிர்ப்பிக்கின்ற நிகழ்வினை வாசிக்க கேட்டோம்.  மனிதனுக்குள் இருக்கின்ற தூய ஆவியானவர் இவ்வுலகின் இச்சைகளின்படி வாழாமல் கடவுளுக்கு உகந்தபடி வாழ்வதற்கான அறிவுறுத்தலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. இந்த இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நம் வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக மாறும். இயேசு தன்னுடைய வாழ்வில் தன்னிடம் இருந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இந்த சமூகத்தில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இவ்வுலக இச்சைகளை புறம் தள்ளிவிட்டு கடவுளுக்கு உரியவற்றிற்கு முதன்மையான இடம் கொடுத்து இவ்வுலக வாழ்வில் அனுதினமும் நம் செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு விழா! (25-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    தாய் திருவையானது இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து மகிழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதோ உமது திருவுளத்தை நிறைவேற்ற நான் வருகிறேன் என்று சொல்லி பலிகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தன்னையே பலியாக கொடுத்த இயேசுவின் பிறப்பு இன்று அறிவிக்கப்படுவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    அன்றைய யூத சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து கொண்டிருந்த போதும் கூட, கடவுளின் தூதர் மரியாவுக்கு தோன்றி இயேசுவின் பிறப்பை அறிவித்த போது, கடவுளின் பணியாளராக தன்னை ஏற்றுக்கொண்ட மரியா, நான் ஆண்டவரின் அடிமை! உமது சொற்படி எனக்கு நிகழட்டும் என்று சொல்லி கடவுளின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு தன்னையே முழுவதுமாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தார். இந்த மரியாவின் அர்ப்பண உணர்வு உங்களிலும் என்னிலும் மேலோங்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாளில் இதயத்தில் இருத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.  மரியாவைப் போல கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்திக் கொண்டு கடவுளால் 
கூடாத காரியம் எதுவுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக கடவுள் நமக்கென வகுத்து வைத்திருக்கின்ற அனைத்திற்கும் இதயத்தோடு இதயம் திறந்தவர்களாக செவி கொடுத்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இயேசுவின் சீடர்கள் என சான்று பகர்வோம்! (24-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

          இயேசுவின் செயல்கள் இயேசுவை மெசியா என சுற்றி இருந்த அனைவராலும் கண்டுகொள்ள வைத்தது. அதன் விளைவாகத்தான் இயேசுவை மெசியா என்று அஞ்சி அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் கூட என்ன செய்வது என தெரியாமல், ஆனால் பல விதமான சூழ்ச்சிகளை தங்களுக்குள் மேற்கொண்டு இந்த இந்த இயேசுவை எப்படியாவது பிடித்து ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

     இயேசுவின் செயல்கள் இயேசுவை மெசியா என சுட்டிக்காட்டியது போல, இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய செயல்களும் நாம் இந்த இயேசுவை பின்பற்றுபவர்கள் என்பதை ஒவ்வொரு நாளும் வெளிக் காட்ட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாக நம் செயல்களை சரி செய்து கொண்டு, கடவுளுக்கு உகந்த செயல்களை நம் செயல்களாக மாற்றிக்கொண்டு நம் செயல்களால் இயேசுவின் சீடர்கள் என சான்று பகரக்கூடிய ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நமது செயல்கள் தந்தைக்கு உகந்ததா? (23-3-23)




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      இன்றைய இறை வார்த்தைகள் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் கடவுளுக்கு அர்ப்பணம் ஆனவர்; கடவுளின் திருவுளப்படி இம்மண்ணில் வாழ்கிறவர் என்பதற்கான சான்று அவரின் செயல்கள் என்பதை எடுத்துரைக்கிறார். தன் செயல்கள் மூலமாக தான் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் அவரே அதனை எடுத்துரைக்கின்றார். இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்வில் நாம் செய்கின்ற அன்றாட செயல்களும் இந்த இயேசுவின் பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை எடுத்துரைக்கின்ற செயல்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வாயிலாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                பரபரப்பான இந்த உலகத்தில் பம்பரமாக பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நமது செயல்கள் அனைத்தும் இயேசுவைப்போல தந்தையின் திருவுளத்திற்கு உகந்த செயல்களாக இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து நம் வாழ்வை சரி செய்து கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணித்து நம் செயல்கள் மூலமாக அவருக்கு சான்று பகரக் கூடியவர்களாக மாறுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

