ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

மனிதர் நலமடைந்தார்! (21-3-23)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவர்  இயேசு கிறிஸ்து நெடு நாட்களாக முடக்கு வாத முற்றிருந்த ஒரு மனிதனுக்கு நலம் தருகின்ற ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகத்தை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பல ஆண்டுகளாக நம் மனதில் புதைந்திருக்கக்கூடிய பலவிதமான தீமைகளை அகற்றுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அழைப்பினையும் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

     பல நேரங்களில் நம்மிடம் இருக்கின்ற இந்த தீய எண்ணத்தை எவரும் அறியாதிருக்க இதை அகற்றிட வேண்டும் வேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட்டு தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நாம் அத்தகைய தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான அழைப்பை மீண்டும் இதயத்தில் உருவாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். 38 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த அந்த மனிதனை ஆண்டவர் தேடி வந்தது போல நெடு நாட்களாக நம்மிடம் இருந்து அகற்ற முடியாமல் தவிர்க்கின்ற அந்த தீமையை அகற்றுவதற்கான வலிமையை இறைவன் தர வல்லவர் என்பதை உணர்ந்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...