சனி, 12 பிப்ரவரி, 2022

பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு 13. 02. 2022

 பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு 13. 02. 2022



திருப்பலி முன்னுரை


இறை இயேசுவில் அன்பு நண்பர்களே! உங்கள் அனைவரைம் இந்த கல்வாரி திருப்பலியில் பங்கேற்க அன்புடன் வரவேற்கின்றேன்.

இன்றைய வாசகங்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்புவிடுக்கின்றன. இன்றைய முதல் வாசகம் வழியாக மனிதர் மீது நம்பிக்கை கொண்டோர் பாலைநிலத்துப் புதர் செடிக்கும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் பசுமையான மரத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றனர். உயிர்த்த ஆண்டவரிடம் கொண்ட நம்பிக்கையே தொடக்க கால கிறிஸ்தவர்கள் மற்றும் இயேசுவின் சிடர்கள் என அனைவரைம்  துணிNவுhடு இயேசுவின் உயிர்ப்பை அனைவருக்கும் எடுத்துரைக்க வைத்தது. இப்பணியில் தடைகள் பல எழுந்தாலும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் துணிந்து செயல்பட இறைவன் நமக்கு இன்றைய நாளில் அழைப்பு விடுக்கின்றார். 

அழைக்கும் இறைவனது குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நம்பிக்கையோடு  நிலைவாழ்வை உரிமையாக்கிட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்...


மன்றாட்டுக்கள்:


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்._


1. அன்பே உருவான  இறைவா! உமது நற்செய்திப் பணியை ஆற்றிவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் அனைவரும் உமது இறையாட்சியை இம்மண்ணில் கட்டியெழுப்பத் தேவையான ஞானத்தைத் தந்து உடனிருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. நல்வழியில் எம்மை நடத்துபவரே எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், சுயநலம் பாராமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தரும் சிறந்த திட்டங்களை பயனுள்ள வகையில் நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதார நிலையில் மென்மேலும் வளரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. ஆற்றலின் ஆண்டவரே எம் இறைவா! உலக நாடுகளில் அன்பும், அமைதியும், நீதியும் நிலைத்திடவும், மக்கள் யாவரும் நலமும் வளமும் பெற்று சகோதரத்துவத்துடன், உம் அன்புப் பிள்ளைகளாக வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. அன்பின் இறைவா! இயேசு கொண்டு வந்த அன்பு, சமாதானம் எங்கள் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் குடும்பத்திலும் சமூகத்திலும் பங்குத்தளத்திலும் நிலவிட வேண்டுமென்று செபிக்கின்றோம். மேலும் அன்பும், ஆறுதலும் கிடைக்காமல் ஏங்கிடும் மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்திடும் கருவிகளாக நாங்கள் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...