ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நமது செயல்கள் தந்தைக்கு உகந்ததா? (23-3-23)




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      இன்றைய இறை வார்த்தைகள் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் கடவுளுக்கு அர்ப்பணம் ஆனவர்; கடவுளின் திருவுளப்படி இம்மண்ணில் வாழ்கிறவர் என்பதற்கான சான்று அவரின் செயல்கள் என்பதை எடுத்துரைக்கிறார். தன் செயல்கள் மூலமாக தான் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் அவரே அதனை எடுத்துரைக்கின்றார். இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்வில் நாம் செய்கின்ற அன்றாட செயல்களும் இந்த இயேசுவின் பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை எடுத்துரைக்கின்ற செயல்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வாயிலாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                பரபரப்பான இந்த உலகத்தில் பம்பரமாக பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நமது செயல்கள் அனைத்தும் இயேசுவைப்போல தந்தையின் திருவுளத்திற்கு உகந்த செயல்களாக இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து நம் வாழ்வை சரி செய்து கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணித்து நம் செயல்கள் மூலமாக அவருக்கு சான்று பகரக் கூடியவர்களாக மாறுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...