திங்கள், 3 ஏப்ரல், 2023

இருக்கிறவர் நானே! (28-3-2023)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பவர். இந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.  உடன் இருக்கின்ற இறைவனது குரலுக்கு செவி கொடுக்காமல் இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வை தங்கள் மனம் போன போக்கில் அமைத்துக் கொண்ட போதெல்லாம் கடவுள் மீண்டும் மீண்டுமாக அவர்களை தம் வழிக்கு அழைத்து வந்தார்.

      அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இம்மண்ணில் வாழ்ந்த போது எத்தனையோ நன்மைத்தனங்களை எடுத்துரைத்த போது அதற்கு செவி கொடுக்காத மனிதர்களாக பல யூதர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய மனிதர்களைப் போல நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளக்கூடாது என்பதை தான் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் வலியுறுத்துகிறார். நம்மோடு இருக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து, நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...