அன்பு சகோதரர் சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் கடவுள் நமக்குச் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது.
1. பவுலின் வாழ்க்கை – உழைப்பும் சாட்சியும்
திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “இரவு பகலாய் உழைத்து, சுமையாக இராதபடி, கடவுளின் நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்” என்று....
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது...
நற்செய்தி அறிவிப்பவர்கள் முதலில் தங்கள் வாழ்க்கை வழியாக சான்று பகர வேண்டும்.
பவுலின் உழைப்பும்... நேர்மையும்... அவருடைய வார்த்தையும் அவரது வாழ்வு மூலம் உண்மையானது.
அவருடைய சாட்சி வார்த்தையிலல்ல அஅவருடைய வாழ்க்கையிலிருந்தது.
2. கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்வது
பவுல் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்: “நீங்கள் எங்களிடமிருந்து கேட்டதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள்.”
கடவுளின் வார்த்தையானது நம்பிக்கை கொண்டவர்களில் செயல்படுகிறது.
நாமும் ஒவ்வொரு நாளும் விவிலியத்தை படிக்கும் போது, அதை மனிதர் எழுதிய புத்தகம் என்று அல்ல, உயிருள்ள கடவுளின் குரல் என்று உணர்ந்து படிக்க வேண்டும்.
3. இயேசுவின் கண்டனம் – வெளிவேடம்
மத்தேயு நற்செய்தியில், இயேசு பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் கண்டிக்கிறார்.
அவர்கள் வெளியில் நேர்மையாகத் தோன்றினாலும் அவர்களின் உள்ளே போலித்தனமும் அமைதியான செயல்களும் நிறைந்திருந்தது.
வெளியில் புனிதர் போல் தோற்றமளித்தாலும், உள்ளத்தில் சுயநலம், ஆணவம், பொய்மை நிறைந்து இருந்தது.
“வெள்ளையடித்த கல்லறைகள்” போலியாய் பளபளப்பாக இருந்தும் உள்ளே அழுக்கு நிறைந்திருந்தது. என்பதை இவ்வாறு உணரலாம் ...
4. நம்முடைய வாழ்க்கை – உள்ளமும் புறமும்
இன்றைய வாசகங்கள் நம்மை சுய ஆய்வுக்கு அழைக்கின்றன.
வெளியில் பக்தியுடன், இறை வேண்டலுடன், நல்ல செயல்களுடன் இருப்பது போதாது.
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் வேண்டும்.
நம் வார்த்தை, நம் செயல், நம் உள்ளம் – அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சான்றுபகரும் வகையில் இருக்க வேண்டும்.
5. அழைப்பு
இன்று இறை வார்த்தை வழியாக நாம் பவுலைப் போல நாமும் சாட்சியாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
அதேச் சமயம் இயேசு எச்சரிக்கும் போலித்தனத்தைத் தவிர்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.
எனவே இன்றைய நாளில் கடவுளின் வார்த்தையை உண்மையாய் ஏற்று, அதை வாழ்க்கையில் நடைமுறையாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்... என்பதை உணர்வோம்.
எனவே அன்பர்களே,
இன்றைய வாசகங்கள் நமக்கு சொல்கின்றன:
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வார்த்தையிலல்ல, வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும்.
போலித்தனம் நம்மை கடவுளிடமிருந்து விலக்குகிறது.
கடவுளின் வார்த்தை நம்முள் செயலாற்றும் போது, நாம் தூய்மையாய், நேர்மையாய், உண்மையாய் வாழ முடியும்.
எனவே இறைவன் இன்றைய நாளில் நமது உள்ளத்தை சீர்படுத்த ஆற்றல் தர வேண்டி இணைந்து ஜெபிப்போம் ...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக