திங்கள், 3 ஏப்ரல், 2023

ஒன்றாய் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார். (1-4-2023)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு இனம் முழுவதும் அழிந்து போவதற்கு பதிலாக ஒரு மனிதன் அழிந்து போவது நலம் என்று கருதி ஆண்டவர் இயேசுவை கொல்வதற்கு சூழ்ச்சி செய்கின்றார்கள், யூதர்களும் மறைநூல் அறிஞர்களும். ஏன் இயேசுவை இவர்கள் கொல்ல வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி பார்க்கிற போது, இயேசுவின் பெயரில் பலரும் நம்பிக்கை கொண்டார்கள். இயேசுவின் சொல்லையும் செயலையும் கண்டு அவரின் மீது நம்பிக்கை கொள்ளுகின்ற மனிதர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிய போது, எங்கே இந்த மனிதர்கள் நம்மை புறம் தள்ளி விடுவார்களோ என்ற ஐய உணர்வு. இயேசுவை குற்றவாளியாக சித்தரித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு, இயேசுவை கொல்வதற்காக வழிகளை தேடியவர்களாகவும், இயேசுவை பிடிப்பதற்காக காத்திருக்கக் கூடியவர்களுமாக இவர்கள் இருப்பதைத்தான் இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

    பல நேரங்களில் நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை  எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, நமக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கின்ற நபர்களை நாம் வாழ்வில் சந்திக்கின்ற போதெல்லாம், நாமும் இந்த இயேசுவைப் போலவே செயல்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

                ஆனால் எத்தகைய இன்னலும் இடையூறுகளும் வந்தாலும், இயேசுவைப்போல தளரா மனதோடு இயேசுவின் பணியை செய்கின்றவர்களாக, இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட இறையாட்சியின் மதிப்பீடுகளை இதயத்தில் இருத்தி அவற்றுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக, நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள, ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...