ஞாயிறு, 6 மார்ச், 2022
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....(7.3.2022)
சனி, 5 மார்ச், 2022
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்...(6.3.2022)
வெள்ளி, 4 மார்ச், 2022
இயேசுவும் - அழைப்பும்....(5.3.2022)
வியாழன், 3 மார்ச், 2022
நமது வாழ்வும்...நோன்பும்...(4.3.2022)
புதன், 2 மார்ச், 2022
தன்னலம் துறக்க!...(3.3.2022)
செவ்வாய், 1 மார்ச், 2022
தவக்காலம்....(02.02.2022)
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022
வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...(28.02.2022)
வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...

நாம் இந்த உலகத்தில், தகுந்த தயாரிப்போடு, தகுந்த முறையில், ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் போது மட்டுமே நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்காமல், வெறுமனே கடமைக்காக, பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்று, நாம் வழிபாடுகளிலும் அறச் செயல்களிலும் ஈடுபடுபவர்களாக இருந்தால், கண்டிப்பாக நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும், என்று கூறினாராம். இன்றைய நாள் வாசகத்திலும் கூட நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள ஒருவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். கட்டளைகளைக் கடைபிடி என்றார். கடைபிடிக்கிறேன் என்றான்.
ஆனால் உன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற போது, அந்த அறச்செயல்களில் ஈடுபட அவனது மனம் இடம் கொடுக்காததால், அவன் திரும்பிச் சென்று விட்டான். இன்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கற்பித்த இறையாட்சியின் விழுமியங்களை, வாழ்வில் பின்பற்றத் தயங்குகிறோம். அதனை செயல்படுத்துவதற்கு மனம் இல்லாதவர்களாக இச்சமூகத்தில் பயணிக்கிறோம்.
ஆண்டவரது வார்த்தைகளை இச்சமூகத்தில் செயலாக்கப்படுத்த இயலாத போது, நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்ற பாடம் இன்று நமக்குத் தரப்படுகிறது. ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம். நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.

சனி, 26 பிப்ரவரி, 2022
வார்த்தை வாழ்வாகட்டும்....(27.2.2022)
இயேசுவைப்போல பயணிப்போம்...(27.02.2022)
இயேசுவைப்போல பயணிப்போம்.

மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணம் என்பதை சந்தித்தே தீர வேண்டும். நாம் பிறந்த நாளில் இருந்து மரணத்தை சந்திக்கும் நாளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் எவ்வாறு வாழ்கிறோம் என்று சிந்திக்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருந்தாலும், பலரிடத்திலும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. குறிப்பாக தன்னைவிட அடுத்தவர்கள் குறைவானவர்கள் என்ற எண்ணம். அந்த அடிப்படையில்தான் பல நேரங்களில் பல அறிவுரைகளை வழங்குபவர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள். வழங்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்டது போல, தன்னுடைய கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காது, அடுத்தவன் கண்ணில் இருக்கக்கூடிய மரக்கட்டையை எடுப்பவர்களாகத் தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், இந்த சமூகத்தில் நாம் எதையெல்லாம் விதைக்க விரும்புகிறோமோ, அதை எல்லாம் நாம் முதலில் விதைக்க கூடியவர்களாக இருப்போம். நமது வாழ்வில், நமது சொல்லில், நமது செயலில், அதனை வெளிப்படுத்துவோம். அதன்பிறகு அடுத்தவர் வாழ்விலும் அவை வெளிப்பட வேண்டும் என்பதை நாம் கற்பிக்கலாம். பொதுவாக வார்த்தைகளில் கற்பிப்பதை விட, செயல்களில் ஈடுபடுவது தான் சிறந்தது எனக் கூறுவார்கள். நாம் நேர்மையாளர்களாக இருந்தால், நம்மைப் பார்க்கின்றவர்கள் நேர்மையாளர்களாக உருவாவார்கள். நாம் ஒரு காரியத்தில் நேர்மையானவர்கள் என்ற பெயரைப் பெறும் பொழுது, நம்மை நாடி வருபவர்கள் நம்மிடம் நேர்மையற்ற முறையில் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வரமாட்டார்கள். இவர் நேர்மையானவர். எனவே நாமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவ்வாறு தான் இந்த உலகத்தில் இருந்தார். தான் எதையெல்லாம் செய்ய வேண்டும்? இந்த உலகம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என அறிவித்தாரோ, அதனை அவர் வெறும் வார்த்தைகளாக அறிவித்து விட்டுச் செல்லவில்லை. அவர் அறிவித்தவைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் எதை எல்லாம் கற்பித்தாரோ, அதை எல்லாம் வாழ்வாக வாழ்ந்து காண்பித்தார்.
எனவே தான் அந்த ஆண்டவர் இயேசுவை பலரும் பின்பற்றக் கூடியவர்களாக இன்று மாறி இருக்கிறார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் அனைவரும் நம்மிடம் இருக்கும் குறைகளை சரி செய்து கொள்ளாது, நமது குறைகளை மறைத்து, பிறரின் குறைகளை பெரிதுபடுத்தக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். அவ்வாறு செயல்படாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த காலங்களிலே, நாம் இந்த சமூகத்தில் நல்ல மனிதர்களாக இயேசுவைப்போல பயணிப்போம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
குழந்தை மனம் கொண்டவர்களாய்....(26.02.2022)
குழந்தை மனம் கொண்டவர்களாய்....

