ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...(28.02.2022)

 வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...




    நாம் இந்த உலகத்தில், தகுந்த தயாரிப்போடு, தகுந்த முறையில், ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் போது மட்டுமே நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும். 

    ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்காமல், வெறுமனே கடமைக்காக, பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்று, நாம் வழிபாடுகளிலும் அறச் செயல்களிலும் ஈடுபடுபவர்களாக இருந்தால், கண்டிப்பாக நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும், என்று கூறினாராம். இன்றைய நாள் வாசகத்திலும் கூட நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள ஒருவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். கட்டளைகளைக் கடைபிடி என்றார். கடைபிடிக்கிறேன் என்றான்.

    ஆனால் உன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற போது, அந்த அறச்செயல்களில் ஈடுபட அவனது மனம் இடம் கொடுக்காததால், அவன் திரும்பிச் சென்று விட்டான். இன்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கற்பித்த இறையாட்சியின் விழுமியங்களை, வாழ்வில் பின்பற்றத் தயங்குகிறோம். அதனை செயல்படுத்துவதற்கு மனம் இல்லாதவர்களாக இச்சமூகத்தில் பயணிக்கிறோம். 

    ஆண்டவரது வார்த்தைகளை இச்சமூகத்தில் செயலாக்கப்படுத்த இயலாத போது, நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்ற பாடம் இன்று நமக்குத் தரப்படுகிறது. ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம். நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...