திங்கள், 3 ஏப்ரல், 2023

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே! (26-3-2023)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

               இயேசுவின் இறப்புக்கு பிறகாக யூதர்கள் பலரும் கொல்லத் தேடிய ஒரு நபர் இலாசர். காரணம், இறந்த இலாசாரை ஆண்டவர் உயிர்த்தெழச் செய்தார். இந்த உயிர்ப்புச் செய்தியானது பலருக்கும் பரவியது. எனவே இந்த லாசர் இயேசுவை பற்றி பேசுவதற்கு காரணமாக இருக்கிறார் என்ற எண்ணத்தோடு இந்த இலாசாரை அழித்து விடுவதற்கான முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. 

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறந்த இலாசரை ஆண்டவர் உயிர்ப்பிக்கின்ற நிகழ்வினை வாசிக்க கேட்டோம்.  மனிதனுக்குள் இருக்கின்ற தூய ஆவியானவர் இவ்வுலகின் இச்சைகளின்படி வாழாமல் கடவுளுக்கு உகந்தபடி வாழ்வதற்கான அறிவுறுத்தலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. இந்த இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நம் வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக மாறும். இயேசு தன்னுடைய வாழ்வில் தன்னிடம் இருந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இந்த சமூகத்தில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இவ்வுலக இச்சைகளை புறம் தள்ளிவிட்டு கடவுளுக்கு உரியவற்றிற்கு முதன்மையான இடம் கொடுத்து இவ்வுலக வாழ்வில் அனுதினமும் நம் செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...