திங்கள், 3 ஏப்ரல், 2023

மரியாவை தடுக்காதீர்கள்! (3-4-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
     உணவு அருந்துவதற்காகச் சென்ற இயேசுவின் காலடிகளில் ஒரு பெண்மணியானவள் அமர்ந்து, தன் கண்ணீரால் அவரது கால்களைக் கழுவி, தன் கூந்தலாலால் அவர் கால்களை துடைத்து, தன் கையில் வைத்திருந்த நறுமண தைலத்தை அவர் காலில் கொட்டி பூசுகின்ற ஒரு நிகழ்வை நாம் வாசிக்கக் கேட்டோம்.  இந்த நிகழ்வு நடக்கிற போது அங்கு இயேசுவின் சீடர்களும் இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான யூதாசு, "இந்த நறுமண தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? முந்நூறு தெனாரியத்திற்கு மதிப்பு பெற்ற இந்த தைலத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாமே என்று அவர் சொல்லுவது, பல நேரங்களில் அவர் ஏழைகளின் மீது கொண்டிருந்த அன்பை உணர்த்துவது போல இருந்தாலும், அப்பணத்தின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் வாழ்வில் அரங்கேறிய இந்நிகழ்வானது,  இயேசு விரைவில் இறக்கப் போகிறார்; துன்பப்பட போகிறார் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமாக நிகழ்ந்தது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

     நம் வாழ்வில் இதுபோல நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுமே, ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு விதத்தில் நாம் இன்னும் கடவுளின் மீது நம்பிக்கை கொள்ளவும், நம் வாழ்வில் வருகிற துன்ப துயரங்களுக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ளவும் இறைவன் ஒவ்வொரு நாளும் பல வழிகளில் நம்மை ஊக்கப்படுத்துகிறார்; தகுதிப்படுத்துகிறார். இதனை உணர்ந்து கொண்டு வாழ்வில் வருகிற அத்துனை நிகழ்வுகளையும் இறைவனின் துணை கொண்டு எதிர்கொண்டு சென்றிட இறைவனிடத்தில் இறையருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...