திங்கள், 14 பிப்ரவரி, 2022

நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்ற... (15.02.2022)

நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்ற... 

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



    நம்பிக்கை என்பது அனைவர் மனதிலும் ஆழமாக இருக்கவேண்டிய ஒன்று. நம்பிக்கைதான் நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

    இயேசுவுடன் பயணித்திருந்தாலும், இயேசு செய்த பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டிருந்தாலும் கூட, சீடர்கள் அவர் மீது ஆழமான, அழுத்தமான நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள் என்பதை அவ்வப்போது அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் மூலம் நாம் கண்டுகொள்ள முடியும். 

    அவைகளுள் ஒன்றாகத்தான் இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகமும் அமைந்திருக்கின்றது. எத்தனையோ புதுமைகளை அவரிடமிருந்து கண்ட அவர்கள், தங்களுக்கு உணவு இல்லை என வருந்துவதை இயேசு சுட்டிக் காண்பிக்கிறார். தன்னோடு இருந்து தன்னோடு பயணிக்கின்றவர்கள், தன்னை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையே என்பதை சுட்டிக் காட்டுகின்றார். 

    நாமும் அனுதினமும் ஆண்டவரின் இறைவார்த்தையை கேட்கிறோம். அவரது வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென கற்பிக்கப்படுவதை கேட்கிறோம். ஆனால், வாழ்வில் செயலாக்கப்படுத்துகிறோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். 

    மன மாற்றத்தை உருவாக்கிக் கொள்வோம். ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்றும் உண்மைச் சீடராகிட இறை அருள் வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...