நாமும் இயேசுவும் இணைந்து இருக்க வேண்டும்! (22-3-23)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
   தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இணைந்திருந்தது போல நாமும் இயேசுவும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதராக தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவராக தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டார்.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் இந்த இயேசுவை போலவே கடவுளின் விருப்பத்தை அறிந்து அந்த விருப்பத்திற்கு செயல் வடிவம் தருகின்றவர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டிட ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

             

மனிதர் நலமடைந்தார்! (21-3-23)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவர்  இயேசு கிறிஸ்து நெடு நாட்களாக முடக்கு வாத முற்றிருந்த ஒரு மனிதனுக்கு நலம் தருகின்ற ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகத்தை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பல ஆண்டுகளாக நம் மனதில் புதைந்திருக்கக்கூடிய பலவிதமான தீமைகளை அகற்றுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அழைப்பினையும் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

     பல நேரங்களில் நம்மிடம் இருக்கின்ற இந்த தீய எண்ணத்தை எவரும் அறியாதிருக்க இதை அகற்றிட வேண்டும் வேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட்டு தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நாம் அத்தகைய தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான அழைப்பை மீண்டும் இதயத்தில் உருவாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். 38 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த அந்த மனிதனை ஆண்டவர் தேடி வந்தது போல நெடு நாட்களாக நம்மிடம் இருந்து அகற்ற முடியாமல் தவிர்க்கின்ற அந்த தீமையை அகற்றுவதற்கான வலிமையை இறைவன் தர வல்லவர் என்பதை உணர்ந்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

புனித யோசேப்பு- புனித கன்னி மரியாவின் கணவர். (20-3-23)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

         இன்று தாய்த்திரு அவையானது புனித யோசேப்பை நினைவு கூர அழைப்பு விடுக்கிறது. விவிலியத்தில் நேர்மையாளராக சுட்டிக் காட்டப்படுகின்ற இந்த யோசேப்பு,  இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆன இவர் தன்னுடைய பணியை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை பாதுகாக்கின்ற பணையினை மிகவும் சிறப்பாக செய்தவர்.  இளம் வயதில் இயேசுவை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். தனக்கு தெரிந்த அத்தனை நன்மைகளையும் தன்னுடைய மகனுக்கு கற்றுக் கொடுத்த ஒரு நல்லதொரு தந்தையாக இந்த யோசேப்பு திகழ்கின்றார். எனவே தான் தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் படிக்கின்ற மாணவர்களின் பாதுகாவலராகவும் இவர் முன்னிறுத்தப்படுகின்றார். இந்த யோசேப்பை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே இவரின் நாமத்தை தாங்கி இருக்கிற அனைவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை மகிழ்வோடு உரித்தாக்குகிறேன்.  சூசையப்பரிடம் காணப்படுகின்ற நல்ல பண்புகளை எல்லாம் நமது பண்புகளாக எடுத்துக்கொண்டு கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுள் நம்மிடம் ஒப்படைக்கின்ற பணிகளை முகம் சுழிக்காமல் கடமை உணர்வோடு பொறுப்போடும் செய்கின்ற நபர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்! (19-3-23)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


           நானே உலகின் ஒளி என்றவரை பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இந்த கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் மனிதர்களாகிய நாம் முகத்தினை வைத்து எடை போடுகின்றோம். ஆனால் கடவுள் எவரின் முகத்தை வைத்தும் எடை போடுபவர் அல்ல. மாறாக அவர் உள்ளத்தை ஆய்வு செய்பவர்.

    இந்த இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளின் வாயிலாக நம் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம். நாம் மேற்கொள்ளுகின்ற தவம் முயற்சிகள் வெளிவரும் மற்றவரின் புகழுக்காகவோ மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அமைந்திருத்தல் கூடாது. மாறாக, கடவுள் அகத்தை பார்க்கிறார் என்பதை உணர்ந்தவராக வெளிப்புற அடையாளங்களை புறம் தள்ளி உள்ளார்ந்த மாற்றத்தோடு ஒவ்வொரு நாளும் கடவுளின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நம் செயல்களை ஆய்வு செய்து பார்த்து இயேசுவின் செயல்களைப் போல நமது செயல்களையும் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆற்றல் வேண்டிட அழைக்கப்படுகிறோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் கடவுளை பின்பற்றுகிறோம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டிட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்வோம். 

      மலை மீது இருக்கின்ற ஒளியானது பலருக்கு பயன் தருவது போல நாமும் இந்த இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றுவதன் வாயிலாக பலரும் நம்மைப் பார்த்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நல்லதொரு முன் உதாரணமாக நாம் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...