திங்கள், 3 ஏப்ரல், 2023

கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு விழா! (25-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    தாய் திருவையானது இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து மகிழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதோ உமது திருவுளத்தை நிறைவேற்ற நான் வருகிறேன் என்று சொல்லி பலிகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தன்னையே பலியாக கொடுத்த இயேசுவின் பிறப்பு இன்று அறிவிக்கப்படுவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    அன்றைய யூத சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து கொண்டிருந்த போதும் கூட, கடவுளின் தூதர் மரியாவுக்கு தோன்றி இயேசுவின் பிறப்பை அறிவித்த போது, கடவுளின் பணியாளராக தன்னை ஏற்றுக்கொண்ட மரியா, நான் ஆண்டவரின் அடிமை! உமது சொற்படி எனக்கு நிகழட்டும் என்று சொல்லி கடவுளின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு தன்னையே முழுவதுமாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தார். இந்த மரியாவின் அர்ப்பண உணர்வு உங்களிலும் என்னிலும் மேலோங்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாளில் இதயத்தில் இருத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.  மரியாவைப் போல கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்திக் கொண்டு கடவுளால் 
கூடாத காரியம் எதுவுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக கடவுள் நமக்கென வகுத்து வைத்திருக்கின்ற அனைத்திற்கும் இதயத்தோடு இதயம் திறந்தவர்களாக செவி கொடுத்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...