திங்கள், 3 ஏப்ரல், 2023

நீங்கள் விடுதலை பெற்றவர்கள்! (29-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுக்கின்ற மக்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். கடவுளுடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்படுகிறபோது நமது வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக இருக்கும். எப்போதெல்லாம் இஸ்ரேல் மக்கள் கடவுளின் குரலுக்கு செவி கொடுக்க மறந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வில் பலவிதமான துன்ப துயரங்களுக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்ள முடியும். நாளும் நமது வாழ்வை நலமோடு அமைத்துக்கொள்ள இறை வார்த்தையை இதயத்தில் இருத்திக் கொள்வோம். கடவுளின் வார்த்தைகளை பின்பற்றுவது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக, நாளும் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...