சிறு குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த சமூகத்தில் ஏராளம். சிறுவர்கள் என்றால் எதுவும் தெரியாதவர்கள் என்று நாம் கூறுவது உண்டு. இன்னும் வளரவில்லை, வளர்ந்த பிறகு கூறு, என்று கூறி அவர்களை மட்டப்படுத்துவதும் உண்டு. ஆனால் சிறு பிள்ளைகளை ஆண்டவர் இயேசு உயர்வாக கூறுகிறார். அவர்களை தன்னிடம் வரவழைக்கின்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூறுகின்றார். ஏனென்றால் அவர்களிடத்தில் காணப்படக் கூடிய பண்பு நலன்கள், நாளுக்கு நாள் வளர வளர பெரிதாகின்ற நம்மிடம் மறைந்து போகின்றது.
சிறுவயதில் நம்மிடம் இருந்த பல நற்பண்புகள், நாம் வளர்ந்த பிறகு நம்மிடமிருந்து மறைந்து போகின்றன. அவை மறைந்து போகக் கூடியது அல்ல. மாறாக, உனக்குள் புதைந்துள்ள உனது இயல்பைக் கண்டு கொள் என்ற பாடத்தை உணர்த்தும் வண்ணமாகத் தான் சிறுபிள்ளைகளை ஆண்டவர் இயேசு தன்னிடம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து பாடம் கற்பிக்க அழைக்கின்றார்.
சிறுபிள்ளைகள் தன்னலம் கருதாது தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் கோபப்பட்டாலும் அதனை மறந்து அனைவருடனும் இணைந்து விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் எளிதில் தன்னைக் காயப்படுத்தியவர்களை மறந்து மன்னித்து விட்டு, அவர்களோடு நட்பு பாராட்டுவதை விரும்புவார்கள்.
நாமும் வயது ஆக ஆக நம்மிடம் இருக்கும் இத்தகைய நற்பண்புகளை எல்லாம் புதைத்துவிட்டு, நாம் பகைமையையும் கசப்பு உணர்வுகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து வாழ்கின்றோம். ஆனால், அனைத்தையும் புறம்தள்ளி இணைந்து வாழ்ந்த சிறு குழந்தைகளைப் போல, நாமும் இப்போதும், குழந்தை மனம் கொண்டவர்களாய் வாழ இறைவன் அழைக்கின்றார். அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு குழந்தை மனம் கொண்டவர்களாய் சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ இறையருள் வேண்டுவோம்.

வியாழன், 24 பிப்ரவரி, 2022
இணைந்து வாழ...(25.02.2022)
இணைந்து வாழ...

நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில்ஆண்டவர் இணைந்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைப்பு தருகிறார்.
கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து வைத்தார் அந்த இணைப்பில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்திற்கு மத்தியிலும் இணைந்து இச்சமூகத்தில் வாழவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
கடவுள் இணைந்திருப்பதை தான் விரும்புகிறார், தனித்திருப்பதை அல்ல. நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்க வேண்டும். இச்சமூகத்தில் நாம் அடுத்தவரோடு இணைந்திருக்க வேண்டும். கணவன் மனைவியோடு இணைந்திருக்க வேண்டும். மனைவி கணவனோடு இணைந்திருக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளோடும், பிள்ளைகள் பெற்றோரோடும் இணைந்திருக்க வேண்டும்.
இணைந்து வாழ்வதில் பலவிதமான இன்னல்கள் வந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளி, தனித்து வாழ்வதை தவிர்த்து, இணைந்து, இன்புற்று, ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய இயேசுவின் பணியாளர்களாய், ஒருவர் மற்றவரை தாங்கக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக்கிட இறையருளை வேண்டுவோம்.

Photography Topics with Pictures...
Photography Topics: 1. Street Photography: 2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...