திங்கள், 4 ஆகஸ்ட், 2025

"கரம்பிடிக்கும் கடவுள்....(5.8.2025)

"கரம்பிடிக்கும் கடவுள்...


 ... மோசேயின் நல் உள்ளம் ...

இன்றைய முதல்  வாசகத்தில் நாம் காண்பது:

  • மோசே எதிராக மிரியாமும் ஆரோனும் பேசுகிறார்கள்.
  • அவர்கள் கூறும் குற்றம் மோசே எத்தியோப்பிய பெண்ணை மணந்ததுதான், ஆனால் உண்மையானக் காரணம் – அவர்மேல் ஏற்படும் இறைவாக்கு உரைக்கும்  பெருமையைப் பொறுக்கமுடியாத பொறாமை.
  • ஆண்டவர் மோசேவின் பக்கத்தில் நிலைத்து நின்றார். மோசே குறித்து கூறப்படும் வார்த்தை:

    “பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடர்.”

  • கடவுள் மோசேவிடம் நேராக, தெளிவாக பேசுகிறார் – இது அவர் ஆண்டவரோடு  நம்பிக்கைக்குரிய உறவைச் சுட்டிக்காட்டுகிறது.
  • மிரியாம் தொழுநோயால் பாதிக்கப்படுகிறாள், ஆனால் மோசே அவளுக்காகவே ஆண்டவரிடம் பரிந்துரை செய்கிறார்.
  • இது மன்னிப்பு, கருணை, இரக்கம் என்பவற்றின் அழகான எடுத்துக்காட்டு.
நம்மை காயப்படுத்தும் நபர்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசுகிற மனநிலை நமது மனநிலையாக மாற வேண்டும் என்பதை இன்றைய இறைவா வார்த்தை உனக்கு உணர்த்துகிறது. 

கரம்பிடிக்கும் கடவுள் ...

இன்றைய நற்செய்தி  வாசகத்தில் நாம் காண்பது:

  • இயேசு தனியே ஜெபிக்க மலைக்கு ஏறுகிறார். தனிமையில் ஜெபித்ததை போல நாமும் தனிமையில் நாள்தோறும்இறைவனோடு இணைந்துஜெபிக்க வேண்டும். 
  • சீடர்கள் கடலில் பயணித்தபோது இயேசு அவர்களிடம் கடல்மீது நடந்து வருகிறார். வாழ்வில் எப்போதெல்லாம் நம் செயல்களால் கடவுளை விட்டு தள்ளிச் செல்கிறோமோ அப்போதெல்லாம் கடவுள் நம்மை தேடி வருகிறார்.  
  • கடலில் சீடர்கள் பயந்தனர் – "பேய்!" என்று அலறுகிறார்கள். இயேசு சொல்லுகிறார்:

    “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்.” 

  • இவ் வார்த்தைகள் நாமும் அச்சமின்றி ஆண்டவரை அறிந்து கொள்ளக் கூடியவர்களாக துணிவோடு துன்ப நேரங்களில் பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது.

  • பேதுரு இயேசுவை சோதிக்கிறார் " இயேசுவே நீர்தான் என்றால், என்னையும் நடக்க அனுமதியுங்கள்." இயேசு அழைக்கிறார்: “வா” என்று பேதுரு நடக்க தொடங்குகிறார் – ஆனால் காற்றைக் கண்டு பயந்து மூழ்குகிறார். இந்நிகழ்வு அழைத்த ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுத்து வந்த நாம் எதிர்வரும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
  • மூழ்கும் பேதுருவை இயேசு உடனே கையை நீட்டி மீட்கிறார்:

    “நம்பிக்கை குன்றியவனே! ஏன் ஐயம் கொண்டாய்?” என்று அன்பாய் நம்பிக்கையோடு பயணிக்க கற்பிக்கிறார்.  

  • நாமும் நமது வாழ்வில் துன்பங்களுக்குள் மூழ்கும் போது கடவுள் நமது தரும்படித்து நம்மை துன்பங்களில் இருந்து மீட்டு வருவார் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் மலர வேண்டும். 

இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு நம்பிக்கையோடு பயணிக்க அழைப்பு விடுகிறது. 
  • மோசே – நம்பிக்கையோடு ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப வழி நடந்ததால் கடவுள் அவர் சார்பாக செயல்படுவதை நாம் அறிந்து கொள்ள முடியும். 
  • பேதுரு – நம்பிக்கையால் நடக்கத் தொடங்கினார், ஆனால் ஐயத்தால் மூழ்கினார். ஆனால் ஆண்டவர் அவரது மூழ்கும் வேலையில் கரம் பிடித்து அவரை பாதுகாத்து நம்பிக்கையோடு பயணிக்க அழைப்பு விடுத்தார்.  
எனவே அன்புக்குரியவர்களே ... நம்பிக்கையோடு நாளும் ஆண்டவரின் பணி செய்வோம்.
நாம் செய்கிற பணியில் நிமிர்த்தமாக நம்மோடு இருப்பவர்களே நமக்கு எதிராக செயல்பட துவங்கினாலும் அவர்களுக்காக இறைவனிடத்தில் இறைவேண்டலை முன்னெடுப்போம்... கண்டிப்பாக நாம் தடுமாறுகிற போதும், எதிர்பாராத இன்னல்களை சந்திக்கிற போதும் இறைவன் நமது கரம்பிடித்து நம்மை வழி நடத்துவார். 

என்றும் அன்புடன் 
அருள்பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...