வியாழன், 6 ஏப்ரல், 2023

புனித வியாழன்! (6-4-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

       இன்று குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்திய விழாவினை நாம் கொண்டாடுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முன்பதாக நற்கருணையை ஏற்படுத்தி அந்நற்கருணை கொண்டாட்டத்தை நாள்தோறும் நினைவு கூரும் வண்ணமாக குருத்துவத்தை ஏற்படுத்திய ஒரு நன்னாள். இந்த நாளிலே நாம் அறிந்த அனைத்து குருக்களுக்காகவும் ஜெபிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நவீன சூழலில் எத்தனையோ இடர்பாடுகளும் எத்தனையோ விதமான தடைகளுக்கு மத்தியிலும் குருத்துவப் பணியை ஆற்றுகின்ற குருக்களை நினைவு கூருவோம். அவர்களுக்கு ஆண்டவர் தாமே இந்த உலக இச்சைகளுக்கு மத்தியிலும் எதிர்த்து நிற்பதற்கான வலிமையை தர வேண்டும் என மன்றாடுவோம்.

       நமது குடும்பத்தில் இறை அழைத்தல் பெருகுவதற்காக இறைவனிடம் வேண்டுவோம். இயேசுவோடு உடனிருந்த சீடர்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும் கூட அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றி தன் பணிக்கென அவர்களை அமர்த்திய இயேசுவைப்போல நம் மத்தியில் இயேசுவின் சீடர்களாக அவரது பணியில் பங்கெடுக்கக்கூடியவர்களாக வலம் வருகின்ற குருக்களின் வாழ்வுக்காகவும் உடல் நலத்திற்காகவும் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...